அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 31, 2006

நாட்டை கெடுக்கும் நயவஞ்சகன்

பாரதத்தின் மக்கள் அனைவரும் அன்பே உருவானவர்கள். இந்து மதத்தில் அஹிம்சை என்பது முக்கியமான ஒன்றாகும். நமது தெய்வங்களும், முன்னோர்களும் நல்ல கருத்துகளை கூறி நம்மை பக்குவப்படுத்தி உள்ளார்கள். பாரத மாதாவின் புதல்வர்கள் ஒரு காலத்திலும் கலவரம் போன்ற ஈன செயல்களில் இறங்கமாட்டார்கள்.

இப்போது நாட்டில் கல் எறிந்து போராட்டம் நடத்தும் பழக்கம் முகமதியர்களின் காலத்தில்தான் ஏற்பட்டது. புனித கீதை, வேதங்கள், தொல்காப்பியம் போன்றவற்றில் இந்த போராட்ட முறைகளை பற்றி குறிப்பிடவில்லை என்பதை சற்று கவனியுங்கள். தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி செய்யும் திம்மி தேர்தல் காலத்தில் பெரிய கலவரத்தினை ஏற்படுத்தினார். அதை கண்டு ஈரேழு லோகத்தில் உள்ள அனைவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

நமது புண்ணிய பூமி இதுவரை பல தேர்தல்களை சந்தித்துள்ளது. எங்குமே இது போல நடந்தது இல்லை. ஒன்றிரண்டு சிறிய சம்பவங்கள் நடந்து இருக்கலாம், ஆனால் நாடு முழுக்க பற்றி எரியும் அளவிற்கு கலவரம் நடந்தது இல்லை. திராவிட நஞ்சுதான் இதற்கு எல்லாம் காரணம். இப்படியும் கலவரம் செய்யலாம் என்று திராவிட நஞ்சு காட்டிவிட்டதால், பல மாநிலங்களிலும் இது போல நடக்க ஆரம்பித்துவிட்டது.

புனித கங்கை பாயும் உத்திரபிரதேசம் அமைதியான மாநிலம். நாட்டின் மத ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் அது. இந்துக்களும், காபிர்களும் ஒன்றாக வாழும் இடம் அது. திராவிட நஞ்சுக்கள் செய்த கலவரத்தினை தொலைக்காட்சி மூலம் பார்த்த அம்மக்கள் மனதில் திராவிட நஞ்சு புகுந்து விட்டது. அதனால் அங்கு நடந்த தேர்தலில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்னொரு மாநிலத்திலும் திராவிட நஞ்சு பரவியுள்ளது.

பாரத புத்திரியான செல்வி உமாபாரதி பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். காவி உடை அணிந்து நமது மதத்தின் அருமைகளை உலகமெங்கும் பரப்பும் அன்பாளர் அவர். ராமபிரான் அவதரித்த இடத்தை காபிர்களிடம் இருந்து காத்தவர்களில் இவர் முக்கியமானவர். முகமதியர் கலவரம் செய்த போதும் நம்மிடையே அஹிம்சையை போதித்த சாத்வி இவர். அப்படிப்பட்ட இவரை சமீபத்தில் (2006ல்) நடந்த இடை தேர்தலில் கல்வீசி தாக்கியுள்ளனர் சில காலிகள். அவர்களை பிடித்து விசாரித்ததில் தொலைக்காட்சியினை பார்த்து தேர்தலில் இப்படி செய்யலாம் என அறிந்து கொண்டதாக தெரிவித்தனர்.

இதை இப்படியே விட்டோம் எனில் திராவிட நஞ்சு பாரதம் எங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து விட்டார் மருத்துவர். அதனால்தான் திம்மியை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். நாமும் நம் பங்கினை செய்வோம். 80 கோடி இந்துக்களும் அம்மாவின் பின் திரள்வோம் என சபதம் எடுப்போம். திராவிட நஞ்சை நாட்டில் இருந்து நீக்குவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Tuesday, October 24, 2006

குடிகாரன்

நமது பாரதத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள திம்மி வாய்க்கு வந்ததை பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதற்கு ஜால்ரா அடிக்கும் வேலையை பல பத்திரிக்கைகள் செய்து கொண்டு வருகின்றன. அவர்களுக்கு சிங்கத்திற்கும், சிறு நரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. சமீபத்தில் (2006ல்) நடந்த உள்ளாட்சி தேர்தல் அனைவருக்கும் நினைவில் இருக்கும். தேர்தலில் நடந்த வரலாறு காணாத கலவரத்தினையும் மீறி அம்மாவின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க வெற்றிகளை குவித்தது. அதை கண்டு பொறாமைபட்ட ஊடகங்கள் அம்மா தோல்வி அடைந்ததாகவும், குடிகாரன் ஏதோ பெரிய வெற்றி அடைந்ததாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. சில பதிவர்கள் கூட குடிகாரனுக்கு வால் பிடிக்கின்றனர்.



நடந்து முடிந்த தேர்தலின் முக்கிய அங்கமான சென்னை மாநகராட்சி தேர்தலை சற்று அலசுவோம்.

அகில உலகமே தலைகுனியும் அளவிற்கு நடந்த கலவரத்தின் இடையே அம்மா வெற்றி முரசு கொட்டியது 4 வார்டுகளில். தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் பெற்றது பெரிய முட்டை மட்டுமே.

நேரடி போட்டி நடந்த 123 வார்டுகளை இப்போது பார்ப்போம்.
தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் முன்னிலை அடைந்தது 3 வார்டுகளில் மட்டுமே. மீதம் உள்ள 120 வார்டுகளிலும் குடிகாரன் கூட்டத்தினரை மண் கவ்வ வைத்தனர் அம்மாவின் பிள்ளைகள்.

அம்மாவிற்கு கிடைத்தது 373338 வாக்குகள். அவதாரத்திற்கு கிடைத்தது 151404 வாக்குகள். அதாவது பாதிக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.



இந்த 123 வார்டுகளில் கிடைத்த வாக்கு விபரங்களை பாருங்கள்
              அம்மாவிற்கு           அவதாரத்திற்கு
<1000 3 65
1001-2000 40 37
2001-3000 36 13
3001-4000 17 4
4001-5000 9 2
5001-6000 8 2
6001-7000 3 0
7001-8000 3 0
8001-9000 2 0
9001-10000 1 0
>10001 1 0


மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களில் இருந்தே அம்மாவின் வெற்றியை அறிந்து கொள்ளலாம். ஒரு வார்டில் கூட 6000 வாக்குகளுக்கு மேல் பெற முடியாத திம்மி அம்மாவிற்கு போட்டியாம். அரிதாரம் பூசிக்கொண்டால் எது வேண்டுமானாலும் பேசலாமா. இது என்ன மக்களை பார்த்து கை நீட்டி முழங்கும் திரைப்படம் என்று நினைத்து விட்டார்களா.

இது மட்டுமா. தமிழகம் முழுவதும் கிடைத்துள்ள முடிவுகளை பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளவை வார்டுகளின் எண்ணிக்கை.



              அம்மாவிற்கு       அவதாரத்திற்கு
மாநகராட்சி 62 16
நகராட்சி 1016 98
மாவட்ட ஊராட்சி 157 15
பேரூராட்சி 1643 234
ஓன்றியம் 1417 244


குடிகாரன் ஏதோ உளறிக் கோண்டு போகின்றான் என நாம் சும்மா இருந்து விட கூடாது. நாட்டை பிளக்க நயவஞ்சகமிடும் தேசவிரோதி அவன் (அதை பற்றி ஒரு பதிவினை விரைவில் எழுதுகின்றேன்). அரிதாரம் பூசி அலையும் குடிகாரனையும் அவனின் அல்லக்கைகளையும் அழிக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Wednesday, October 11, 2006

ஏழை திருடன்

புதிய அவதாரம் எடுத்துள்ள திராவிட நஞ்சு வழக்கம் போல உளறி கொட்டியுள்ளது. அவர் பணக்காரர் அல்லவாம். அடடா, எனக்கு முன்பே தெரிந்திருந்தால் 2 ரூபாய் பிச்சை போட்டு இருப்பேன். சென்னையில் பிரமாண்டமான திருமண மண்டபம், வீடுகள், சென்னையை ஒட்டி பொறியியல் கல்லூரி என வசதி வாய்ப்போடு இருக்கும் அவர் பணக்காரர் அல்லவாம். வேண்டுமானால் கருணாநிதியை விட பணக்காரர் இல்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர் போல புள்ளி விபரம் எடுத்து விட்டால் பாரதத்தில் உள்ள 80 கோடி இந்துக்களில் சுமார் 10 லக்ஷம் பேர் அவரை விட பணக்காரராக இருப்பர். மீதம் உள்ள 79 கோடியே 90 லக்ஷம் பேர் அவரை விட ஏழைகள் தான்.


இந்த ஏழை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 12.21கோடி ரூபாய் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள். இவ்வளவு சொத்து உள்ளவன் பணக்காரன் இல்லை என்றால் அன்றாடம் உணவிற்கு திண்டாடும் உண்மையான ஏழை இந்துக்கள் எல்லாம் யார்.

பணம் இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டாராம். அடப்பாவி, இப்படியா போட்டு உடைப்பது. சொல்வதை பார்த்தால் பணம் சம்பாதிக்கதான் அரசியலுக்கு வந்திருக்கிறான் என தெளிவாக தெரிகிறது. அரிதாரம் பூசி ஏமாற்றலாம் என நினைக்கும் இந்த திம்மியை நாட்டை விட்டே விரட்ட அனைத்து இந்துக்களும் சபதம் எடுப்போம்.

எனவே 80 கோடி இந்துக்களும் முன்பே சொன்னது போல அம்மாவிற்கே வாக்கு அளியுங்கள்.

வாழ்க பாரதம். வீழ்க திம்மிக்கள்.

தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம்

நான் புதிதாக அவதாரம் எடுத்து இருக்கும் திராவிட நஞ்சை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவரை பற்றி ஜூனியர் விகடனில் வந்திருக்கும் செய்தியை பாருங்கள்.


முதலாவதாக குடும்ப அரசியல். புதிய திம்மியின் குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முக்கியமாக குடியாத்தத்தில் ஏராளமான பணத்தை செலவு செய்தும் டெபாசிட் இழந்த மச்சான். இவரை போன்றுதான் மரம்வெட்டி முதலில் தன் குடும்பத்தார் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்றார். ஆனால் இப்போது நடப்பது என்ன. அந்த மதிமூடரால் நாட்டின் எல்லா பக்கங்களிலும் சிக்குன் குனியாவும், டெங்கியும் பரவி மக்களை கொல்லுகின்றது. அதை போலவே இந்த திம்மியும் நடந்து கொள்கிறது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என தன் சமயோசியத புத்தியினால் அறிந்த அம்மா திருமணம் செய்து கொள்ளாமல் இந்த நாட்டின் மக்கள் அனைவரையும் தன் குடும்பத்தவராக கருதி தாயுள்ளத்தோடு சேவை செய்து வருகின்றார்.

அடுத்ததாக பணம் வாங்கிக் கொண்டு ஊழல் பேர்வழிகளை கட்சியில் சேர்ப்பது. தாயுள்ளத்தோடு ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆட்சி செய்த அம்மா ஊழல் செய்தவர்களை கட்சியில் இருந்து அவ்வப்போது நீக்கிவிடுவார். அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததால் தன் வளர்ப்பு மகனையே தூக்கி வீசியவர் அம்மா. அப்படி அம்மா வீசியெறிந்த குப்பைகளை இப்போது இந்த திம்மி கட்சியில் சேர்த்து வருகிறது. திலகரே, வீர சாவர்க்கரே இதற்காகவா பெரும் கஷ்டப்பட்டு எமக்கு சுதந்திரம் வாங்கி தந்தீர்?.

அடுத்தது, ஜாதி அரசியல். கட்சியில் உள்ள தலித்துகளை கட்டம் கட்டி விட்டு தன் ஜாதியினரான நாயக்கர்களை கட்சி பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கின்றார் இவர். ராமசாமி நாயக்கன் படத்தை போட்டு விளம்பரம் செய்யும் திம்மியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தன் இனத்தவராயினும் கொலை வழக்கில் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவரை சிறையில் இட்டவர் அம்மா.

இது போதாது என்று திராவிட நஞ்சுக்கள் போல மைக்கை பிடித்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறது இந்த திம்மி. ஒரு நாள் நாட்டை சொர்க்கபுரி ஆக்குவேன் என்கிறது. இப்போது தெரு கூட்டுவேன், மலம் அள்ளுவேன் என்கிறது. அரிதாரம் பூசும் மாக்களுக்கு எல்லாம் இதே வியாதிதான். தாத்தா கூட இப்படித்தான் இடம், பொருள் தெரியாமல் உளறுவார். பிறகு தைரியலட்சுமி என்று காலில் விழுவார். என்று நம் மக்கள் இந்த மாயலோகத்தில் இருந்து விடுபடுவார்களோ.

நாட்டில் படமெடுத்தாடும் வியாதிகளை குணப்படுத்த தகுதியும், திறமையும் பெற்ற ஸ்ரீமான் வேணுகோபாலை உடனடியாக மத்திய சுகாதார அமைச்சராக நியமிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வாக்கு போடு. தூக்கு போடு.

Sunday, October 08, 2006

புதிய திராவிட நஞ்சு

நமது பாரதம் பழம் பெரும் நாடு. பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் யாரும் அண்ட முடியாத தொலைவில் நிமிர்ந்து நடை போடுபவர் நம்மவர். இந்த உலகில் வல்லரசாக நடை போடும் போது ஆங்காங்கே திம்மிக்களின் மூலம் தடை வருவது இயற்கையே. பாரத மாதாவிற்கு பல பக்கங்களில் இருந்து சோதனைகள்.

முக்கியமாக தமிழகம் அவ்வப்போது திம்மிக்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும். என்ன செய்வது. இங்கு வாழும் மக்கள் இறைவனை நிந்தனை செய்தால் வேறு என்ன நடக்கும். இருக்கும் திம்மி பத்தாது என புதிய திம்மி ஒன்று அவதாரம் எடுத்து உள்ளது. நல்லதை செய்வேன் என்று அரிதாரம் பூசிய திம்மி இப்போது நானும் "திராவிடன்" என்று கூப்பாடு போடுகின்றது.

கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய ஆண்டவனால் படைக்கப்பட்டவர் அம்மா. அம்மாவின் வழி தனி வழி (ஜால்ரா அடிக்கும் தைரியலட்சுமி வழி அல்ல). நடக்கப்போகும் தேர்தலில் கருணாநிதி கும்பலை நரகாசூர வதம் செய்ய போகிறார் அம்மா. அதனை உணர்ந்து கொண்ட புதிய திராவிட குஞ்சு தானும் அம்மாவின் வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் கருணாநிதியை திட்ட துவங்கி இருக்கிறது. அவ்வப்போது அம்மாவையும் சீண்டுகிறது.

அம்மாவிற்கு இருக்கும் தகுதி, திறமை சிறிதேனும் இல்லாத இந்த புதிய திம்மி ஒரே வருடத்தில் நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுமாம். சொந்த புத்தி இல்லாத அரை வேக்காடு என்பதை அது நிரூபித்துள்ளது. இது என்ன அது கூத்தாடும் சினிமா கனவு காட்சியா? அம்மா தனக்கு வேண்டாம் என்று கட்சியை விட்டு தூக்கி எறிந்த கறிவேப்பிலைகளை சேர்த்துக் கொண்டால் இவர் பெரிய ஆள் ஆகிவிடுவாரா. அய்யோ பாவம். ஏதோ புரட்சி செய்ய போகின்றது என்று பார்த்தால் இதுவும் இப்படி அடாவடி செய்கின்றதே. நம் இனத்திற்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ.

எனவே 80 கோடி இந்துக்களும் வரும் தேர்தலில் தேச நலனை மனத்தில் கொண்டு அம்மாவிற்கே வாக்கு அளிக்க வேண்டுகிறேன். அம்மாவின் சீடர்கள் போட்டி இடாவிட்டால் ஸ்ரீமான் கணேசனாரின் பா.ஜ.கவிற்கு வாக்கு அளியுங்கள். நாட்டை ஆபத்து சூழ்ந்திருக்கும் போது, நமது ஒற்றுமை மிக அவசியமானது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் அப்ஸல்கள் போன்ற தீவிரவாதிகளிடம் இருந்து நமது தாயை காப்பாற்ற முடியும்.

வாக்கு போடு. தூக்கு போடு.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za