அம்மான்னா சும்மாவா?

Monday, January 12, 2009

டிபாசிட்டை பறிகொடுத்த குடிகாரன்

மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் நடந்த இடை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. நம்மவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் பணபலத்தால் திமுக வென்று விட்டது. முடிவினை கண்டு தொய்வு கொள்ளாமல் கடுமையான களப்பணி ஆற்றுவோம். அம்மாவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வோம் என்று ஹிந்துக்கள் அனைவரும் வீர சபதம் எடுப்போம்.

கேப்டன் என்றும், கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் பிதற்றி திரிந்த குடிகாரன் கட்சிக்கு டிபாசிட் பறிபோய்விட்டது. மரியாதைக்குரிய மூத்த பதிவர்கள் சிலர் கூட தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம் தான் வெற்றி பெரும் என்று மஞ்சள் வர்ணத்தில் கோடிட்டு காட்டினர். அந்தோ பரிதாபம். குடிகாரன் இந்த தேர்தல் தனக்கு ஒரு திருப்புமுனை என்று சவடால் விட்டு திரிந்தான். மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் வழியில் தன் மனைவி தாக்கபட்டதாக ஒரு கபட நாடகம் நடத்தினான்.

இன்னொரு வருங்கால முதல்வரின் கட்சிக்கோ 1000 ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. அரிதாரம் பூசிவிட்டால் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு பின்னே இருந்தவர் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா. அம்மாவின் திருமங்கல வெற்றியை 80 கோடி ஹிந்துக்களும் கொண்டாடி மகிழ்வோம்.

அம்மாவின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட கோபால்சுவாமி, நரேஷ் குப்தா, ராமதாஸ் மற்றும் பல கோடி ஹிந்துக்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za