அம்மான்னா சும்மாவா?

Saturday, October 04, 2014

அம்மா அம்மாதான்

உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய எங்கள் அம்மாவை வீழ்த்திவிட்டதாக கனவு காண்கின்றனர் இந்த திம்மிக்கள். இது ரோம் நாட்டின் சதி என்பது எங்களுக்கு தெரியாதா? கருணாநிதியின் தூண்டுதல் காரணமாக அன்டோனியோ மெய்னோ வாடிகன் மூலம் குண்ஹாவிற்கு கொடுத்த அழுத்தம் நாங்கள் அறியாததா?


அம்மாவிற்கு அளிக்க பட்ட தண்டனையை கண்டு பல கோடி ஹிந்துக்கள் வேதனை அடைகின்றனர். நேற்று வரை கருணாநிதியின் அல்லக்கையாக கூவிய லக்கி இன்று அம்மாவிற்கு ஆதரவாக பதிவு இடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.


அம்மா சிறையில் உள்ளார் என்பதை கேள்விப்பட்ட ஆர்னால்ட் சிறையை தகர்த்து அம்மாவை வெளியில் கொண்டுவர ஆயுத்தம் ஆனார். தனி விமானத்தில் கிளம்ப இருந்த நிலையில் நம் திரைஉலக கண்மணிகள் நடத்திய ஆர்பாட்டத்தை கண்டார். இந்த வேலையை தமிழகத்தில் இருக்கும் இவர்களே முடித்து விடுவார்கள் என்று பயணத்தினை தள்ளிவைத்து விட்டார்.


66 கோடிக்காக சிறை சென்ற நம் அம்மாவின் தியாகத்தினை போற்றும் வகையில் நம் ஈழ நண்பர்கள் விரைவில் கிடைக்க போகின்ற ஈழத்திற்கு "அம்மா நாடு" என்று பெயர் வைக்க முடிவு செய்து உள்ளனர்.


வாழ்க அம்மா. வீழ்க குண்ஹா.

Monday, April 21, 2014

நாற்பதும் நமதே

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவின் பொற்கால ஆட்சியினை கண்டு வயிறு எரியும் திம்மிக்கள் பத்திரிக்கைகள் மூலம் பொய் செய்திகளை பரப்புகின்றனர். தயவு செய்து பத்திரிக்கை செய்திகளை நம்ப வேண்டாம். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டு அம்மாவிற்கு பெரும் வெற்றியை காணிக்கை ஆக்க சபதம் எடுப்போம். நாற்பதும் நமதே. அடுத்த பாரத பிரதமர் வருங்கால பாரத ரத்னாவாகிய நம் அம்மாதான். வாழ்க அம்மா. ஜெய் ஹிந்த்.

Wednesday, March 21, 2012

அம்மான்னா சும்மாவா

உலகின் ஒரே த‌ங்க‌தார‌கையான‌ ந‌ம் அம்மாவின் கால‌டியில் ச‌ங்க‌ர‌ன்கோவில் வெற்றியை காணிக்கையாக்குகிறோம். அம்மாவின் ந‌ல்லாசி பெற்ற‌ வேட்பாள‌ரை பெரும் வெற்றி பெற‌ வைத்த‌தின் மூலம் வாக்காளர்க‌ளுக்கு பெரும் புண்ணிய‌ம் கிட்டி உள்ள‌து.

எல்லா க‌ட்சிக‌ளையும் துண்டை கானோம் துணியை கானோம் என்று ஓட‌ வைத்து விட்ட‌ன‌ர் ந‌ம் வாக்காள பெரும‌க்க‌ள். வ‌ரும்கால‌த்தில் நாற்ப‌தும் ந‌ம‌தே. பார‌த‌த்தின் அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் ந‌ல்லாட்சி ந‌ட‌த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ குடிகார‌ன்.

Monday, March 19, 2012

இருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ அம்மாவின‌ ந‌ல்லாட்சியில் த‌மிழ‌க‌ம் பீடு ந‌டை போட்டு வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தாயின் ஆட்சி சிற‌ப்புக‌ளை க‌ண்டு அமெரிக்க‌ அமைச்ச‌ர் ஹிலாரியே விய‌ந்து போற்றினார்.

மைனாரிட்டி ஆட்சியின் கார‌ண‌மாக‌ த‌மிழ‌க‌ம் இருளில் மூழ்கிய‌து. ம‌க்க‌ள் சொல்ல‌ முடியாத‌ துய‌ர‌த்தில் வீழ்ந்த‌ன‌ர். த‌மிழ‌க‌ இருளை போக்கும் வித‌மாக‌ ந‌ம் நிர‌ந்தர‌ முத‌ல்வ‌ர் ம‌த்திய‌ அர‌சோடு போராடி கூட‌ங்குள‌ அணுமின் திட்ட‌த்தினை தொட‌ங்க‌ உத்த‌ர‌வு இட்டு விட்டார்.

கூட‌ங்குள‌த்தில் உற்ப‌த்தி ஆகும் மின்சார‌ம் அடுத்த‌ வார‌ம் முத‌ல் த‌மிழ‌க‌ம் எங்கும் விநியோக‌ம் ஆகும் என்று தெரிகின்ற‌து. என‌வே அடுத்த‌ வார‌ம் முத‌ல் ஒரு நிமிட‌ம் கூட‌ த‌மிழ‌க‌த்தில் மின்வெட்டு இருக்காது என்ப‌தை ம‌கிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன். மேலும் உப‌ரி மின்சார‌த்தினை வாங்க‌ ப‌க்க‌த்து மாநில‌ங்க‌ள் போட்டி போடுகின்ற‌ன‌ என்ப‌தாக‌ செய்திக‌ள் வ‌ந்துள்ள‌ன‌. அது மட்டும் இல்லாம‌ல் ந‌ம் அண்டை நாடுக‌ளும் அம்மாவிட‌ம் மின்சார‌ம் வேண்டி விண்ண‌ப்பித்து உள்ள‌தாக‌ கோட்டை த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் வாழ்வில் விள‌க்கேற்றிய‌ அம்மா அவ‌ர்க‌ளை 80 கோடி ஹிந்துக்க‌ள் சார்பில் வாழ்த்தி வ‌ண‌ங்குவோம்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ மின்வெட்டு.

ஜெ ஜெ ஜெ ஜெ

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையும் ஈழ‌த்தாயும் த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ரும் ஆகிய‌ ந‌ம் அம்மாவின் கோரிக்கையை ஏற்று நாடாள‌ம‌ன்ற‌த்தில் ஸ்ரீல‌ங்காவினை எதிர்த்து வாக்கு அளிப்போம் என்று ம‌ன்மோக‌ன்சிங் அறிவித்து உள்ளார்.

இது முத‌ல் ப‌டிதான். விரைவில் அம்மாவின் ந‌ல்லாசியுட‌ன் ஈழ‌ம் ம‌ல‌ரும்.

வாழ்க‌ அம்மா. ஜெய‌ம் ந‌ம‌தே.

Tuesday, February 07, 2012

இந்த‌ ப‌டை போதுமா

இந்த‌ ப‌டை போதுமா இன்னும் கொஞ்ச‌ம் வேணுமா என்பதை போல் உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் அறைகூவ‌ல் விட்டு உள்ளார். கூடிய‌ விரைவில் ந‌ட‌க்க‌ இருக்கும் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ இடைதேர்த‌லில் ந‌ம் கழ‌க‌ம் குறைந்த‌ப‌ட்ச‌ம் 90 ச‌த‌விகித‌ வாக்குக‌ளை பெற‌ வேண்டும் என்ற‌ தொலை நோக்கு பார்வையோடு இந்த‌ ப‌டை அறிவிக்க‌ப‌ட்டு உள்ளது. த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகிய‌ ந‌ம் அம்மாவின் கால‌டியில் பெரும் வெற்றியை ச‌ம‌ர்பிக்க‌ ந‌ம் அரிமாக்க‌ள் கிள‌ம்பிவிட்ட‌ன‌ர்.

இடை தேர்த‌லில் 90 ச‌த‌விகித‌ம் வாக்கு பெற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடுதான் சில‌ இட‌ங்க‌ளில் 8 ம‌ணி நேர‌ மின்வெட்டு அறிவிக்க‌ ப‌ட்டு இருக்கின்ற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ த‌மிழ‌க‌த்தின் சில‌ ப‌குதிக‌ளில் இருந்து ப‌ல‌ர் இடை தேர்த‌ல் ந‌ட‌க்கும் இட‌ம் நோக்கி புல‌ம் பெய‌ர்வ‌ர். அப்ப‌டி செல்லும் அனைவ‌ரும் ந‌ம் சின்ன‌த்திற்கே வாக்க‌ளிப்ப‌ர் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி.

அம்மாவின் கால‌டியில் வெற்றியை ச‌ம‌ர்பிப்போம் என்று 80 கோடி ஹிந்துக்க‌ளும் உறுதி எடுப்போம்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ குடிகார‌ன்.

Friday, January 20, 2012

அநியாய‌ம் அக்கிர‌ம‌ம்

பார‌த‌ மாதாவின் த‌லைம‌க‌ளாகிய‌ உல‌கின் ஒரே த‌ங்க‌தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் த‌மிழக‌ ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தினை உய‌ர்த்த‌ அல்லும் ப‌க‌லும் அரும்பாடுப‌ட்டு வ‌ருகின்றார். அதை க‌ண்டு பொறுக்காத‌ திம்மிக்க‌ள் ஏதாவ‌து த‌டைக‌ளை ஏற்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

மைனாரிட்டி ஆட்சி புரிந்த‌ க‌ருணாநிதி ச‌ட்ட‌ம‌ன்ற‌த்திற்காக‌ ஒரு பிர‌ம்மாண்ட‌ மாளிகையை ம‌த‌ராஸ் ப‌ட்டின‌த்தில் க‌ட்டினார். ஈழ‌த்தில் ப‌ல‌ ம‌க்க‌ள் வீடு வாச‌ல் இன்றி த‌விக்கும் போது இது போன்ற‌ மாளிகை அவ‌சிய‌மா என்று அப்போதே ந‌ம் ஈழ‌த்தாய் அதை எதிர்த்தார். ஆனால் அதை க‌ண்டு கொள்ளாம‌ல் அந்த‌ மாளிகை க‌ட்ட‌ப‌ட்டுவிட்ட‌து.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வுட‌ன் ஆட்சிக்கு வ‌ந்த‌ ந‌ம் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் அந்த‌ மாளிகையை ஒரு ம‌ருத்துவ‌ ம‌னையாக‌ மாற்ற‌ம் செய்ய‌ உத்த‌ர‌வு போட்டார். அந்த‌ செய்தியை க‌ண்டு உல‌கெங்கும் இருக்கும் ப‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் பெரு ம‌கிழ்ச்சி அடைந்த‌ன‌ர். அமெரிக்காவில் வ‌சிக்கும் ப‌ல‌ பார‌த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌த‌ராஸ் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்ந்து ப‌ணியாற்ற‌ விருப்ப‌ம் தெரிவித்து உள்ள‌ன‌ர். 80 கோடி ஹிந்துக்க‌ளும் ந‌ம‌க்காக‌ அம்மா ஒரு பெரிய‌ ம‌ருத்துவ‌ ம‌னையை ப‌ரிசு அளித்து இருக்கிறார் என்று ஆன‌ந்த‌ ந‌ட‌ன‌மாடின‌ர்.

அம்மாவின் இந்த‌ ஒப்பு உய‌ர்வு இல்லா சாத‌னையை க‌ண்டு வ‌யிறு எரிந்த‌ சில‌ திம்மிக்க‌ள் நீதிம‌ன்ற‌ம் சென்று ஒரு தடை ஆணையை பெற்றுவிட்ட‌ன‌ர். இத‌ற்காக‌தான் நாம் நீதிப‌திக‌ள் நிய‌ம‌ன‌த்தில் த‌குதி திற‌மையை ம‌ட்டுமே க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும் என்று போராடி வ‌ருகின்றோம். த‌குதி திற‌மைய‌ற்ற‌ இவ‌ர்க‌ள் குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் குண்டாக‌ இல்லை என்ற‌ கார‌ண‌த்தினால் சில‌ரை விடுவித்து வ‌ருவ‌தையும் நான் இங்கே சுட்டி காட்ட‌ விரும்புகின்றேன். த‌குதியும் திற‌மையும் வாய்ந்த‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இப்ப‌டி ஒரு தீர்ப்பை வெளியிடுவார்க‌ளா?.

இந்த‌ அநியாய‌மான‌ தீர்ப்பை நாம் அனைவ‌ரும் எதிர்க்க‌ வேண்டும். இந்த‌ வ‌ழ‌க்கை உச்ச‌ நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்ல‌வேண்டும். அங்கும் நீதி கிட்டாவிட்டால் உல‌க‌ நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்வோம் என்று 80 கோடி ஹிந்துக்க‌ளின் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ நீதிப‌திக‌ள்.

Wednesday, January 18, 2012

"சீ"மான் ஒழிக‌

பார‌த‌ ம‌க்க‌ள் ஒற்றுமையாக‌ ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ச‌கோத‌ர‌பாச‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுட்டி காட்டி இருக்கின்றேன். பார‌த‌த்தாயை கூறு போட்டு விற்க‌ கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளும், ஜிகாதிக‌ளும், திராவிட‌ திம்மிக்க‌ளும் முய‌ன்று வ‌ருவ‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. ச‌மீப‌த்தில் ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் இந்த‌ முய‌ற்சிக‌ளை ப‌ற்றி ஒரு புத்த‌க‌த்தினை வெளியிட்டு உள்ளார். அதை 80 கோடி ஹிந்துக்க‌ளும் வாங்கி ப‌டிக்க‌ வேண்டும்.

ஒற்றுமையாக‌ வாழும் ஹிந்துக்க‌ள் இடையே முல்ல‌ பெரிய‌ ஆறு என்று ஒரு பிர‌ச்ச‌னையை இந்த‌ க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் கிள‌ப்பி விட்ட‌து. தீய‌ச‌க்தியும் கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு இணைக்க‌ வேண்டும் என்று உள‌றினான். இப்போது மீண்டும் ஒரு பிரிவினைவாதி ஒரு வெடியை கொளுத்தி போட்டு உள்ளான்.

Simon என்ற‌ சீமான் ந‌ம் சாஸ்தாவை புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என்று கூவியுள்ளான். ப‌ல‌ நாட்க‌ள் க‌டும் விர‌த‌ம் இருந்து சாஸ்தாவை வ‌ழிப‌ட‌ "க‌ல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று அவ‌ர் புக‌ழ் பாடி செல்லும் ஹிந்துக்க‌ளை த‌டுக்க‌ இந்த‌ சீமான் யார்?

த‌ன் ப‌க்த‌ர்க‌ளுக்கு ஒரு வேத‌னை என்றால் அதை த‌டுக்க‌ ந‌ம் சாஸ்தா வ‌ர‌மாட்டாரா என்ன‌? அப்ப‌டி வ‌ராவிட்டால் அது அந்த‌ ப‌க்த‌னின் ஊழ்வினை என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். மேலும் அந்த‌ ப‌க்தன் த‌ன் விர‌த‌ங்க‌ளை ஒழுங்காக‌ க‌டைபிடித்து இருக்க‌மாட்டான் என்ப‌தும் ந‌ம‌க்கு புரியும்.

ஆக‌வே சீமானே நீ உன் வேலையை பார்த்து கொண்டு செல். அநாவ‌சிய‌மாக‌ ஹிந்துக்க‌ள் சீண்டாதே என்று 80 கோடி ஹிந்துக‌ளின் சார்பில் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றேன். நீ திருந்தாவிட்டால் புழ‌லில் க‌ளி சாப்பிட‌ நேரிடும் என்ப‌தை புரிந்துகொள்.


வாழ்க‌ ஹிந்துக்க‌ள். சாமியே ச‌ர‌ண‌ம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za