பாரத மண்ணில் அந்தணர்கள் எப்போதும் பெரும் பெயரும், புகழும் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. பில் கேட்ஸில் இருந்து லேரி எலிஸன் வரை பாரதத்தில் அலுவலகங்களை அமைப்பது இவர்களின் திறமையை உபயோகப்படுத்தி கொள்ளத்தான் என்பதும் பெரும் உண்மை. மிகுந்த அறிவும், கலாச்சார பிண்ணனியும் கொண்ட இவர்களால் பாரதத்தாய் எப்போதும் பெருமிதத்துடன் பீடு நடை போடுகின்றாள். இவர்கள் சாந்த சொரூபிகள், யாருடைய வழியிலும் குறிக்கிடாமல் தன் வழி தனி வழி என்று செல்பவர்கள். இவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட திம்மிக்கள் எப்போதும் இவர்களை வம்பு சண்டைக்கு இழுப்பர். Intellectual pygmies ஆன இந்த திம்மிக்களிடம் இருந்து விலகிச் செல்லும் மனதுடையவர்கள் இவர்கள்.
தமிழகத்தில் கயவன் கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சி வந்ததில் இருந்து இந்த பேட்டை ரவுடிகளின் அராஜகம் தாங்க முடியவில்லை. அப்பாவி பிராமணர்களின் பூணூல் அறுப்பும், குடுமி அறுப்பும் நாள் தோறும் நடந்து வருகின்றது என்பதை நம் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த வகையாய், இப்போது வீடு புகுந்து மிரட்டும் செயல் ஆரம்பித்து உள்ளது.
வெற்றி அடைந்த பெருமக்களின் புகழை அழிக்க திம்மிக்கள் எடுக்கும் ஆயுதம் பெண்கள். நாடு போற்றும் நல்லவர்களின் செயலினை கண்டு கலங்கும் திம்மிக்கள் அவர்களை பெண்களோடு தொடர்புபடுத்தி இழி செயல்களை கதை கட்டி விடுவார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவாள் அவர்களுக்கு நடந்த கொடுமையான செயல்களை நாம் அனைவரும் அறிவோம். தனது பதிவுகளின் மூலம் ஆன்மீக கருத்துக்களை பரப்பி வந்தார் ஒரு பதிவர். கருத்தினை மறுக்க முடியாத பேட்டை ரவுடிகள் அவரின் புகழை கெடுக்க முடிவு செய்து ஒரு நாடகத்தினை அரங்கேற்றி உள்ளனர்.
சென்னை மாநகரில் இருந்த பதிவரின் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் அவரை பியட் யூனோவில் கடத்தி சென்றுள்ளனர். அது மட்டும் அல்லாமல் சினிமாவில் வருவது போல இரண்டு, மூன்று திராவிட நஞ்சுக்கள் பட்டாக்கத்தியோடு சுற்றி நின்று வெற்றுத்தாளில் கைநாட்டு வாங்கி உள்ளனர். கடத்தப் பட்ட போது அவரின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளனர் அந்த திம்மிக்கள். அதனால் அவர் அமெரிக்காவிலும், கனடாவிலும், இஸ்ரேலிலும் உள்ள தன் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
செல்போனில் உள்ள அவரின் நண்பர்களுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசிகளில் இருந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் வந்துள்ளன. தன் உயிருக்கும், தன் குடும்பத்தாரின் உயிருக்கும் பயந்த அந்த பண்பாளரின் அமைதியான குணத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. திக்குத் தெரியாத சென்னை மாநகரில் தனியாக மாட்டிக்கொண்ட அந்த பதிவாளரை யாரும் காப்பாற்ற முடியவில்லை. வஞ்சகரின் வலை விரிப்பில் ஏதும் அறியா அந்த அப்பாவி மாட்டிக் கொண்டார்.
லஞ்ச ஊழலில் முதலிடம் வகிக்கும் காவல் துறையிடம் கட்டு கட்டாக பெட்ரோல் டாலரை கொடுத்து அவரின் மீது பொய் வழக்கு பதிவு செய்ய யோசித்து கொண்டு இருக்கிறார்களாம். இதற்கு பிண்ணனியில் ஆளும் கட்சியின் அடிவருடிகள் இருப்பதாக தெரிகின்றது. அந்த நல்ல உள்ளம் படைத்த ஆன்மீக செம்மலை காப்பாற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம். அனைவரும் அருகே உள்ள நீதி மன்றங்களை அணுகி அந்த பதிவரை காப்பாற்ற மனு செய்யுங்கள்.
வாழ்க வைதிகஸ்ரீ. வளர்க அவர் புகழ்.
தொடர்புடைய சுட்டிகள்
ஒன்றுஇரண்டு