அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 20, 2007

சென்னை கூத்து (அ) சங்கமம்

பாரதத்தின் கலைகளும், கலாச்சாரமும் உலகப் பிரசித்தி பெற்றது. அவைகள் நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிப் பிணைந்து வருபவை. அவற்றில் முக்கியமானது கர்நாடக சங்கீதம். மும்மூர்த்திகள் கொண்ட அக்கலை உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றது. சென்னையில் வருடா வருடம் ஆண்டு இறுதியில் பல சபைகளில் சாஸ்திரீய சங்கீதமானது படைக்கப்பட்டு வருகின்றது. சங்கீத மழையில் நனைந்த மக்கள் நோய் நொடிகள் குறைந்து அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். சங்கீத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் சென்னைக்கு வருகின்றனர். திருவையாறு பகுதியில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை விழாவின் மூலம் எழும் சங்கீத மழையில் நனைந்து நம் தேவர்கள் உதிர்க்கும் ஆனந்த கண்ணீர்தான் காவிரி டெல்டா பகுதியில் மழையாக பொழிந்து நம் உழவர்களின் பசியினை போக்குகிறது.

கர்நாடக சங்கீதம் புகழ் பெற்று வளர்ந்து வருவதை கண்டு வயிறெரிந்த திராவிட நஞ்சுக்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் காலில் விழுந்து அழுதது. அந்த திம்மியும் தன் மகளை அரசியல் ஏணியில் ஏற்றி விடலாம் என்ற நினைப்பில் சென்னை சங்கமம் என்ற கூத்திற்கு ஏற்பாடு செய்தது. இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா. நாட்டுப்புற கூத்துக்களினால் என்ன நன்மை? அவற்றை யார் தம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? இதையெல்லாம் சற்று சிந்தித்து பாருங்கள். குடிசைகளில் வசிக்கும் குழந்தை கூட தொலைகாட்சிகளில் அழகாக கர்நாடக சங்கீதம் பாடுகின்றது. அடுக்கு மாடமாளிகைகளில் வசிக்கும் நம் குழந்தைகள் பறை அடித்து பாடினால் என்ன அபஸ்வரமாக இருக்கும் என்று யோசியுங்கள்.

நம் கலைமகள் என்ன செய்கின்றாள்? சாஸ்திரீய சங்கீதம் வாசிக்கின்றாளா அல்லது கரகம் எடுத்து ஆடுகின்றாளா. யோசியுங்கள் இந்துக்களே. கலைமகள் ஆசீர்வதித்து மும்மூர்த்திகள் வளர்த்த நம் பாரம்பரிய கலையினை நசுக்க இந்த சங்கமம் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. இது இப்படியே வளர்ந்தால் சங்கீத சபைகளில் கரகமும், காவடியும்தான் கடைசியில் மிஞ்சும். கலைவாணிக்கு உரிய மரியாதை கொடுத்து சபையில் தன் குரல் வளத்தால் நம்மை கட்டிப்போட்ட பெரும் பாடகர்களை மிரட்டி, வெட்ட வெளியில் பூங்காக்களில் தெருவில் வருவோருக்கும் போவோருக்கும் பாடி காண்பிக்க செய்தது சரியா? கலைமகள் கோபம் கொண்டு நம்மை சபித்தால் என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்.

எனவே 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து இந்த கூத்தினை புறக்கணிப்போம். நம் வாழ்விற்கும், வளத்திற்கும் ஏற்ற நம் பாரம்பரிய கலையான கர்நாடக சங்கீதத்தை மட்டும் ஆதரிப்போம் என்று உறுதி எடுங்கள். எல்லோரும் அவரவர் குழந்தைகளை பாட்டு வகுப்பிற்கு அனுப்பி நம் கலையினை வளருங்கள்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

இந்த கூத்தில் ஸ்ரீலங்காவில் இயங்கும் தீவிரவாதிகளை இணைத்து நமது தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது. சிலரை நேரடியாக குறிப்பிட வேண்டிவரும் என்பதால் அதை பற்றி இங்கே நான் எழுதப்போவதில்லை.

Sunday, March 18, 2007

அம்மான்னா அம்மாதான்


தமிழக மக்களின் துயர் துடைக்க, தன் உடல் துயரை பற்றி சிறிதளவேனும் சிந்திக்காமல் உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்த அம்மா வாழ்க.
(நன்றி - தினமலர்)

Thursday, March 15, 2007

தேசத்துரோகி No. 1

உலகிலேயே பல இன, பல மொழி மக்கள் ஒற்றுமையாக அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்து வரும் ஒரே நாடு நமது பாரதம் என்பது அனைவருக்கும் தெரியும். உலகப் போரின் காரணமாக ஐ.நா சபை என்ற ஸ்தாபனத்தை அமைக்கும் போது பாரத நாட்டின் பெருஞ் செல்வமான வேத சாஸ்திரங்களில் இருந்த அறிவுரைகளின் படிதான் அதன் கொள்கைகளை அமைத்தனர். இப்படி பாரதம் ஒரு வல்லரசாக இருப்பதை கண்டு பயந்த கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் நமது நாட்டில் இருக்கும் புல்லுருவிகளான திம்மிக்கள் மூலம் அவ்வப்போது ஏதாவது தொல்லைகளை ஏற்படுத்துவர்.

தமிழக மக்கள் கடவுளின் மொழியான சமஸ்கிரதத்தை அவமதித்ததின் மூலம் ஏற்பட்ட பாவத்தின் பலனாக ஒரு திம்மி இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டான். சரி, அது நமது ஊழ்வினை அனுபவிப்போம் என்று பார்த்தால், அவனது சேஷ்டைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அகில உலகமே போற்றிக் கொண்டாடும் நமது தேச ஒற்றுமையை கிண்டல் அடிக்கும் விதமாக ஒரு பதில் சொல்லி இருக்கின்றான் மைனாரிட்டி ஆட்சி புரியும் இந்த திம்மி.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஏற்க கர்நாடகா தயாராக இல்லை. தமிழ்த் திரைப்படங்களுக்குக் கூட அம்மாநிலத்தில் தடை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள கேரளா தயாராக இல்லை. சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்த போதிலும் அதையேற்க கேரளா தயாராக இல்லை. தமிழகத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க மேற்குவங்கம் தயாராக இல்லை. என்ன செய்யலாம்?

இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு "ஜே" போடலாம்.

இதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் கருணாநிதி என்பது அகில உலகத்திற்கே தெரியும். அனைத்து மக்களையும் அனுசரித்து போகும் பழக்கம் இல்லாத இந்த திம்மியால்தான் இந்த பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழகம் தவமிருந்து பெற்ற தங்கத் தலைவியாம் நம் அம்மாதான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை "ஜே" என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடுகின்றான் இந்த கயவன். "ஜே" என்ற எழுத்து அம்மாவைதான் குறிக்கும் என்பது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முதல் பிரிட்டானியா என்சைக்கிளோபீடியா வரை உறுதி செய்யப்பட்ட விஷயம் என்பதை அறியாத சிறுவனா இந்த திம்மி?

கருணாநிதியே உனக்கு ஒரு சவால். நீ உடனடியாக ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி தமிழகத்தின் நிரந்திர முதல்வரான எங்கள் அம்மாவை ஒரு நாள் ஆட்சியில் அமர்த்து. வேண்டுமானால் உள்துறை அமைச்சராக உன் மகனே இருந்து விட்டு போகட்டும். அம்மா ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று பார். காவிரி நீர் என்ன, கங்கை நீரையே குடங்களில் அடைத்து உன் குடும்பத்தின் தலையில் கட்டி அனுப்பி தமிழக மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைப்பார். அது மட்டுமா, அச்சுதானந்தன் பாதி கோட்டம் என்ன முழு கோட்டத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாலக்கோடு கோட்டம் முழுவதையும் நமக்கு அளிப்பார். அவரது சகாவான புத்ததேவ் கடல்சார் பல்கலைக்கழகம் என்ன ஹவுரா பாலத்தை வேண்டுமானாலும் கேளுங்கள் கழட்டி அனுப்பிவைக்கின்றோம் என்பார். இதை அனைத்தையும் செய்து காட்டும் ஆற்றல் பெற்றவர் நம் அம்மா ஒருவர்தான்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலர இந்துக்கள் அனைவரும் கெளபீனத்துடன் நிற்கும் நமது கார்த்திகேயனிடம் காவடி எடுத்து சென்று வேண்டுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Tuesday, March 13, 2007

மத (ஏ)மாற்றும் கருணாநிதி

பாரத தாயின் குழந்தைகளை கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் வெளிநாட்டில் இருந்து வெள்ளமென பாயும் பணத்தை கொண்டு மத மாற்றம் செய்து வந்தனர். அந்த கொடுஞ்செயலை பார்த்து மனம பதறிய அம்மா மதமாற்று தடை சட்டத்தை கொண்டு வந்தார். ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவா அதற்கு தன் முழு ஆசியினை வழங்கினார்.

இலவசம் மூலம் மக்களை ஏமாற்றி மைனாரிட்டியாக ஆட்சி புரியும் கருணாநிதி இப்போது என்ன செய்கின்றார் என்று பாருங்கள். சங்கம் வளர்த்த மதுரை கருணாநிதியின் புதல்வனால் நாள்தோறும் பின்னேற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. மதுரையை அழகிரிபுரம் என்று பெயர் மாற்றம் செய்ய இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் எழுப்ப முடிவு செய்ய பட்டுள்ளதாக ஒரு பறவை தெரிவிக்கின்றது.

மேலும் கிருத்துவ, முகமதிய தீவிரவாதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு இந்து என்று ஒரு பத்திரம் தருவதாக தகவல்கள் வந்துள்ளன. அப்படி பெயர் மாற்றம் செய்து கொண்ட தீவிரவாதிகள் காவிரி அன்னை நடனமிடும் டெல்டா பகுதிகளில் அந்தனர் வசித்த குடியிருப்புகளை மிரட்டல் மூலம் ஆக்கிரமித்து வருவதாக இணைய பெரியவர் ஒருவர் தெரிவிக்கின்றார். அதை நினைத்து நெஞ்சம் பதறுகின்றது.

தீவிரவாதிகளை மறைக்க வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் டாலர் பாய்ந்தோடி வருவதை கண்டு கொண்ட கருணாநிதியின் மகன் ஒரு பினாமி மூலம் இந்த மத மாற்றம் செய்யும் ஈன செயலை செய்து வருவதாக தெரிகின்றது. அவரை பிடித்து விசாரித்தால் எத்தனை கோடி இதன் மூலம் சேர்த்தார் என்ற விபரம் தெரியும். அது போன்ற தைரியமான செயலை "தைரியலட்சுமி" என்று சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட அம்மா ஒருவரினால்தான் முடியும். எனவே பாரதத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர ஆங்காங்கே தேவ மந்திரங்களை முழங்குங்கள்.

இந்துவாக இரு. ஜெய்ஹிந்த்.

Tuesday, March 06, 2007

நாராயண மூர்த்தியும் போதை மருந்தும்

காந்திஜியின் வழியில் பீடு நடை போடும் இந்தியாவின் ஒரே நடுநிலை நாளிதழான ஒரு பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. எப்போது உண்மையே பேசும் அந்த பத்திரிக்கை எப்போதும் ஜாதி, மதம் பார்க்காத பத்திரிக்கை. எனவே அந்த செய்தி உண்மையாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.

"சாப்ட்வேர்' நிறுவனங்களில் பணியாற்றும் இளம் இன்ஜினியர்களால் நாட்டில் பெரும் கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. புனே அருகே நடத்தப்பட்ட போதை விருந்து போல நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்த போதை விருந்துகளை, "சாப்ட்வேர்' நிறுவனங்களே நடத்துவதும் அம்பலமாகியுள்ளது.

இதே போல போதை விருந்து சென்னையிலும் நடந்திருக்கிறது. இதில், 25 ஆண்களை கைது செய்து, விடுவித்ததும் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களால் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சி வெடித்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐந்தாறு ஆண்டுகளாக, "சாப்ட்வேர்' இன்ஜினியர்களுக்கு தாறுமாறான சம்பளம் உயர்ந்துவிட்டது. இதையடுத்து "பி.பி.ஓ.,' என்று அழைக்கப்படும், "கால்சென்டர்களும்' நாடு முழுவதும் தொடங்கப்பட்டன.

இதில், பணியாற்றும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கைநிறைய சம்பளம் கிடைக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தாராளமான சம்பளத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல், பல்வேறு ஆடம்பர வாழ்க்கைக்கு தயாராகி விடுகின்றனர். கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் இன்ஜினியர்கள் ஓரிரு ஆண்டுகளில் தங்களது நிறுவனம் சார்பில் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கே உள்ள கலாசாரம் இன்னும் அவர்களை கெடுத்து அனுப்பி வைக்கிறது.

வெளிநாட்டில் இருந்து இங்கே வந்ததும், மீண்டும் சம்பளம் எகிறுகிறது. அப்பணத்தையும் வெளிநாட்டு கலாசாரத்தையும் இணைத்துக் கொண்டு வாழ்வதால், இந்தியாவின் கலாசாரம் பெரிதும் சீரழிகிறது. இந்த கலாசார சீரழிவுக்கு காரணம், "சாப்ட்வேர்' நிறுவனங்களே என்று குற்றம் சாட்டப்படுகின்றன.கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது என்பதால் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள அந்தந்த, "சாப்ட்வேர்' நிறுவனங்களே பலவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.இப்படி ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பீர், பிராந்தி, விஸ்கி என்று தொடங்கும்.

பிறகு, போதைப் பொருள் பழக்கத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தங்கள் விருப்பப்படி பெண்களை கட்டியணைத்து நடனமாடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி, "செக்ஸ்' வரை சென்று விடுகிறது.இது போன்ற போதை விருந்துகள் நாடு முழுவதும் நடக்கிறது. அப்படி நடந்த விருந்து தான் புனே சம்பவம். இச்சம்பவம் தமிழகத்தில் உள்ள பெற்றோர்களையும் கவலை அடையச் செய்துள்ளது. "சாப்ட்வேர்' நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வைத்து பெரும் கும்பல் போதை விருந்துகளை ஏற்பாடு செய்கிறது.

இந்தியாவின் எல்லா நகரங்களிலும் இது போன்ற போதை விருந்து நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமனாலியில் தான் அதிக அளவில் போதை விருந்து நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலும் இது போன்ற போதை விருந்து நடத்தப்பட்டு வந்தது.சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், இப்படி போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் 25 ஆண்களை மட்டும் போலீசார் கைது செய்து, விடுதலை செய்து விட்டனர். அந்த விருந்துக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். உள்ளே சென்று எதை வாங்கி சாப்பிட்டாலும், பணம் தர வேண்டும். அதில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும் என்று கூறப்படுகிறது. சென்னையில் நடந்த போதை விருந்தில் பெண்களும் பங்கேற்றுக் கொண்டனர். ஆனால், போலீசார் இளம் பெண்களை மட்டும் கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.மத்திய, மாநில அரசுகளின் கடும் சட்ட திட்டமும், போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளும் தான் இதுபோன்ற கலாசார சீரழிவுகளை தடுக்க முடியும் என்பதே கவலை அடைந்துள்ள பெற்றோர்களின் கருத்து.

செய்தி கிடைத்த இடம்

மேலே குறிப்பிட்டுள்ள செய்தி உண்மையா? ஆம் எனில், நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை என்ன செய்யலாம்? இது நம் பாரத தேசத்திற்கு விடப்பட்டுள்ள ஒரு அறைகூவல். தேசப்பற்றுள்ள பதிவர்கள் இதை பற்றி விரிவாக விவாதிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

நாட்டை துண்டாடும் திராவிடம்

பாரத தேசத்தில் 80 கோடி இந்துக்களும் வேதங்கள் சொல்லியபடி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. கிருத்துவ மிசநரிகளிடம் பெட்டி வாங்கிய திராவிட நஞ்சுக்கள் நாட்டை துண்டாட அவ்வப்போது சில காரியம் செய்வார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டை மைனாரிட்டி ஆட்சி செய்யும் திம்மி தண்ணீர் பிரச்சனையை கிளப்பி விட்டது. திராவிட கொள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பு புரண்டு ஓடிய காவிரி, முல்லை பெரியார் மற்றும் பாலாற்றில் இப்போது தண்ணீர் இல்லை. ஏன் இப்படி நடக்கின்றது. இதெற்கெல்லாம் ஈ.வெ.ராவும் அவனின் சிஷ்ய கோடிகளுமே காரணம் என்கிறார் வளைகுடா நாட்டில் வசிக்கும் ஒர் அறிஞர்.

ஆகண்ட பாரதமாக இருந்த நம் தேசத்தை மொழியின் பெயரால் துண்டாக்கினான் கிருத்துவன். மிசநரிகள் என்ன செய்தாலும் தங்கள் ஒற்றுமையை எப்போதும் வெளிக்காட்டும் குணம் கொண்டவர் நம் மக்கள். நம் தேசத்தில் தண்ணீர் பங்கீட்டு பிரச்சனை என்பது கருணாநிதி பிறக்கும் வரை கேள்வி படாத ஒன்றாகும். சரி தமிழ்நாட்டோடு போய்விடும் என்று பார்த்தால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள திம்மி இங்கே உள்ள இன்னொரு திம்மியிடம் சொல்லி பஞ்சாப், அரியானா இடையே தண்ணீர் பிரச்சனையை கிளப்பி விடுகின்றது. இதை பற்றி விரிவான செய்தியை இங்கே படியுங்கள்.

இது போல நம் நாட்டை துண்டாட திட்டமிடும் திம்மிக்களிடம் இருந்து 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம். இதற்காக நாம் அனைவரும் ஆங்காங்கே அசுவமேத யாகம் செய்வோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za