அம்மான்னா சும்மாவா?

Monday, January 09, 2012

அந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி

பார‌த‌ தேச‌மான‌து எப்ப‌டி கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளாலும், ஜிகாத்துக‌ளினாலும், ஈவேராவின் குண்ட‌ர்ப‌டையாலும் அல்ல‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌தை ஸ்ரீமான் அர‌விந்த‌ன் அற்புத‌மாக‌ ஒரு புத்த‌க‌த்தின் மூல‌ம் மீண்டும் விள‌க்கி உள்ளார். பார் புக‌ழும் அந்த‌ண‌ர், ம‌த‌ராஸ் மாகாண‌த்தில் அய்ரோப்பிய‌ யூத‌ர்க‌ள் போல‌ அக‌திக‌ள் ஆகின‌ர் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. யார் இந்த‌ ச‌திசெய‌லுக்கு கார‌ண‌ம் என்ப‌தை இந்த‌ புத்த‌க‌ம் அழ‌காக‌ விள‌க்குகிற‌து.

இந்த‌ புத்த‌க‌த்திற்கு கிடைத்த‌ வ‌ர‌வேற்பை க‌ண்டு ச‌கிக்க‌ முடியாத‌ ஈவேரா கும்ப‌ல் வ‌ழ‌க்க‌ம் போல‌ த‌ன் இட‌த்தில் கூட்ட‌ம் கூட்டி ஏதேதோ பித‌ற்றின‌ர். நேற்று ந‌ட‌ந்த‌ கூட்ட‌த்திற்கு ந‌ண்ப‌ருட‌ன் சென்று இருந்தேன். வீர‌ம‌ணி பேசினார். அவ‌ர் ஈவேராவை மேற்கோள் காட்டி பேசுவார், ம‌த‌துவேஷிக‌ளை மேற்கோள் காட்டி பேசுவார் என்று நினைத்தால் அது புஸ்வான‌மாகிவிட்ட‌து.

நாள் தோறும் ந‌ட‌க்கும் எல்லா கெட்ட‌ காரிய‌ங்க‌ளுக்கு அந்த‌ண‌ர்தான் கார‌ண‌ம் என்று பேசும் ஈவேரா கும்ப‌ல் இந்த‌ கூட்ட‌த்தில் ந‌ம்ம‌வ‌ரின் புத்த‌க‌ங்க‌ளைதான் மேற்கோள் காட்ட‌ வேண்டிய‌ நிலைமைக்கு த‌ள்ளபட்ட‌ன‌ர். மேலும் வீர‌ம‌ணி அவ‌ரின் ஆசிரிய‌ரான‌ ந‌ம்ம‌வ‌ரை புக‌ழோ புக‌ழ் என்று புக‌ழ்ந்து விட்டார். என்னடா இது நாம் இருக்கும் இட‌ம் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோவிலா அல்ல‌து ஈவேரா திட‌லா என்று ஒரு நிமிட‌ம் திகைத்துவிட்டேன். அய்யோ பாவ‌ம் ந‌ம்மவ‌ரை தூற்ற‌ கூட‌ ந‌ம்ம‌வ‌ரின் புத்த‌க‌ங்க‌ளைதான் உப‌யோக‌ப‌டுத்த‌ வேண்டிய‌ நிலைக்கு ஈவேரா கும்ப‌ல் வ‌ந்து விட்ட‌து.

வாழ்க‌ அந்த‌ண‌ர். வீழ்க‌ ஈவேரா.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za