அநியாயம் அக்கிரமம்
பாரத மாதாவின் தலைமகளாகிய உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வருகின்றார். அதை கண்டு பொறுக்காத திம்மிக்கள் ஏதாவது தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
மைனாரிட்டி ஆட்சி புரிந்த கருணாநிதி சட்டமன்றத்திற்காக ஒரு பிரம்மாண்ட மாளிகையை மதராஸ் பட்டினத்தில் கட்டினார். ஈழத்தில் பல மக்கள் வீடு வாசல் இன்றி தவிக்கும் போது இது போன்ற மாளிகை அவசியமா என்று அப்போதே நம் ஈழத்தாய் அதை எதிர்த்தார். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் அந்த மாளிகை கட்டபட்டுவிட்டது.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நம் நிரந்தர முதல்வர் அந்த மாளிகையை ஒரு மருத்துவ மனையாக மாற்றம் செய்ய உத்தரவு போட்டார். அந்த செய்தியை கண்டு உலகெங்கும் இருக்கும் பல மருத்துவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் வசிக்கும் பல பாரத மருத்துவர்கள் மதராஸ் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளனர். 80 கோடி ஹிந்துக்களும் நமக்காக அம்மா ஒரு பெரிய மருத்துவ மனையை பரிசு அளித்து இருக்கிறார் என்று ஆனந்த நடனமாடினர்.
அம்மாவின் இந்த ஒப்பு உயர்வு இல்லா சாதனையை கண்டு வயிறு எரிந்த சில திம்மிக்கள் நீதிமன்றம் சென்று ஒரு தடை ஆணையை பெற்றுவிட்டனர். இதற்காகதான் நாம் நீதிபதிகள் நியமனத்தில் தகுதி திறமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று போராடி வருகின்றோம். தகுதி திறமையற்ற இவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க பட்டவர்கள் குண்டாக இல்லை என்ற காரணத்தினால் சிலரை விடுவித்து வருவதையும் நான் இங்கே சுட்டி காட்ட விரும்புகின்றேன். தகுதியும் திறமையும் வாய்ந்த நம்மவர்கள் இப்படி ஒரு தீர்ப்பை வெளியிடுவார்களா?.
இந்த அநியாயமான தீர்ப்பை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அங்கும் நீதி கிட்டாவிட்டால் உலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்.
வாழ்க அம்மா. வீழ்க நீதிபதிகள்.
மைனாரிட்டி ஆட்சி புரிந்த கருணாநிதி சட்டமன்றத்திற்காக ஒரு பிரம்மாண்ட மாளிகையை மதராஸ் பட்டினத்தில் கட்டினார். ஈழத்தில் பல மக்கள் வீடு வாசல் இன்றி தவிக்கும் போது இது போன்ற மாளிகை அவசியமா என்று அப்போதே நம் ஈழத்தாய் அதை எதிர்த்தார். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் அந்த மாளிகை கட்டபட்டுவிட்டது.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நம் நிரந்தர முதல்வர் அந்த மாளிகையை ஒரு மருத்துவ மனையாக மாற்றம் செய்ய உத்தரவு போட்டார். அந்த செய்தியை கண்டு உலகெங்கும் இருக்கும் பல மருத்துவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் வசிக்கும் பல பாரத மருத்துவர்கள் மதராஸ் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளனர். 80 கோடி ஹிந்துக்களும் நமக்காக அம்மா ஒரு பெரிய மருத்துவ மனையை பரிசு அளித்து இருக்கிறார் என்று ஆனந்த நடனமாடினர்.
அம்மாவின் இந்த ஒப்பு உயர்வு இல்லா சாதனையை கண்டு வயிறு எரிந்த சில திம்மிக்கள் நீதிமன்றம் சென்று ஒரு தடை ஆணையை பெற்றுவிட்டனர். இதற்காகதான் நாம் நீதிபதிகள் நியமனத்தில் தகுதி திறமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று போராடி வருகின்றோம். தகுதி திறமையற்ற இவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க பட்டவர்கள் குண்டாக இல்லை என்ற காரணத்தினால் சிலரை விடுவித்து வருவதையும் நான் இங்கே சுட்டி காட்ட விரும்புகின்றேன். தகுதியும் திறமையும் வாய்ந்த நம்மவர்கள் இப்படி ஒரு தீர்ப்பை வெளியிடுவார்களா?.
இந்த அநியாயமான தீர்ப்பை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அங்கும் நீதி கிட்டாவிட்டால் உலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்.
வாழ்க அம்மா. வீழ்க நீதிபதிகள்.