அம்மான்னா சும்மாவா?

Wednesday, January 18, 2012

"சீ"மான் ஒழிக‌

பார‌த‌ ம‌க்க‌ள் ஒற்றுமையாக‌ ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ச‌கோத‌ர‌பாச‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுட்டி காட்டி இருக்கின்றேன். பார‌த‌த்தாயை கூறு போட்டு விற்க‌ கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளும், ஜிகாதிக‌ளும், திராவிட‌ திம்மிக்க‌ளும் முய‌ன்று வ‌ருவ‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. ச‌மீப‌த்தில் ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் இந்த‌ முய‌ற்சிக‌ளை ப‌ற்றி ஒரு புத்த‌க‌த்தினை வெளியிட்டு உள்ளார். அதை 80 கோடி ஹிந்துக்க‌ளும் வாங்கி ப‌டிக்க‌ வேண்டும்.

ஒற்றுமையாக‌ வாழும் ஹிந்துக்க‌ள் இடையே முல்ல‌ பெரிய‌ ஆறு என்று ஒரு பிர‌ச்ச‌னையை இந்த‌ க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் கிள‌ப்பி விட்ட‌து. தீய‌ச‌க்தியும் கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு இணைக்க‌ வேண்டும் என்று உள‌றினான். இப்போது மீண்டும் ஒரு பிரிவினைவாதி ஒரு வெடியை கொளுத்தி போட்டு உள்ளான்.

Simon என்ற‌ சீமான் ந‌ம் சாஸ்தாவை புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என்று கூவியுள்ளான். ப‌ல‌ நாட்க‌ள் க‌டும் விர‌த‌ம் இருந்து சாஸ்தாவை வ‌ழிப‌ட‌ "க‌ல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று அவ‌ர் புக‌ழ் பாடி செல்லும் ஹிந்துக்க‌ளை த‌டுக்க‌ இந்த‌ சீமான் யார்?

த‌ன் ப‌க்த‌ர்க‌ளுக்கு ஒரு வேத‌னை என்றால் அதை த‌டுக்க‌ ந‌ம் சாஸ்தா வ‌ர‌மாட்டாரா என்ன‌? அப்ப‌டி வ‌ராவிட்டால் அது அந்த‌ ப‌க்த‌னின் ஊழ்வினை என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். மேலும் அந்த‌ ப‌க்தன் த‌ன் விர‌த‌ங்க‌ளை ஒழுங்காக‌ க‌டைபிடித்து இருக்க‌மாட்டான் என்ப‌தும் ந‌ம‌க்கு புரியும்.

ஆக‌வே சீமானே நீ உன் வேலையை பார்த்து கொண்டு செல். அநாவ‌சிய‌மாக‌ ஹிந்துக்க‌ள் சீண்டாதே என்று 80 கோடி ஹிந்துக‌ளின் சார்பில் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றேன். நீ திருந்தாவிட்டால் புழ‌லில் க‌ளி சாப்பிட‌ நேரிடும் என்ப‌தை புரிந்துகொள்.


வாழ்க‌ ஹிந்துக்க‌ள். சாமியே ச‌ர‌ண‌ம்.

1 Comments:

  • Good one. I also thought to write the same one. Pointed everything very perfectly.

    By at 1/18/2012 1:31 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za