அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 04, 2008

எது உண்மை???

ஹிந்துஸ்தானத்தின் பொக்கீஷமான சிதம்பரம் கோவிலில் நிகழ்பவை எமக்கு பெரும் கவலை அளிக்கின்றது. எந்த செய்தி உண்மை, எது பொய் என்பது பெரும் கேள்வி குறியாகிவிட்டது. இரு பக்க கருத்துகளை சற்று நோக்குவோம்.

தேவாரம் பாட முடியுமா?

ஆம் என்கிறது ஸ்ரீமான் ஜடாயுவின் பதிவும், கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவும். இல்லை, ஒளிந்திருந்துதான் பாடினார்கள் என்கின்றது நாக.இளங்கோவனின் பதிவு.

இப்படி சுலபமாக தேவாரம் பாட முடியும் என்றால் ஆறுமுகம் ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றார். இப்படி நடக்கும் பொய் பித்தலாட்டத்தை முறியடிக்க ஒரு யோசனை. நமது அருமை தீட்ஷிதர்களே ஆறுமுகத்தை கோவிலின் உள்ளே அழைத்து சென்று தேவாரம் பாட வைத்து ஒன்றிரண்டு புகைபடங்கள் எடுத்து வெளியிடலாமே.

கோவிலின் உள்ளே நடந்தது என்ன?

ஒன்றுமே இல்லை. ஏளன சிரிப்போடு நுழைந்த கும்பலை கண்டு பொறுக்காத ஒரு பெரியவர் அவர்களை தடுக்க பார்த்தார் என்கிறார் ஸ்ரீமான் ஜடாயு.

ஆனால் எல்லா பத்திரிக்கைகளும் வேறு மாதிரி செய்தி வெளியிட்டு உள்ளனர். நாட்டின் ஒரே நடுநிலை பத்திரிக்கையான நமது தினமலர் "தள்ளுமுள்ளு" என்கிறது. வேறு சில போலீசாரை தீட்ஷிதர்கள் தாக்கினர் என்றன. ஜூனியர் விகடனோ இப்படி சொல்கின்றது.

ஆறுமுகசாமி தரப்பினர், பொன்னம்பல மேடையை நெருங்கும்போது மேடைக்குக் கீழே தீட்சிதர்கள் கும்பல் மறித்தது. அவர்கள் போலீஸாரை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயற்சித்தனர். அதை மீறி ஆறுமுகசாமியை, எஸ்.பி-யும் ஏ.எஸ்.பி-யும் மேடையில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்களின் பதவியையும் பாராது முரட்டுத்தனமாகக் கீழே தள்ளிவிட்டனர் தீட்சிதர்கள். அதைப்பார்த்து மஃப்டி போலீஸார் ஓடிவந்து வழி ஏற்படுத்த... தண்ணீரையும் எண்ணெயையும் வழியில் இருப்போர் மீது ஊற்றிக் கொண்டேயிருந்தனர் தீட்சிதர்கள்.

மோதல் உக்கிரமாக... எஸ்.பி-யும், ஏ.எஸ்.பி-யும் தாங்களே சட்டை, பனியனைக் கழட்டி விட்டு ஆறுமுகசாமியை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது எஸ்.பி. மீண்டும் கீழே தள்ளி விடப்பட்டதால், கோபமான எஸ்.பி-யின் பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்து அவரைத் தள்ளிவிட்டவர்களை நோக்கிக் குறிவைத்தார். அவசரஅவசரமாக அதைத் தடுத்தார் எஸ்.பி.

ஏ.எஸ்.பி-யும் ரொம்பவே டென்ஷனாகி, தீட்சிதர்களை அப்புறப்படுத்தும்படி போலீஸாருக்குக் கட்டளையிட, சிறிது நேரத்தில் மேடையிலிருந்தவர்களைக் கீழே அள்ளிப் போட்டது போலீஸ்.

எனக்கு தலை சுற்றி விட்டது. உங்களுக்கு?

நடப்பவை எல்லாமே அந்த ஈசனின் திருவிளையாடல்தானோ.

Sunday, March 02, 2008

அருமை தீட்ஷிதர்களும் அடாவடி ஆறுமுகமும்

ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் பொக்கீஷமான சிதம்பரம் கோவில் தீட்ஷிதர்களால் பராமரிக்கபட்டு வருகின்றது. அது அவர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு இடம் என்று நீதிமன்றங்களால் நிரூபிக்கபட்டு உள்ளது. இதை பற்றி பல பதிவர்கள் எழுதி உள்ளனர்.

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி அரசு ஹிந்துக்களுக்கு எதிராக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதில் ஒன்று சிதம்பரம் கோவிலின் உள்ளே தமிழில் தேவாரம் பாடலாம் என்ற ஒரு அரசாணை. ஆணை வந்ததும் கலககாரரான அடாவடி ஆறுமுகம் தன் குண்டர் படையுடன் கோவிலின் உள்ளே நுழைய முயன்று உள்ளார். அவருக்கு பாதுகாப்பாக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி அரசின் போலீசாரும் சென்று உள்ளனர்.

பாரம்பரிய முறைகளை சீரழிக்க வந்த கூட்டத்தினை துணிந்து எதிர்த்தனர் தீட்ஷிதர்கள். அக்காலத்தில் புலியை முறத்தால் விரட்டினார்கள் என்று சில குடிகார புலவர்கள் (நன்றி ஆ.விகடன் மதன்) பொய்யான தமிழ் வரலாறு எழுதியதை படித்து இருக்கின்றோம். ஆனால் இன்று நம் கண் முன் வீரக்காட்சிகள் அரங்கேறின. கோவிலின் புனித தன்மையை அழிக்க வந்த அரக்கர் கூட்டத்தை தன் உயிரை துச்சமென நினைத்து எதிர்த்து நின்றனர் தீட்ஷிதர்கள். அதை பார்த்த என் உடல் மெய்சிலிர்த்துவிட்டது. இதை போலத்தானே நம் முன்னோர்கள் முகமதிய மற்றும் கிருத்துவ மிஷினரிகளின் படை எடுப்பை எதிர்த்து நின்று இருப்பர் என்று நினைத்தேன். அடடா தொலைகாட்சியில் பார்த்த நிகழ்வுகளை எழுத சரியான வார்த்தைகள் வரவில்லை.

மைனாரிட்டி ஆட்சியின் போலீஸ் துணையுடன் உள்ளே புகுந்த குண்டர்களால் தமிழில் ஒழுங்காக பாட முடிந்ததா. இல்லையே. இந்த அடிமுட்டாள்களுக்கு ஈசன் பெரியவரா அல்லது கருணாநிதி பெரியவரா என்று தெரியவில்லை. அடாவடி ஆறுமுகம் பாடும் போது போலீசாரின் தடியடியையும் தாங்கி கொண்டு ஈசனின் சன்னதியை காத்து நின்றனர் வீர தீட்ஷிதர்கள். ஈசனை தரிசிக்க முடியாமல் தோல்வியில் வீடு திரும்பினார் அடாவடி ஆறுமுகம்.

நமது பாரம்பரிய முறைகளை காக்க இது போன்ற வீர தீட்ஷிதர்கள் இருக்கும் வரை ஹிந்துஸ்தானத்தை ஒருவராலும் அசைக்க முடியாது.

வாழ்க தீட்ஷிதர்கள். வீழ்க அடாவடிகள்.

Saturday, March 01, 2008

என்ன கொடுமை சார் இது

ஹிந்துஸ்தானத்தின் ஒரு முக்கிய சின்னமாக விளங்கும் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாட தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி அரசின் அதிகாரி அனுமதி அளித்து உள்ளாராம். ஹிந்து மதத்திற்கு எதிராக நடத்தபடும் தாக்குதல் இது. 80 கோடி ஹிந்துக்களும் இதை எதிர்க்க வேண்டும். சிதம்பரம் பகுதியில் உள்ள ஹிந்துக்கள் இப்படிபட்ட செயல் நடைபெறாமல் இருக்க முயற்சி எடுங்கள்.


வாழ்க ஹிந்துஸ்தானம். வீழ்க திம்மிக்கள்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za