சென்னை கூத்து (அ) சங்கமம்
பாரதத்தின் கலைகளும், கலாச்சாரமும் உலகப் பிரசித்தி பெற்றது. அவைகள் நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிப் பிணைந்து வருபவை. அவற்றில் முக்கியமானது கர்நாடக சங்கீதம். மும்மூர்த்திகள் கொண்ட அக்கலை உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றது. சென்னையில் வருடா வருடம் ஆண்டு இறுதியில் பல சபைகளில் சாஸ்திரீய சங்கீதமானது படைக்கப்பட்டு வருகின்றது. சங்கீத மழையில் நனைந்த மக்கள் நோய் நொடிகள் குறைந்து அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். சங்கீத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் சென்னைக்கு வருகின்றனர். திருவையாறு பகுதியில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை விழாவின் மூலம் எழும் சங்கீத மழையில் நனைந்து நம் தேவர்கள் உதிர்க்கும் ஆனந்த கண்ணீர்தான் காவிரி டெல்டா பகுதியில் மழையாக பொழிந்து நம் உழவர்களின் பசியினை போக்குகிறது.
கர்நாடக சங்கீதம் புகழ் பெற்று வளர்ந்து வருவதை கண்டு வயிறெரிந்த திராவிட நஞ்சுக்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் காலில் விழுந்து அழுதது. அந்த திம்மியும் தன் மகளை அரசியல் ஏணியில் ஏற்றி விடலாம் என்ற நினைப்பில் சென்னை சங்கமம் என்ற கூத்திற்கு ஏற்பாடு செய்தது. இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா. நாட்டுப்புற கூத்துக்களினால் என்ன நன்மை? அவற்றை யார் தம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? இதையெல்லாம் சற்று சிந்தித்து பாருங்கள். குடிசைகளில் வசிக்கும் குழந்தை கூட தொலைகாட்சிகளில் அழகாக கர்நாடக சங்கீதம் பாடுகின்றது. அடுக்கு மாடமாளிகைகளில் வசிக்கும் நம் குழந்தைகள் பறை அடித்து பாடினால் என்ன அபஸ்வரமாக இருக்கும் என்று யோசியுங்கள்.
நம் கலைமகள் என்ன செய்கின்றாள்? சாஸ்திரீய சங்கீதம் வாசிக்கின்றாளா அல்லது கரகம் எடுத்து ஆடுகின்றாளா. யோசியுங்கள் இந்துக்களே. கலைமகள் ஆசீர்வதித்து மும்மூர்த்திகள் வளர்த்த நம் பாரம்பரிய கலையினை நசுக்க இந்த சங்கமம் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. இது இப்படியே வளர்ந்தால் சங்கீத சபைகளில் கரகமும், காவடியும்தான் கடைசியில் மிஞ்சும். கலைவாணிக்கு உரிய மரியாதை கொடுத்து சபையில் தன் குரல் வளத்தால் நம்மை கட்டிப்போட்ட பெரும் பாடகர்களை மிரட்டி, வெட்ட வெளியில் பூங்காக்களில் தெருவில் வருவோருக்கும் போவோருக்கும் பாடி காண்பிக்க செய்தது சரியா? கலைமகள் கோபம் கொண்டு நம்மை சபித்தால் என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்.
எனவே 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து இந்த கூத்தினை புறக்கணிப்போம். நம் வாழ்விற்கும், வளத்திற்கும் ஏற்ற நம் பாரம்பரிய கலையான கர்நாடக சங்கீதத்தை மட்டும் ஆதரிப்போம் என்று உறுதி எடுங்கள். எல்லோரும் அவரவர் குழந்தைகளை பாட்டு வகுப்பிற்கு அனுப்பி நம் கலையினை வளருங்கள்.
வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.
இந்த கூத்தில் ஸ்ரீலங்காவில் இயங்கும் தீவிரவாதிகளை இணைத்து நமது தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது. சிலரை நேரடியாக குறிப்பிட வேண்டிவரும் என்பதால் அதை பற்றி இங்கே நான் எழுதப்போவதில்லை.
கர்நாடக சங்கீதம் புகழ் பெற்று வளர்ந்து வருவதை கண்டு வயிறெரிந்த திராவிட நஞ்சுக்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் காலில் விழுந்து அழுதது. அந்த திம்மியும் தன் மகளை அரசியல் ஏணியில் ஏற்றி விடலாம் என்ற நினைப்பில் சென்னை சங்கமம் என்ற கூத்திற்கு ஏற்பாடு செய்தது. இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா. நாட்டுப்புற கூத்துக்களினால் என்ன நன்மை? அவற்றை யார் தம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? இதையெல்லாம் சற்று சிந்தித்து பாருங்கள். குடிசைகளில் வசிக்கும் குழந்தை கூட தொலைகாட்சிகளில் அழகாக கர்நாடக சங்கீதம் பாடுகின்றது. அடுக்கு மாடமாளிகைகளில் வசிக்கும் நம் குழந்தைகள் பறை அடித்து பாடினால் என்ன அபஸ்வரமாக இருக்கும் என்று யோசியுங்கள்.
நம் கலைமகள் என்ன செய்கின்றாள்? சாஸ்திரீய சங்கீதம் வாசிக்கின்றாளா அல்லது கரகம் எடுத்து ஆடுகின்றாளா. யோசியுங்கள் இந்துக்களே. கலைமகள் ஆசீர்வதித்து மும்மூர்த்திகள் வளர்த்த நம் பாரம்பரிய கலையினை நசுக்க இந்த சங்கமம் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. இது இப்படியே வளர்ந்தால் சங்கீத சபைகளில் கரகமும், காவடியும்தான் கடைசியில் மிஞ்சும். கலைவாணிக்கு உரிய மரியாதை கொடுத்து சபையில் தன் குரல் வளத்தால் நம்மை கட்டிப்போட்ட பெரும் பாடகர்களை மிரட்டி, வெட்ட வெளியில் பூங்காக்களில் தெருவில் வருவோருக்கும் போவோருக்கும் பாடி காண்பிக்க செய்தது சரியா? கலைமகள் கோபம் கொண்டு நம்மை சபித்தால் என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்.
எனவே 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து இந்த கூத்தினை புறக்கணிப்போம். நம் வாழ்விற்கும், வளத்திற்கும் ஏற்ற நம் பாரம்பரிய கலையான கர்நாடக சங்கீதத்தை மட்டும் ஆதரிப்போம் என்று உறுதி எடுங்கள். எல்லோரும் அவரவர் குழந்தைகளை பாட்டு வகுப்பிற்கு அனுப்பி நம் கலையினை வளருங்கள்.
வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.
இந்த கூத்தில் ஸ்ரீலங்காவில் இயங்கும் தீவிரவாதிகளை இணைத்து நமது தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது. சிலரை நேரடியாக குறிப்பிட வேண்டிவரும் என்பதால் அதை பற்றி இங்கே நான் எழுதப்போவதில்லை.