அம்மான்னா சும்மாவா?

Sunday, September 30, 2007

கயவன் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்

ஹிந்துஸ்தானத்தின் தலைமை நீதிமன்றத்தில் இருக்கும் நீதிமான்கள் பந்திற்கு தடை விதித்த போதும் தமிழகத்தில் பந்த் நடத்தும் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியை உடனே 356ஆம் விதியின் கீழ் டிஸ்மிஸ் செய்யுமாறு ராஷ்டிரபதியை வேண்டுவோம். நண்பர்களே 80 கோடி ஹிந்துகளுக்கு இருக்கும் சக்தியை காண்பிக்கும் நேரம் வந்து விட்டது.

ஜெய் ஸ்ரீராம்.

Thursday, September 27, 2007

சபாஷ் வேதாந்தி

பாரதத்தை காக்க வந்திருக்கும் புதிய பரமாத்மா டாக்டர் ஸ்ரீ வேதாந்தி அவர்களின் பேட்டி.



வேதாந்தி: ஜெய் ஸ்ரீராம்! யார் பேசறது?

ஜூ.வி: வணக்கம், வேதாந்திஜி! நான் சென்னையிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் பத்திரிகையின் நிருபர் பேசுகிறேன்.

வேதாந்தி: சொல்லுங்க என்ன கேட்கப் போறீங்க?

ஜூ.வி: ஒரு சாதுவாக இருந்தும் தமிழக முதல்வர் பற்றி இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கிறீர்களே..?

வேதாந்தி: தெய்வமான ராமரை கருணாநிதி இழிவாகப் பேசியது குறித்து அயோத்தியில் சாதுக்களின் சபை கூடி ஆலோசித்தது. அப்போது, இந்துக் கடவுள்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கழுத்தை அல்லது நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்று பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். இதை சாதுக்கள் ஏற்றுக்கொண்டதன் பேரில்தான் அதை வெளி யிலும் சொன்னேன். அதனால் தமிழகத்தில் வன்முறை வெடித்தால் நான் என்ன செய்யமுடியும்? வன்முறைகளில் சாதுக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீண்டும் சாதுக்கள் என்னைத் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதால், நான் முதலில் கூறியதை வாபஸ் வாங்கினேன்.

ஜூ.வி: ஆக, இதை மீடியா திரித்துப் போடவில்லை. நீங்கள் முதலில் கருணாநிதி பற்றி கூறியது உண்மை. அதை இப்போது வாபஸ் வாங்குகிறீர்கள். அப்படித்தானே?

வேதாந்தி: அப்படித்தான்! கருணாநிதி பற்றி நான் சொன்னதாக வந்த செய்திகள் உண்மைதான். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. கருணாநிதி வெளியிட்டவை மன்னிக்க முடியாத கருத்துக்கள். ஒருவனின் தாயையோ சகோதரியையோ அவன் கண்முன்னே யாராவது கற்பழித்தால், அவனால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது போலத்தான் ராமரை இழிவாகப் பேசுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. இப்படி யார் கூறினாலும் அவருக்கு உயிருடன் இருக்கவும் அதிகாரம் இல்லை. இதை காதால் கேட்ட பிறகு அவரை ஒன்றும் செய்யாமல் சும்மா விடவும் எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், என்ன செய்வது, ஜனநாயக நாட்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ வேண்டியது கடமையாயிற்றே... அதனால்தான் இன்று கருணாநிதி மேல் வழக்குப்பதிவு செய்ய பைசாபாத் நீதிமன்றத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன். ஆனால், கருணாநிதி ராமரைப் பற்றி ‘சோம பானம் அருந்தியவர்’ என்று அடுத்தபடியாகவும் ஒரு விமர்சனம் செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். நான் டாக்டர் பட்டம் வாங்கியதே ராமாயணத்தை ஆராய்ச்சி செய்துதான். இதுகுறித்து கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். ஒருவர் மீது பழிபாவம் சொல்லுபவர்கள்தான் அந்த நினைப்போடே இருக்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஜூ.வி: நீங்கள் இந்தக் கருத்தை நிதானமாகத்தான் பேசுகிறீர்களா, உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்களா?

வேதாந்தி: நிதானமாக யோசித்துதான் கூறுகிறேன். இதற்கு முன்பும் நிதானமாகத்தான் கூறினேன்.

ஜூ.வி: இந்த விஷயத்தில் பி.ஜே.பி. உங்களைத் தனிமைப்படுத்திப் பேசுகிறதே?

வேதாந்தி: அது ஒரு அரசியல் கட்சி. தன் வழியில் போகிறது. அதற்காக நான் அவர்களைத் தவறு சொல்லவில்லை. நான் என் தர்ம சாஸ்திரப் பணிகளைச் செய்கிறேன். இதே கருணாநிதியுடன்தானே அவர்கள் முன்பு கூட்டணி வைத்திருந்தார்கள்?

ஜூ.வி: ஆனால், அவர்கள் கட்சி சார்பில் தானே நீங்கள் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்தீர்கள்?

வேதாந்தி: உண்மைதான். அவர்கள் ராமரைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை எதிர்த்து தங்கள் வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். நான் என் வழியில் எதிர்க்கிறேன். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

ஜூ.வி: தற்போது ராமசேதுத் திட்டம் வேறு உருவில் அமல்படுத்தப்படலாம் என ஒரு பேச்சு அடிபடுகிறதே?

வேதாந்தி: அதை எந்த உருவில் வேண்டு மானாலும் அமல்படுத்திக்கொள்ளட்டும். இதனால், ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் வரக்கூடாது. அப்படி சேதப்படுத்துகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை விடமாட்டேன். அவர்களுக்கு நானே தூக்கு தண்டனை(?!) தருவேன். கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் ராமர் பாலத்தைத் தகர்க்க முயல்கிறார்கள். நாங்கள் இருக்கும்வரை அது மட்டும் நடக்க விடமாட்டோம். இதை எதிர்த்து நாடு முழுவதும் இன்னும் பல போராட்டங்கள் நடத்த உள்ளோம். ஜெய்ஸ்ரீராம்!
(நன்றி ஜூனியர் விகடன்)

தான் சார்ந்து இருக்கும் கட்சியே அவரை ஒதுக்கினாலும் சற்றும் தயங்காமல் தன் கருத்துகளை வெளியிட்ட அவரை வணங்குவோம். அவர் தொடங்கிய புனித பயணத்தில் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் உண்மையான ஹிந்துக்கள் அனைவரும் இணைவோம். உங்களால் நேரடியாக ஈடுபட முடியாவிட்டால் தங்கம் வாங்குவதற்காக உங்களின் பங்களிப்பை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

Doctor Shri. Ramvilas Vedanti,
Vishva Hindu Parishad,
Sector - 6,
Rama Krishna Puram,
New Delhi, Bharat (INDIA)-110022
Fax 00-91-11-26195527, 26178992
Phone 00-91-11-26161369, 26103495, 26178992

உரையின் மீது தவறாமல் "ஸ்ரீராம சேது தலை நிதி" என்று குறிப்பிடவும். காணிக்கை அனுப்பியவர்களுக்கு ஸ்ரீராமர் பாதம் பட்ட ஸ்ரீராம சேதுவின் மணல் பத்து கிராம் அனுப்பி வைக்கபடும். மேலும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஸ்ரீராமரின் அனுக்கிரகம் உண்டாகும்.


ஜெய் ஸ்ரீராம்.

Tuesday, September 25, 2007

கிரிக்கெட்டும் ஜிகாதிகளும்

சில நாட்களுக்கு முன் ஸ்ரீமகா கணபதியின் துணையுடன் 20/20 உலக கோப்பையினை ஹிந்துஸ்தானம் வென்றது உங்களுக்கு எல்லாம் பெரு மகிழ்ச்சியை தந்திருக்கும். நாடு முழுவதும் அந்த வெற்றியினை கொண்டாடாடி வருகின்றனர் நம் செல்வங்கள். அதை கண்டு பொறுக்க முடியாத ஜிகாதிகள் ஹிந்துக்களை பல இடங்களில் தாக்கி உள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ராஜூரியில் இந்து அமைப்பு சார்பில் வெற்றி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த மசூதி ஒன்றில் பட்டாசு கொளுத்தி போட்டனர். இதில் 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது. அப்போது கலவரகாரர்கள் கல்வீசியதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.

அசாம் மாநிலம் போகர்பரி அடுத்த சபட்கிராம் பகுதியில் இந்து அமைப்பினர் இந்திய வெற்றியை கொண்டாடி னார்கள். இதற்கு அப்பகுதியை சேர்ந்த இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்புக்கும் கலவரம் ஏற்பட்டது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 20 பேர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடந்தது.

உத்தரகாண்டம் மாநிலம் உத்தம்சிங் நகரில் நடந்த இந்திய அணி வெற்றி ஊர்வலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் கர்னூரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய அணி வெற்றியை கொண்டாடி னார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள மசூதியில்
பட்டாசு கொளுத்தி போட்டனர். இதனால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.

மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும், மத்திய ஆட்சி புரியும் மெய்னோவும் இருக்கும் காரணத்தினால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது. ஸ்ரீராமர் துணையுடன் இவர்களை விரைவில் விரட்டி அடிப்போம்.

ஜெய் ஸ்ரீராம்.

Monday, September 24, 2007

பாரதமே .......

தட்ஸ்தமிழ் இணைய பக்கத்தில் படித்த ஒரு செய்தி ரத்தகண்ணீர் வடிக்க வைக்கின்றது.


சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதற்காக விழா எடுக்க நினைத்த கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் 100வது நாளில் மண் சோறு சாப்பிடுவதாக பல கோவில்களில் பிராத்தனை செய்துள்ளனர்.


அதன்படி கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் டிசி மதன், குபேரன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். ரஜியின் கட் அவுட்டிற்கு ஊதுபத்தி சூடம் காட்டி வழிபட்டனர். பெரிய மாலை அணிவித்தனர். கட்அவுட்டில் கால் படாதபடி ஏணி வைத்து ஏறி பால் அபிஷேகம் செய்தனர். ரஜினி மன்றத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கொடி அறிமுகம் செய்தனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.


இதன் உச்சகட்டமாக ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மண் சோறு சாப்பிட்டனர். மண் சோறு சாப்பிடுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.


பாரதமே ஸ்ரீராம சேது விஷயமாக கொந்தளித்து கொண்டு இருக்கும் போது இப்படியும் சில பிறவிகள். இப்படிபட்ட பிறவிகள் இருப்பதால்தான் ஸ்ரீராமர் இருந்தாரா என்று கேட்கும் நிலை உள்ளது. எனவே 80 கோடி இந்துக்களும் தம் குடும்பத்தாரை நல்வழிபடுத்த தினமும் 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவோம்.


ஜெய் ஸ்ரீராம்.

அடிமுட்டாள் பாலு

பாலு என்கிற திம்மி ஸ்ரீராமசேதுவை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சாய் ஈடுபட்டு வருகின்றான். ஏற்கனவே அவன் தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்த ஆதாரங்களை கொளுத்திவிட்டான் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். அதை பற்றி நான் எழுதிய பதிவு இது.


இப்போது இந்த கயவன் புது கதையை அவிழ்த்து விடுகின்றான். மெய்னோவின் அரசு முழு பாலத்தையும் இடிக்காதாம். சுமார் 300 மீட்டர்தான் இடிக்க போகின்றார்களாம். நண்பர்களே கடலின் மீது ஒரு பாலம் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அதுவும் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் கட்டிய பாலம் இது. எந்த ஒரு கட்டிடமும் காலத்தினால் பழுதாகும். ஸ்ரீராமர் எழுப்பிய பாலமானாலும் அவருக்கும் வருண பகவானுக்கும் இருந்த மன வருத்தத்தினால் இப்பாலம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்துள்ளது.

எந்த பாலத்திலும் ஒரு பகுதி இடிந்தால் முழு பாலமுமே கீழே விழுந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பாலம் அவ்வாறு இடிந்து விழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஆகவே நண்பர்களே 17,50,000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய ஒரு பழமை வாய்ந்த சரித்திர பாலத்தில் 300 மீட்டர்களை இடித்தால் அந்த பாலம் என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு பகுதியை இடிக்கும்போது மொத்த பாலமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல கிலோமீட்டர் நீளம் உள்ள பாலம் இடிந்து விழுந்தால் கண்டிப்பாக சுனாமி ஏற்படும். தென் இந்தியாவே அந்த சுனாமியில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக NASA செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் 300 மீட்டர் என்பார்கள். பிறகு 3000 மீட்டர் இடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். அரசியல் திம்மிகளின் நிலை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். ஆகவே ஸ்ரீராம சேதுவில் இருந்து ஒரு இஞ்சை கூட இடிக்க விடமாட்டோம் என்று 80 கோடி இந்துக்களும் உறுதி எடுப்போம். மேலும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் ஆட்களால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவரும் தமிழக பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான தமிழிசைக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் விதமாக பிரார்த்தனை செய்வோம்.

ஜெய் ஸ்ரீராம்.

Saturday, September 22, 2007

ஸ்ரீராம பக்தர்களுக்கு

அன்பர்களே பிரச்சனை ஸ்ரீராம பக்தர்களுக்கும் கயவன் கருணாநிதிக்கும்தான். நாம் அனைவரும் போராடுவது ஸ்ரீராம சேதுக்காக என்பதை நினைவில் வைத்து இருங்கள். படித்த மேதாவிகள் சிலர் புத்தரில் ஆரம்பித்து திருவள்ளுவர் வரை இந்த விஷயத்தில் இழுக்கின்றார்கள்.

நாம் புத்த சேதுவுக்கோ, கண்ணகி சேதுவுக்கோ போராடவில்லை. நம் குறிக்கோள் ஸ்ரீராமர் எழுப்பிய சேதுவை காப்பாற்றுவதே. எனவே ஒற்றுமையாக இருந்து வெற்றி கிட்டும் வரை போராடுவோம்.

ஹிந்துக்கள் என்றாலே தயிர் சாதம் சாப்பிடும் கோழைகள் என்று நினைத்து இருந்தவர்களுக்கு மரண அடி கொடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான ஸ்ரீராம்விலாஸ் வேதாந்தி அவர்களை பாராட்டுவோம். பத்வா போடும் உரிமை முகமதியர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன? எங்களாலும் போட முடியும் என்று நிரூபித்த அவர் பல்லாண்டு காலம் வாழ்க.

ஜெய் ஸ்ரீராம்.

Thursday, September 20, 2007

அரிதார திம்மியின் உண்மை முகம்

தமிழகத்தில் புதிய திம்மி அரிதாரம் பூசி வந்திருக்கிறது என்று அப்போதே எச்சரித்தேன். ஹிந்துஸ்தானத்திற்காக பல்லாயிரம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை அளித்து இருக்கின்றனர். அவர்களை கேவலபடுத்தும் விதமாக இந்த திருடனை கேப்டன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர் மூத்த பதிவர்கள். ராமசாமி நாயக்கன் சதுர்த்தி அன்று அவனின் படத்திற்கு பூ அள்ளி போட்ட போதாவது இவனை பற்றி நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்பினேன்.




ஹிந்துஸ்தானமே கொந்தளிக்கும் ஸ்ரீராம சேது பிரச்சனையில் இவன் எப்படி மூக்கை நுழைக்கின்றான் என்று பாருங்கள். மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவன் வீட்டில் கல் விழுந்ததற்காக இப்படி குரைக்கும் இந்த நாய் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தி கோவிலை காக்க உயிர் நீத்த பல் ஆயிரம் ஸ்ரீராமபக்தர்களுக்காக என்ன செய்தான்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் சேது பாலம் பற்றி முதல்வர் கருணாநிதி, தனது கருத்தை தெரிவித்தார். அதற்கு நேர்மாறான கருத்து கொண்டவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம் அல்லது ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு பெங்களூருவில் முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், பெங்களூருவில் இருந்து சென்னை வந்த பஸ்சை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி காட்டுமிராண்டித் தனமான செயல்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தமிழகமும், கர்நாடகமும் தனித்தனி நாடு போல் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது அரசியலுக்கு அவரது உறவினரை சம்பந்தப்படுத்தி கலவரம் செய்யும் அராஜக போக்கு எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. ஒரு சிலர் ஈடுபடும் இத்தகைய நடவடிக்கைகளால் வகுப்பு ஒற்றுமையும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வும், இந்திய ஒருமைப்பாடும் கேள்விக்குறியாவதால் அத்தகையோர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கர்நாடக அரசை கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவங்களால் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், நடுவழியில் துன்பத்திற்கு ஆளான பயணிகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக மனிதாபிமான அடிப்படையை சீர்குலைக்கும் மதவெறி அரசியலை ஒரு போதும் தே.மு.தி.க., அனுமதிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே காவிரி பிரச்சனையில் பாரத ஒற்றுமையை குலைக்கும் விதமாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் கன்னட மக்களை மிரட்டிய காட்டுமிராண்டி இவன் என்பது உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஜெய் ஸ்ரீராம்.

Tuesday, September 18, 2007

கொலைஞரின் கபட நாடகம்

பாரத மக்கள் எப்போதும் அஹிம்சாவாதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை திம்மிக்கள் சீண்டினாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தன் வழி தனி வழி என்று செல்வார்கள். அதிலும் முக்கியமாக ஹிந்து மதத்தை உலகம் எல்லாம் பரப்பி வரும் பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர். எஸ். எஸ் போன்ற அமைப்பினரின் நற்குணங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை இந்த ஸ்தாபனங்களுக்கு வழங்க அந்த குழுவினர் தீர்மானித்து இருந்தனர். ஆனால் மெய்னோ வாடிகன் தொடர்பின் மூலம் அதை தடுத்து நிறுத்தி விட்டார்.

அமெரிக்க விண்வெளி அமைப்பு பாரதத்தையும் ஸ்ரீலங்காவையும் இணைப்பது ஸ்ரீராமர் எழுப்பிய பாலம்தான் என்று தெளிவாக சொல்லி விட்டது. இக்கருத்தை சோவியத் ரஷ்யாவும், பிரான்சும், சீனாவும் அங்கீகரித்து விட்டன. பிரிட்டீஷ் ராணி அது ஸ்ரீராமர் எழுப்பிய பாலம்தான், கிருத்துவ மிஷினரிகள் அதை ஆதம் பாலம் என்று பெயர் மாற்றிவிட்டனர் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை விரைவில் அறிவிக்க இருக்கின்றார் என்று பக்கிங்காம் அரண்மனை தகவல்கள் கூறுகின்றன. அனால் இந்த திம்மிக்கள் இன்னும் அது மணல் மேடு என்று குரைத்து கொண்டு இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இருக்கும் உண்மையை அறிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் ஸ்ரீராம சேதுவை அழிக்க கூடாது என்று தடை விதித்து விட்டது. அதை கண்டு பொறுக்க முடியாத கயவன் ராமர் இல்லை, ராமர் தொழில் கல்வி படித்தாரா என்று கேள்வி கேட்டு உள்ளான். இதற்கு இடையே பெங்களூருவில் உள்ள கயவனின் மகள் வீட்டில் கல்வீச்சும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதை செய்தவர்கள் ஸ்ரீராம பக்தர்கள் என்று ஒரு அபாண்டமான பொய்யை அவிழ்த்து விட்டு உள்ளனர். குண்டு வீசியது கயவனின் மதுரை மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இது அவர்கள் குடுமபத்தில் நடக்கும் சண்டையின் விளைவாக எழுந்தது என்பதையும் அனைவரும் அறிவர்.

அதேபோல தமிழக பஸ் ஒன்றையும் ஒரு கும்பல் கொளுத்தி உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவும் கொலைஞரின் கைவண்ணம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஸ்ரீராம பக்தர்கள் ஒரு போதும் இது போன்ற வன்முறையில் இறங்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதுபோன்ற வன்முறை செயல்களை தூண்டிவிடும் கயவன் கருணாநிதியையும், அவன் குடும்பத்தையும் தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்.

ஜெய் ஸ்ரீராம்.

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஸ்ரீ இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சிறுவயதில் இருந்து உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சில செய்தி ஊடகங்களில் வருவதுபோல், ஆர்.எஸ்.எஸ். வன்முறை செயல்களில் ஈடுபடாது. அதுவும் தற்போது பெங்களூரில் நடந்த வன்முறை செயலில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை.
இதைப் போன்ற வன்முறை செயல்களில் ஆர்.எஸ்.எஸ். என்றும் ஈடுபடாது.

Sunday, September 16, 2007

இன்ப அதிர்ச்சி தந்த அம்மா

உலகத்தின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி அவ்வப்போது திம்மிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அம்மாவை யாரும் சென்று பார்க்க முடியாது, சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று பலவகை பொய்களை அவிழ்த்து விடுவர். இந்த பொய் முகங்களை அடியோடு வேர் அறுத்து விட்டார் அம்மா.

ஓய்வு எடுக்க நீலகிரி கொடநாடு எஸ்டேட் இல்லத்திற்கு செல்ல, சென்னை விமான நிலையம் வந்த அம்மா அவர்கள், அங்கு நின்றிருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 1.55 மணிக்கு வந்த அம்மா அவர்கள், பாரமவுன்ட் விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலா, இளவரசி, பாதுகாப்பு அதிகாரி முத்துமாணிக்கம், உதவியாளர்கள் லட்சுமி, தேவி ஆகியோர் சென்றனர். கோவை செல்லும் அம்மா அங்கிருந்து கார் மூலம் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு, 10 முதல் 15 நாட்கள் வரை ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.சென்னை விமான நிலையத்தில் அம்மாவின் கார் வந்தபோது அங்கு அ.தி.மு.க., கட்சி உறுப்பினர் ஆதிகேசவனுடன் அவரது பேத்தி ஜெயஸ்ரீ என்ற சிறுமி கையில், "பொக்கே'வுடன் நின்று கொண்டிருந்தாள். கார் அவர்கள் அருகே வந்தவுடன் நின்றது. கண்ணாடியை இறக்கிய அம்மா அந்த சிறுமியை அருகில் அழைத்தார். சிறுமியிடம் பெயரை கேட்டார். தன் பெயரை கூறிய அச்சிறுமி, "நானும் சர்ச் பார்க் கான்வென்டில் தான் படிக்கிறேன்,' என்றார். அதைக்கேட்டவுடன் அம்மா கலகலவென சிரித்து விட்டார். பின்னர், பொக்கேயை வாங்கிக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

சிறுமியுடன் நின்றிருந்த ஆதிகேசவன் கூறுகையில், "தற்செயலாக பேத்தியுடன் விமான நிலையம் வந்தோம். அம்மா வருவது தெரிந்ததும், "பொக்கே' உடன் விமான நிலைய வழியில் நின்றோம். அம்மா எங்கள் அருகே காரை நிறுத்தி, "பொக்கே' வாங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர், எங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

ஏழை எளிய மக்களை அவரே அழைத்து உரையாடி மகிழ்ந்ததை கண்ட பிறகாவது அந்த திம்மிக்களுக்கு சித்தம் தெளியும் என்று நம்புவோம்.

வாழ்க அம்மா. வளர்க அவரின் புகழ்.

Saturday, September 08, 2007

இது நியாயமா லக்கிலுக் அவர்களே?

அன்பு பதிவர்களே. என்னுடைய வலைப்பூவை கைப்பற்ற சதிவலை பின்னப்படுகிறது.


மைனாரிட்டி அரசாட்சி புரியும் கயவனின் பூத் ஏஜண்டான லக்கிலுக் என்பவர்தான் இலைக்காரன் என்ற பெயரில் எழுதுகிறார் என்று முதலில் வதந்தி பரப்பினார்கள். பிறகு தொடர்சியாக லக்கிலுக் அவர்கள் என் பதிவில் பின்னூட்டமும், பின்னூட்ட கயமைதனமும் செய்து வந்தார்.

இப்போது பார்த்தால் என் வலைப்பூ ஸ்பாம் மூலம் தடை செய்யப்பட்டு விட்டது என்று நான் எழுதும் ஸ்டைலில் அவர் ஒரு பதிவு எழுதியுள்ளார்.


லக்கிலுக் அவர்களே நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். தயவு செய்து என்னுடைய வலைப்பூவை ஹைஜாக் செய்ய வேண்டாம்.

பின்குறிப்பு : நான் யாருக்கும் எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. லக்கிலுக் அவர்களின் பதிவை பார்த்து எனக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் கோடி.

Thursday, September 06, 2007

கொலைஞர் செய்த படுகொலை

பாரத தேசத்தின் பல கலை படைப்புகளை கண்டு அகில உலகமே வியந்து போற்றுகிறது. திம்மிக்களால் சீரழிந்த மதராஸ் கலை உலகில் அவ்வப்போது நல்ல படைப்புகள் வெளிவரும். நல்ல கலைஞர்களை போற்றினால் கலைமகள் உற்சாகம் அடைந்து நம்மை வாழ்த்துவார் என்பது ஐதீகம்.

ஆனால் இங்கே நடப்பது என்ன?. அரசியல் காரணங்களுக்காக இந்த கயவன் தனக்கு ஆதரவாக உள்ள சிலருக்கு பட்டம் கொடுத்து உண்மையான கலைஞர்களை கேவலப்படுத்துகிறான். இந்த கொடுமையான செய்தியினை பார்த்த கலைமகள் நிச்சயம் வேதனை அடைந்து இருப்பார்.

போர்வைக்குள் புகுந்து கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசிய ஒருவன் சிறந்த நடிகராம். என்ன கொடுமை சார் இது?

வாழ்க உண்மையான கலைஞர்கள். வீழ்க அரிதாரம் பூசிய போலிகள்.

Tuesday, September 04, 2007

மதிமூடனின் மடத்தனம்

பாரத மக்களின் அறிவியல் ஆற்றல் உலக புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். பல யுகங்களுக்கு (பல லட்சம் ஆண்டுகளுக்கு) முன்பே பாரத மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உலக புகழ் பெற்ற பல பொறியாளர்கள் கடலின் மீது பாலம் கட்டிய வரலாறு நமக்கு உண்டு. மேலும் உடல் உறுப்புகளை மாற்றி அமைத்து மருத்துவ சாதனை புரிந்தவர் நம்மவர். இப்படி பாரம்பரிய வைத்திய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்ற நம்மிடையே கரையான்கள் போல கிருத்துவ மெஷினிரிகள் புகுந்தனர். ஏதோ அவர்களுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது போல காட்டுவதற்காக ஆங்காங்கே மருத்துவமனைகளை ஆரம்பித்து மக்களை மதமாற்றம் செய்ய முற்பட்டனர்.

அதை கடுமையாக நம்மவர் எதிர்த்ததால், ஜாதி என்ற கொடிய விஷநோயை நம்மிடையே அந்த பரங்கியர் பரப்பி விட்டனர். மேலும் நல்ல தகுதி பெற்ற நம்மவர் மருத்துவ உலகில் முன்னேறுவதை தடை செய்ய முற்பட்டனர். முதல் காரியமாக நம் இறைவன் நமக்கு அருளிய சமஸ்கிருதத்தினை மருத்துவ உலகில் இருந்து அகற்றினர். அவர்களுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த திம்மிக்கள் படிப்படியாக இட ஒதுக்கீடு என்ற கொடிய நோயை புகுத்திவிட்டனர். இதனால் தகுதி, திறமை சற்றும் இல்லாத மனிதர்கள் கூட மருத்துவர்களாக ஆகும் வாய்ப்பு உருவாகி விட்டது.

அப்படி பின்புறமாக நுழைந்து மருத்துவம் படித்த ஒரு மதிமூடன் வாடிகன் ஆசியுடன் மத்திய மந்திரி ஆகிவிட்டான். சரி போகட்டும் என்று பார்த்தால் உலக புகழ் பெற்ற மருத்துவ மாமேதையாக ஸ்ரீ வேணுகோபாலுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டான். அதை கண்டு பொறுக்க முடியாத நம் நீதிமான்கள் அவனின் கைகளை கட்டி போட்டு உள்ளனர். கை கட்டி இருப்பினும் தன் வாலை ஆட்ட ஆரம்பித்து விட்டான் இந்த கயவன்.

கிராமப்புர மக்கள் பல தலைமுறைகளாக நாட்டு வைத்தியம் என்ற பாரம்பரிய கலையின் மூலம் பயன் அடைந்து வந்தனர். இப்போது அதை ஒழிக்கும் செயலாக மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒரு ஆண்டு கிராமங்களுக்கு சென்று சேவை ஆற்ற வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து விட்டான். மருத்துவ சேவை என்பது ஒரு மாயத் தோற்றம். பல யுகங்களாக நம்மிடையே புகழ் பெற்ற வேப்பிலை மருத்துவம், பால் குட மருத்துவம், அலகு குத்தும் (acupuncture) மருத்துவம் போன்றவற்றை அழிக்கும் செயல் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பல லட்சம் செலவு செய்து மருத்துவம் படிக்கும் நம் மாமணிகள் ரூ எட்டாயிரம் வாங்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டுமாம். இது என்ன அநியாயம் பாருங்கள். நல்ல மாணவ மணிகள் மருத்துவ படிப்பை படிப்பது இல்லை என்று வேதனை பட்டு வலைஉலக கிருபானந்த வாரியார் ஆகிய ஸ்ரீ உண்மை தமிழன் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். இப்படி படிப்படியாக மருத்துவர்களை விரட்டினால் நாடு எந்த நிலைமைக்கு போகும் என்பதை யோசியுங்கள். எனவே 80 கோடி ஹிந்துக்களும் போராடும் நம் கண்மணிகளுக்கு அதரவு தெரிவிப்போம்.

வாழ்க மருத்துவர்கள். வீழ்க மதிமூடன்கள்.

Monday, September 03, 2007

ஓசை செல்லாவிற்கு ஒரு "நச்" கேள்வி

ஓசை செல்லா அவர்களே,

உங்களின் பதிவுகளை படித்து வருபவன் நான்.

ஒரு இணைய நாடோடி
காமிரா நிபுணர்
வலைபதிவாளர்
பல வலைப்பூ படைப்பாளர்
இடஒதுக்கீட்டு போராளி
கம்யூனிஸ்ட்
பெரியாரிஸ்ட்
ஒஷோயிஸ்ட்
Web Media Consultant
என்று பல முகங்களை தமிழ் பதிவர்களுக்கு காட்டி வந்த நீங்கள் கடைசியாக நான் ஒரு "தலித் கம்மனாட்டி" என்று புலம்பி, வலைபதியமாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓடுவது ஏன்?

இது ஒரு Marketing Gimmickஆ?

அல்லது

இப்படி ஓடுவதுதான் சரியான செயல் என்று பெரியாரும், ஓஷோவும் உங்களுக்கு கற்று கொடுத்தார்களா?

தடாலடியாக பல வலைபதிவுகள் இட்டு மற்றவர்களை தட்டி கேட்ட நீங்கள், இப்படி ஓடி ஒளிவது கேவலமாக இருக்கின்றது. அதை விட, சொல்லிய காரணம் மிகக் கேவலம்.

Sunday, September 02, 2007

வாழ்க! வாழ்க!

ஸ்ரீராமரால் கட்டப்பட்ட ராம சேதுவை காப்பாற்ற மனித உருவில் எழுந்தருளி இருக்கும் இந்த மெருமகன்களை 80 கோடி இந்துக்களும் இரு கரம் கூப்பி வணங்குவோம்.





கூனியும், சகுனியும் இணைந்து செய்யும் சதி வேலையை முழுவதுமாக தடுத்து நிறுத்துவார்கள் என நம்புவோம்.


ஜெய் அகர்வால். ஜெய் நௌலேகர்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za