அம்மான்னா சும்மாவா?

Friday, May 25, 2007

அண்ட புளுகன் (அ) ஆகாச புளுகன்

பாரத மக்கள் வேத புராணங்களில் சொல்லியுள்ளபடி கடமை தவறாமல் வாழ்ந்து வருபவர்கள். பொய், புளுகு என்ற வார்த்தைகள் முகமதியர்கள் படை எடுத்து வந்த பிறகு தோன்றியது என்று சிலரும், கிருத்துவ மெஷினரிகள் நம்மிடையே புகுந்த பிறகு தோன்றியது என்று சிலரும் கூறுகின்றனர். வந்தேறிகளிடம் இருந்து அந்த கெட்ட வழக்கத்தினை நம்மிடையே உள்ள திம்மிகள் பிடித்து கொண்டு விட்டனர்.

தமிழகத்தின் சாபமாக இருக்கும் தலையாய திம்மி கருணாநிதி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த திம்மியாவது பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு நாட்டை கெடுத்து வருகின்றது. ஆனால் இப்போது முளைத்த புதிய திம்மி கருணாநிதியையே சாப்பிட்டு விடும் அளவிற்கு அள்ளி வீசுகின்றது. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். அனால் இந்த குடிகாரன் உளறுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

அரிதாரம் பூசிய திருடன் கொடுத்திருக்கும் பேட்டியின் சில வரிகளை இப்போது பார்ப்போம்.


மக்களுக்காக என் கல்யாண மண்டபத்தைக் கொடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அப்புறம் என்னா ..ருக்காக மனைவியை விட்டு கோர்ட்டில் கேசு போட்டான் இவன். அது மட்டுமா, அந்த இடத்திற்காக 8.5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கின்றனர். அதை பற்றி வாயை திறக்கின்றானா பாருங்கள்.
நானும் யோசிச்சு, ஒரு மாற்றுத் திட்டம் தந்தேன். மண்டபத்தை 50
அடி சுத்தி வரலாம்; அதுக்குத் தேவையான நிலத்தை மண்டபத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் தரத் தயாரா இருக்கேன்னு சொன்னேன். அதை அவங்க காதிலேயே போட்டுக்கலை.

மத்திய அரசாங்கம் அந்த திட்டம் ஏற்புடையது இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் இந்த திருடன் இப்படி புருடா விடுகின்றானே. இவனை எல்லாம் ஆட்சி பொருப்பில் விட்டால் நாடு என்னவாகும்.
என்னை கோர்ட்டுக்கு இழுத்தாங்க. அங்கே போய் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
அடப்பாவி இப்படியா முழு பூசணிக்காய சோத்துல மறைப்பது. யாரு வழக்கு போட்டது? அரசாங்கமா அல்லது இவன் மனைவியா? அதுவும் ஒரு கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன் இன்னொரு கோர்ட்டுக்கு ஓடியது யார்.

சரி... மண்டபத்தை இடிக்கணும்னு முடிவு பண்ணவங்க அப்பவே இடிச்சிருக்கலாமே... ஏன் இடிக்கலை? தேர்தல் நேரத்துல இடிச்சா இவனுக்கு அனுதாப ஓட்டுகள் விழுந்துடுமேங்கிற பயம்! அதான், இப்போ நேரம் பார்த்து இடிச்சுட்டாங்க.

ஏண்டா லூசு பயலே, இடத்தை கையகபடுத்திய பிறகுதானே இடிக்க முடியும். அரசாங்கம் எப்போது மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றதோ அப்போதுதானே இடிக்கும். அதுக்குள்ள கோர்ட்டுக்கு ஓடிப்போய் ஒப்பாரி வைத்துவிட்டு இப்போது இப்படி பேட்டி கொடுக்கின்றான் இந்த கயவன்.

ஏற்கனவே ஒரு திம்மியை ஆட்சியில் அமர்த்திவிட்டு நாம் படும்பாடு போதாதா?. எனவே இந்த புதிய கயவனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட 80கோடி இந்துக்களும் சபதம் எடுப்போம். வரும் ஜனாதிபதி தேர்தலில் அம்மாவை ஜனாதிபதியாக தேர்ந்து எடுப்போம். அம்மா சம்மதிக்காவிடில் அவர் கை காட்டும் நபரை தேர்ந்து எடுத்து நாட்டை காப்போம்.

தெரிந்தே ஏமாத்தும் திருடனை புறக்கணிப்போம். வந்தே மாதரம்.

Monday, May 21, 2007

டி.ஆர். பாலுவே ராஜினாமா செய்

திராவிட நஞ்சான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வழக்கம் போல வாய் சவடால் விட்டு இருக்கின்றார். ராமர் பாலம் பற்றிய ஆதாரம் இருந்தால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சவால் விட்டு இருக்கின்றார்.

ராமர் பாலம் பற்றிய ஆதாரங்களை, வரைபடங்களை தஞ்சை சரஸ்வதி மகாலில் புகுந்து அங்குள்ள அரசு ஊழியர்களை தாக்கி தீயிட்டு கொளுத்தி விட்டால் எங்களுக்கு வேறு ஆதாரமே கிடைக்காதா. புராண ஆதாரம் என்ன, எங்களால் திரைப்பட ஆதாரமே காட்ட முடியும்.

நாடு போற்றும் நல்ல நடிகரான சிவாஜி கணேசன், ஒரு படத்தில் நமது பெரியாரான பாரதி வேடமிட்டு பாட்டு பாடுவார் (படத்தின் பெயர் நினைவில் இல்லை). அதில் பாரதத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் ஒரு பாலம் இருப்பதையும், அதில் வாகனங்கள் செல்வதையும் காட்டி இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆதாரம் இருக்கும் போது உனக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

எனவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனே விலகுமாறு டி.ஆர்.பாலுவை 80 கோடி இந்துக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். இந்த விஷயம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவோம்.

வாழ்க ராமர் சேது. வீழ்க டி.ஆர். பாலு.

Tuesday, May 15, 2007

இந்துக்களை நிந்திக்கும் கருணாநிதி

வழக்கம் போல கயவன் கருணாநிதி இந்துக்களை நிந்திக்கும் வேலையை ஆரம்பித்து விட்டான்.

செய்தி 1

செய்தி 2

விரிவான பதிவினை விரைவில் இடுகின்றேன். 80 கோடி இந்துக்களும் இதை ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.

வாழ்க தயாநிதி. வீழ்க கருணாநிதி.

Saturday, May 12, 2007

இது உண்மையா

திமுக காலிகளால் தாக்கப்பட்ட தினகரன் பத்திரிக்கையின் அதிபர் கலாநிதி ஊட்டிக்கு இன்று செல்வார் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவரின் தம்பியும், மத்திய அமைச்சரும் ஆன தயாநிதி அங்கு சென்று உள்ளார். அவர்கள் இருவரும் தம் குடும்பத்தாருடன் ஊட்டியில் முகாம் இட்டு உள்ள அம்மாவிடம் சென்று தங்களை திமுக குண்டர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமாறு கோரிக்கை வைப்பார்கள் என்று ஒரு பறவை தகவல் தெரிவித்து உள்ளது. அப்படி நடப்பின் தமிழகத்தின் தலை எழுத்தை புரட்டி போடும் செயலாக அது இருக்கும் என நம்புவோம்.

அன்னையர் தினம்




அகில உலகத்தையும் வாழவைக்கும் அன்னையே

வாழ்த்த வயதில்லை

தகுதியும் இல்லை

உங்களை வணங்கும் ஒரு சிற்றிலை.

Friday, May 11, 2007

கொள்ளைக்காரன்

பாரத நாட்டை கெடுத்து கொண்டிருக்கும் திராவிட நஞ்சுக்கள் போதாது என்று தமிழகத்தில் புதிதாக கிளம்பி உள்ள அரிதார திருடனை பற்றி அனைவருக்கும் தெரியும். கயவன் கருணாநிதியின் குடும்பம் அமெரிக்கா முதல் அண்டார்டிகா வரை இருக்கும் எல்லா இடங்களையும் சூரையாடி, கலவரம் நிகழ்த்தி உள்ளனர்.

ஒரு குடும்ப சண்டையை தீர்த்து வைக்க முடியாத ஆசாமி எப்படி நாட்டை ஆள முடியும். எனவே கருணாநிதி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதே போல துப்பாக்கி எடுத்து மக்களை மிரட்டியதற்காக தேசிய முற்போக்கு திருடர்களின் தலைவன் "அரிதார அரக்கன்" உடனடியாக கட்சியை கலைத்து விடுமாறு இங்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. திராவிட நஞ்சுக்கள் எதிர்த்து எழுதினால் பெட்ரோல் பாம் வீசுகின்றனர். ஆனால் இந்த கொள்ளைக்காரன் ஆட்களோ ஆட்டோவை நிறுத்தினாலே துப்பாக்கி தூக்குகின்றனர். இது எங்கு போய் முடியுமோ.

ஆண்டாள் அழகர் கல்லூரி அரக்கனிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு இந்துக்கள் அனைவரும் அழகர் பெருமானை வேண்டுவோம்.

வெள்ளையனை வென்றோம். இந்த கொள்ளையர்களை எப்போது வெல்வோம்?

Tuesday, May 08, 2007

பின்னூட்டம்

அன்பு பதிவர்களே

நான் யார் பதிவிலும் பின்னூட்டங்கள் இடுவதில்லை. என் பெயரில் சில பின்னூட்டங்கள் தமிழ்மண விவாத களத்தில் வெளியாகி உள்ளது. அவற்றை நான் இடவில்லை. பதிவினை இட்ட லக்கிலுக் அவர்களுக்கு அதை நீக்கிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

நா. ஜெயசங்கர் அவர்களே,

அந்த பின்னூட்டம் நான் இடவில்லை. ஆகையால் என் மீது கோபம் வேண்டாம்.

Monday, May 07, 2007

பெரியார் திரைப்படம்

பெரியார் திரைப்படத்தில் அம்மாவை ஒரு காட்சியில் கூட காட்டாத தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் கடுமையான கண்டனத்தை இங்கே தெரிவிக்கின்றேன். அகில இந்தியாவிற்கும் புகழ் சேர்க்கும் அம்மாவின் பெயரை வேண்டுமென்றே கருணாநிதி இருட்டடிப்பு செய்து இருப்பார் என்பதால் அந்த ஆசாமிக்கும் என் கண்டனங்கள்.

அம்மாவின் பெயர் மறைக்கப்பட்டதால் இந்துக்கள் அனைவரும் உங்கள் எதிர்ப்பை இந்த திரைப்படத்தை பார்க்காமல் இருப்பதன் மூலம் காட்டுங்கள்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

Thursday, May 03, 2007

ராமர் பாலம் - அம்மா

ராமபிரானின் புனித பாதம் பட்ட பாலத்தினை காப்பாற்ற அம்மா வெளியிட்டு இருக்கும் அறிக்கை.

நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்பதை தேசப்படத்தில் இன்றும் காணலாம்.

மிகப் பழமையான இந்த பாலம் பல யுகங்களாக இருந்து வருகிறது. உலகத்தின் புராதன சிலைகள், பொக்கிஷங்கள் என்று இப்படிப்பட்ட பழமையான சின்னங்களை உலக புராதன சின்னம் என்று வகைப்படுத்தி உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தான் இத்தகைய பழமை வாய்ந்த ராமர் பாலம் உள்ளது. வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. சொந்த பொருளாதார ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பழமையான புராதன சின்னத்தை அழிக்கக் கூடிய நெஞ்சழுத்தம், ஆணவம், மமதை, திமிர் ஆகியவை தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கமிஷன் பெற வேண்டும் என்ற சுயநலப் பேராசையில், போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ராமர் பாலத்தை தி.மு.க. கும்பல் இடிக்க முற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பாரதீய ஜனதாவும், மற்ற கட்சித் தலைவர்களும் பிற கட்சிகளும் பொது மக்களும் இவ்வகை செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி டி.ஆர்.பாலு பணத்தாசையால் நாசா ஆராய்ச்சி மையம் ராமர் பாலம் உள்ளது என்று உறுதிப்படுத்தியதை மறுக்கிறார். இவ்வகை பாலமே இல்லை என்று பொய் சொல்கிறார். இருப்பதையே இல்லை என்று இவ்வளவு பெரிய பொய்யை சொல்ல பாலுவுக்குத் தான் இவ்வளவு துணிச்சல் வரும் தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் இந்ததுணிச்சல் வராது.

இதோடு நில்லாமல் ராமர் பாலம் இல்லை என்று தான் சொன்னதை உண்மையாக்கிட வேண்டும் என்ற முயற்சியில், அரிய வரலாற்று ஆவணங்களை சேகரித்து வைத்துள்ள உலக பிரசித்தி பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திற்கு டி.ஆர்.பாலு 30-4-07 அன்று சென்று ராமர் பாலம் குறித்த வரலாற்று தகவல்களை அடியோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தொலைக் காட்சி மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் தெரிய
வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளையும் இது குறித்து டி.ஆர். பாலு மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இது மன்னிக்க முடியாத ஒரு கொடும் செயலாகும்.

மத்திய அமைச்சராக இருப்பவர் இது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டாலே அந்த நூலகத்து அதிகாரிகள் அது குறித்த எல்லா விவரங்களையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் காவல் துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக டி.ஆர். பாலு அந்த நூலகத்திற்கு சென்று சுமார் 4 மணி நேரம் இது குறித்து ஆலோசனை செய்து இருப்பதை பார்த்தால் இவர் விவரங்களை சேகரிக்க சென்றதாக தெரியவில்லை. இருக்கின்ற ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக தான் தெரிகிறது.

இதற்கு முன் டி.ஆர்.பாலு தன் வாழ்நாளில் இதுவரை எந்த நூலகத்திற்கும் சென்றதாக எந்த தகவலும் இல்லை. திடீரென்று முதன் முதலாக நூலகத்திற்குள் காலடி வைத்திருப்பது நல்ல காரியத்திற்காக இல்லை என்பது தெளிவு. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த நூலக புறக்கணிப்பு பழக்கத்தை தொடர்ந்து டி.ஆர்.பாலு கடை பிடிப்பது நல்லது. ஒரு சிலர் திடீரென்று சில நல்ல பழக்கத்தை ஆரம்பிப்பது கூட எவ்வளவு ஆபத்தானது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

இடிக்கப்பட்ட பாலத்தின் கற்கள் அக்வேரியஸ் என்ற கப்பலின் மூலம் ரகசியமாக எடுத்துச் செல்லும் காட்சிகள் தொலைக் காட்சிகள் மூலம் வெளியாகி உள்ளன. குடியரசுத் தலைவரும், பாரதப் பிரதமரும் உடனடியாக இதில் தலையிட்டு ராமர் பாலம் மேலும் இடிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை அ.தி. மு.க. எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za