அம்மான்னா சும்மாவா?

Monday, August 27, 2007

அக்கிரமம், அநியாயம்

எனதருமை பாரத மக்களே, ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட மற்றொரு கொடுமையை பாருங்கள். பேய்கள் அரசாண்டால் ... என்று சொல்வார்கள். அது உண்மைதான். மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும், ரோம நாட்டின் ஆதிக்கத்தை பாரதத்தில் நிலை நாட்ட அவதாரம் எடுத்து இருக்கும் மெய்னோவும் சேர்ந்து நடத்தும் அக்கிரமத்தை பாருங்கள்.




ஸ்ரீ ராமபிரான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய ஸ்ரீ ராம சேதுவை காப்பாற்ற வந்த கர சேவகர்களை ஓடும் ரயிலில் இருந்து அடித்து விரட்டி இருக்கின்றனர். அப்பாவி ஹிந்துக்களிடம் இருந்து அவர்களின் பணம், தொலைபேசி மற்றும் உடமைகளை பறித்து கொண்டு அநியாயமாக விரட்டி விட்டுள்ளனர். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த திருநாட்டில் ஹிந்துவாக பிறப்பதே ஒரு பாவமான காரியம் ஆகிவிடும் காலம் வரும் போல் இருக்கின்றது.

அப்பாவி ஹிந்துக்களை காப்பாற்றி அரவணைத்து ஆதரவு காட்டி வரும் பா.ஜ.க தொண்டர்களை நாம் அனைவரும் இரு கரம் கூப்பி வணங்குவோம்.



ஜெய் ஸ்ரீராம்.



இது தொடர்பான சுட்டி.

Sunday, August 26, 2007

இந்த படை போதுமா?

பாரத மகளிர் புலியை முறத்தால் விரட்டியவர்கள் என்று நம் பள்ளி பாடங்களில் படித்து இருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு வீர மகளை இங்கே படத்தில் காணலாம்.



தன் தாயை பழிக்க வந்த ரோம நாட்டின் கைக்கூலிகளை அடித்து விரட்டும் இது போன்ற பெண்மணிகள் இருக்கும் வரை எங்கள் அம்மாவை யாரும் அசைக்க முடியாது.

வாழ்க அம்மா. வீழ்க மெய்னோ.

கருணாநிதியே பதவி விலகு

பாரதம் முழுவதும் ஆயிரக்கணக்கில் நிறைந்து இருக்கும் புண்ணிய ஸ்தலங்களில் முக்கியமான ஒன்று பழனி. அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். முருக பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தினை வணங்கி ஆசி பெற்று செல்வதை கண்டு பொருக்க முடியாத முகமதிய ஜிகாதிகள் ஒரு பயங்கரவாத செயலை கட்டவிழ்த்து இருக்கின்றனர்.


கொலைஞர் ஆட்சிக்கு வரும் போது எல்லாம் இப்படியாக அப்பாவி ஹிந்துக்கள் சூரசம்ஹாரம் செய்யப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. பழனியில் நடந்த கொடுஞ்செயலுக்கு முருகப் பெருமானிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு உண்டு. உடனடியாக அந்த கயவன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பழனிக்கு காவடி எடுக்க வைப்போம்.

பாதிக்கப்பட்ட நம் ஹிந்து நண்பர்களுக்காக ஆங்காங்கே மோட்ச தீபங்களை ஏற்றுங்கள்.

Thursday, August 23, 2007

ஹிந்து மதத்தை அழிக்க

நினைக்கும் கயவர்களை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். ஹிந்துஸ்தான் என்று உலகத்தவர் அனைவரும் அழைக்கும் நாடு நம் பாரதம். பாரத மாதாவின் ஒரு புதல்வர் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பி.பி.ராவ், "ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர்' என்று சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் முன்பு வாதாடினார். மத்திய அரசு கொண்டு வந்த 27 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணை செய்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் பி.பி.ராவ் வாதிட்டதாவது: ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது. இவ்வாறு சீனியர் வக்கீல் ராவ் வாதிட்டார்.

இது நாள் வரை திம்மிக்கள்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படைந்த நம்மவர்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று இவர் சொல்லி உள்ளார். எனவே இனிமேல் நாம் நக்ஸல்களை ஆதரிப்போம்.

வாழ்க ஹிந்துஸ்தான். வீழ்க இந்த திம்மிக்கள்.

Sunday, August 19, 2007

வந்தே மாதரம்

மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞர் கருணாநிதியும், ரோம நாட்டின் ராணி சோனியாவும் நம் பாரதத்தை சூரையாடும் செயலை பாருங்கள்.

இந்த கயவர்களை உலகை விட்டு விரட்ட ஆனைவரும் ஆங்காங்கே சத்ருசங்கார யாகம் நடத்துவோம்.

வாழ்க பாரதம். வீழ்க திம்மிக்கள்.

Sunday, August 12, 2007

இது உண்மையா

நமது பாரதம் திம்மிகளாளும், ஜிகாதி ஆதரவாளர்களாளும், பிராமண/இந்துமத வெறுப்பாளர்களாளும், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களாளும், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகளாளும் பலவீனப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த கயவர்களால் ஏற்படும் புண்களை எப்போதும் சரி செய்யும் கடமையை கொண்ட ஸ்தாபனம் ஒன்று உள்ளது. நமது பாரதத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அந்த ஸ்தாபனம் உச்ச நீதிமன்றம் ஆகும். தகுதியும் திறமையும் வாய்ந்த பல நீதிபதிகள் அங்கே கொலு வீற்றிருந்து எப்போதும் நல்ல செய்தியினை நமக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பாரம்பரிய ஸ்தாபனத்தில் பொது சேவை ஆற்றி வந்த ஒருவரை பற்றி வந்த கட்டுரை இது. இதை படித்தவுடன் பாரதம் சரியான பாதையில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு ஏற்பட்டு விட்டது.

Tuesday, August 07, 2007

சில கேள்விகள்

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா மீது சுமத்தப்பட்ட வழக்கு ஒரு பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பொய் வழக்கினை விசாரிக்க முடியாது என்று ஒரு நீதிபதி சொல்லிவிட்டார். அதில் என்ன தவறு. அவர் சத்தியபிரமாணம் எடுத்தவர். அது சரியல்ல என்று திம்மிகள் கூச்சல் இடுகின்றார்கள். அவர் இறைவன் பெயரில் தானே பிரமாணம் எடுத்தார். அந்த இறைவனையே நிந்திக்கும் ஒரு வழக்கை எப்படி அவர் கையாள்வார்?
__________________________________________________________

நீதி நேர்மை தவறாத நீதிபதிகள் இருப்பதால்தான் நம் பாரதத்தில் இன்னும் மழை பெய்கின்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சட்டத்தில் சொல்லிய படி நாட்டில் அனைத்தும் நடக்கின்றதா என்று கண்காணித்து வருகின்றனர். அதனால்தான் தகுதியும், திறமையும் உள்ள பல ஆயிரம் கோடி மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ரோம ராஜ்ஜியத்தின் சட்ட விரோத இட ஒதுக்கீட்டினை ஒழிக்கும் உன்னத காரியத்தினில் இறங்கி இருக்கின்றனர். மேலும் வாடிகன் உத்தரவின் படி இந்து மதத்தினை ஒழிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு கீழான திட்டத்தினை தடுத்து வைத்து உள்ளனர்.

நாட்டை வழிநடத்தும் ஆற்றலும், தகுதியும், திறமையும் யாருக்கு இருக்கிறதோ அவர்களைதானே நீதிபதி பதவிக்கு அமர்த்த வேண்டும். அப்படி யாருக்கு தகுதி, திறமை இருக்கிறது என்று கண்டுபிடிக்கதான் கொலிஜீயம் என்ற அமைப்பு உருவாக்கபட்டு அதன் மூலம் நல்ல நீதிபதிகள் அடையாளம் காட்ட படுகின்றனர். இப்படியாக தர்ம நியாயம் பார்த்து நடந்து கொள்வோர் இருப்பதினால் தங்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியாமல் திம்மிகள் கவலை படுகின்றனர். நாட்டை சூரையாடும் இந்த கயவர்கள் நீதிமன்றங்களில் சிறிதும் தகுதி இல்லாத நபர்களை நுழைக்க திட்டம் தீட்டுகின்றார்கள். அதை தடுக்க முயலும் நீதிமான்களை ஏசுகின்றனர் இப்போது. இது எந்த விதத்தில் நியாயம்?
___________________________________________________________

சஞ்சய் தத் என்ற நடிகருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து விட்டதாம். உடனே நயவஞ்சகர் எல்லோரும் கூப்பாடு போடுகின்றனர். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அளித்த அறிக்கையின் படி எத்தனை பேருக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும், பல ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தன. அப்போது எல்லாம் இவர்கள் கூச்சல் போட்டார்களா.

இந்துக்களே கண் விழியுங்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்மாவை பாரத பிரதமர் ஆக்குவோம். அவர் ஒருவரால்தான் தைரியமாக நம் நாட்டை வழி நடத்தி செல்ல முடியும்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Wednesday, August 01, 2007

ஒரு கேள்வி

நாட்டின் ரகசியங்களை காப்பாற்றுவேன் என்று பதவி ஏற்கும் அரசியல்வாதிகள் உறுதிமொழி எடுப்பது வழக்கம். மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவன் தினமும் அம்மாவின் அரசாங்கத்தில் என்ன நடந்தது என்று அறிக்கை விடுகின்றான். இப்படி அரசாங்க நடவடிக்கைகளை வெளியிடுவது குற்றம் ஆகாதா?

நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கொடுத்த காரணத்தினால் சென்ற முறை ஆட்சியினை இழந்தவன் இந்த திம்மி என்பதை இப்போது நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za