அம்மான்னா சும்மாவா?

Thursday, September 28, 2006

கைபிடித்ததால் கைவிட்ட பார்ப்பனர்

பாரதத்தில் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வசித்து வந்தனர். நம்மிடையே ஜாதி, மதம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவரவர் தங்களது கடமையை தொடர்ந்து செய்து வந்தனர். அதனால் கல்வி,கலை, இலக்கியம், கணிதம், மருத்துவம் போன்று எல்லா துறைகளிலும் உலகிலேயே சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.

அதனை பொறுத்துக்கொள்ள முடியாத கிருத்துவர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். நேரடியாக மோதினால் தோல்வி என்று தெரிந்து கொண்ட அவர்கள், சூழ்ச்சியினால்தான் நம்மை வெல்ல முடியும் என்று கருதி கிருத்துவ மெஷினிரிகளை அனுப்பி வைத்தனர். அப்படி வந்து இறங்கியவர் அவர்களுடன் கொண்டுவந்த கொடிய நோய்களான ஜாதி மற்றும் மதத்தினை நம் மக்களிடையே பரப்பினர். நம் நாட்டவரும் அதை விஷம் என்று தெரியாமல் பருகி இப்போது இருக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

கல்வி மற்றும் ஞானத்தில் தலை சிறந்து விளங்கியர்களை பார்த்து வயிறு எரிந்த திம்மி கூட்டம் ஒன்று தமிழகத்தில் உருவானது. அந்த கூட்டத்தின் செயலால் திறமையுள்ள அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேன்மக்களாய் இருந்த பிராமணர் இப்போது நவீன இந்தியாவின் தலித்துகளாக உருமாற்றம் செய்யப்பட்டனர். இதை பற்றி ஒரு நல்ல பதிவினை ஸ்ரீமான் ஜயராமன் சில மாதங்களுக்கு முன் இட்டார்.

ஜாதி பிரச்சனை என்றாலே பிராமணரை உடனே இழுக்கின்றனர். இப்போது இருக்கும் பிராமணர் அப்பாவிகள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் கடமைகள் உண்டு என்று வாழ்ந்து வருபவர்கள். தலித் தொட்டால் தீட்டு என்ற காலம் போய் இப்போது பிராமணர் தொட்டால் தீட்டு என்று வந்துவிட்டது.

தன் கையினை அம்மா பிடித்து தூக்கியதால் தீட்டு பட்டு விட்டது என்று கருதி ஒருவர் திம்மியின் கட்சிக்கு ஓடியுள்ளார்.


இவரை போன்ற இந்து மத விரோதிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு அவர்களை திருத்த முயற்சி எடுப்போம். திருந்தவில்லை என்றால் நாட்டில் உள்ள 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து அவர்களை நாட்டை விட்டு விரட்டுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Monday, September 25, 2006

திராவிட விஷங்களை வேர் அறுப்போம்.

நமது பாரதம் ஒரு புண்ணிய பூமி. அதில் அவதரித்தவர் அனைவரும் மகான்களே. பலர் நமது பாரம்பரியத்தின் பெருமை தெரியாது திம்மிக்களாக மாறிவிட்டனர். மகான்களாக இருந்தவர்களை திம்மியாக மாற்றும் செயலை செய்தவர்களில் முக்கியமானவர் ஈ.வே.ராமசாமி. அவரின் பக்தர்கள் இந்த தீய மற்றும் தேசவிரோத செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

திம்மிக்களின் பிடியில் இருந்து பாரதத்தை விடுவிக்க தேசத்தின் தியாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க என்று ஒரு உன்னதமான கட்சியினை அமைத்தனர். கட்சியின் பெரும் தூண்களாக ஸ்ரீமான் வாஜ்பேயி, நவீன இந்தியாவின் இரும்பு மனிதரான ஸ்ரீமான் அத்வானி. கிருத்துவ மெஷினரிகளின் போதனைகளில் இருந்து நமது இளைய சமுதாயத்தினை மீட்க பெரும் பாடுபடும் மகா பேராசிரியர் ஸ்ரீமான் ஜோஷி ஆகியோர் பாடுபட்டு வருகின்றனர். இவர்களின் தேசபற்றை கண்டு பாரத மக்கள் நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பினை அவர்களுக்கு அளித்தனர். அவர்களும் நீதி வழுவாது குற்றம் குறை காண முடியாத ஒரு சிறப்பான ஆட்சியை நமக்கு அளித்தனர். அதனை கண்டு வயிறு எரிந்த கிருத்துவர்களும், முஸ்லிம்களும் நாட்டினை தற்போது ரோம அரசாங்கத்திடம் அடகு வைத்து விட்டனர்.

நமது பூமியின் மூன்றாம் விடுதலை போரினை குமரி முனையில் இருந்து துவங்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அதற்கு பொறுத்தமான ஸ்ரீமான் கணேசனார் அவர்களை தமிழக தலைவராக நியமித்து உள்ளது. ஸ்ரீமான் கணேசனார் கண்ணியவாதி. பெரும் தியாகி. அன்பானவர். பண்பானவர். எளிமையானவர். அனைவரிடமும் ஜாதி, மதம் பாராமல் பழகும் ஒரு மகான். நிதி என்று பெயரில் வருவதால் திராவிட அரசியல்வாதி போல நடந்து கொண்டார் ஒரு பா.ஜ.க தலைவர். அவரை அன்போடு அழைத்து அவரின் குல பெருமைகளை விளக்கி அவரை நல்வழிப்படுத்திய பெருமகனார் இவர்.

ஸ்ரீமான் கணேசனாரின் பட்டாபிஷேக படத்தினை கீழே காணலாம்.

அவரின் தலைமையில் இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு திராவிட விஷங்களை அடியோடு வேர் அறுப்போம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Monday, September 18, 2006

தமிழகத்தை சீரழிக்கும் கருணாநிதி

நமது புண்ணிய பூமியான பாரதத்தில் பிறந்த அனைத்து புத்திரர்களும் புத்திரிகளும் கலாசாரத்தையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக பாவித்து வருபவர்கள். பாரதம் என்றாலே ஒழுக்கம் என்பதை தாங்கி கொள்ள முடியாத மேலை நாட்டினர் அவர்களது கலாசாரத்தினை படிப்படியாக நம்மிடையே பரப்பி வருகின்றனர். இந்த பாதக செயலுக்கு நமது நாட்டில் உள்ள திம்மிக்களும் உடன்பட்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாரதத்தில் புகழ் பெற்ற ஒரு நாளேட்டில் வந்த செய்தியினை சற்று பார்ப்போம். இந்த நாளேடு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலோடு நடை போட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது. இதில் அந்துமணி என்பவர் நாட்டிற்கும், நமக்கும் பெரும் பயன் அளிக்கும் பல நல்ல, அரிய கருத்துக்களை வாரந்தோரும் வழங்கி வருகின்றார். ஒரு சனிக்கிழமை மாலை அவருக்கு கடற்கரையில் ஏற்பட்ட அனுபவத்தினை இங்கு விளக்கி இருக்கின்றார்.

"ஏய்... அங்க பாரு...' என ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில் "பைக்' மீது இரண்டு இளைஞர்கள் அமர்ந்து இருப்பது, சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது... "ரெண்டு பசங்க உக்காந்து இருக்காங்க... அதுக்கு என்ன?' எனக் கேட்கவும், எரிச்சலான லென்ஸ் மாமா, தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, "வர, வர உனக்கு கண்ணே தெரியல... இதப் போட்டுக் கிட்டு பாரு...' எனக் கூறினார்.

இடது கையால் கண்ணாடியை ஒதுக்கி, மாமா சுட்டிக் காட்டிய திசையை இன்னும் கூர்ந்து நோக்கினேன்... அவர்களை நாங்கள் இருவரும் கூர்ந்து நோக்குவதை அறிந்துகொண்ட அவ்விளைஞர்களில் ஒருவன், தன் இரு கைகளையும் துாக்கி, பின் பக்கக் கழுத்தில் முட்டுக்கொடுத்து, நெஞ்சை நிமிர்த்தவும், "அய்யயோ... அது இளைஞன் அல்ல... இளைஞி!' என்பதை உணர்ந்தேன். அவர்கள் இருவரிடையே என்ன ஊடலோ தெரியவில்லை...

திடீரென "பைக்'கில் இருந்து இறங்கி, வேக, வேகமாக கடலை நோக்கி நடந்தாள் அந்த இளம் பெண்... "பைக்'கில் அசையாமல் அமர்ந்து இருந்தான் இளைஞன்! கடலை நோக்கி நடந்த இளம் பெண், அங்கிருந்த சிறுவர் விளையாடும் சறுக்கு மரத்தில் சாய்ந்து கொண்டாள்...

சிறிது நேரத்திற்கு பின், அவளை நோக்கி இளைஞன் செல்ல, அவனை, "அவாய்ட்' செய்து வேறு திசை நோக்கி சென்று மறைந்தாள் அப்பெண். "இவங்களுக்குள்ளே என்ன பிரச்னையா இருக்கும் மாமா? "கல்யாணம் செஞ்சுக்க'ன்னு அவள் கேட்க, இவன் "டபாய்'க்கிறானோ... இல்ல, வேறு ஏதும் பிரச்னை இருக்குமா?' எனக் கேட்டேன்...

"இந்த கால மெட்ராஸ் பொண்ணுங்களைப் பத்தி இன்னும் புரிஞ்சுக்கலை நீ... கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி இப்பல்லாம் பையன்கள்தாம் பொண்ணுங்கள கெஞ்சிக்கிட்டு பின்னாலே அலையறானுங்க... பொண்ணுங்க இப்ப விபரமாயிட்டாளுக... இவன விட பெட்டரா சம்பாதிக்கிறவன... பைக் மட்டும் வச்சிருந்தா கார் வச்சிருக்கிறவன... குட்டிக் கார் வச்சிருந்தா, பெரிய கார் வச்சிருக்கிறவன... அதிலேயே விலை கூடின கார் வச்சிருக்கிறவனத் தேடிப் போறாளுகப்பா... இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப விபரம்...' என பெரிய, "லெக்சர்' ஒன்று கொடுத்தார்.

அந்த நேரம், அப்பெண் மட்டும் தனியே நடந்து வந்து, மாமாவின் வண்டி எதிரே உள்ள பிளாட்பாரத்தின் கட்டை சுவரில் அமர்ந்தாள்... கருப்பு டெனிம் பேன்ட், லுாசான ஆண்கள் அணியும் மேல்சட்டை, "செக்டு' டிசைன்... ஆண்களைப் போலவே சிகை அலங்காரம் செய்திருந்தால், மாமாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவள், திடீரென எழுந்து, மாமா, அருகே வந்து, "உட் யூ மைன்ட் டான்சிங் வித் மீ அட் அம்பாசிடர் பல்லவா?' என கேட்டாள்...

அதாவது, அம்பாசிடர் பல்லவா என்ற ஹோட்டலில் டிஸ்கோ டான்ஸ் பார்ட்டியில் கலந்துகொண்டு, என்னோடு டான்ஸ் ஆட வருகிறீர்களா எனக் கேட்டாள்... எனக்கு ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி... நைசாக மாமாவின் தொடையில் கிள்ளி "கட்' பண்ணி விடுங்க... என குறிப்பு கொடுத்தேன்... ம்... ஹும்... மாமா லேசுப்பட்டவரா... விடவில்லை. "ஐ ஸா யூ யலாங் வித் யுவர் கம்பானியன் சம் டைம் பேக்...' என்றார். உன் கூட ஒரு பையனை கொஞ்ச நேரம் முன்னாலே பாத்தேனே என்பது அதன் பொருள்.

அவள் உடனே, "புல் ஷிட்' என வெறுப்புடன் கூறினாள். மாட்டுச் சாணி என்பது அதன் பொருள். தொடர்ந்து, அந்த பெண்ணின் குலம், கோத்ரம், சொந்த ஊர், அப்பா, அம்மா, உடன் பிறப்பு, படிக்கிறாளா, வேலை செய்கிறாளா என விலாவாரியாக பழங்காலப் பாணியில் மாமா கேட்க, அவள், "ஆர் யூ கோயிங் டு மேரி மீ ஓல்ட் மேன்... ஷûயர் வேஸ்ட் ஆப் டைம் டாக்கிங் அண்ட் இன்வைட்டிங் யூ' என கூறி, விடு, விடுவென நடந்து சென்று, தன் யமஹா பைக்கை ஒரு மிதி மிதித்து பறந்து சென்று விட்டாள்... மூக்கு உடைபட்ட மாமா, "என்னைக் கிழவன்னு சொல்லிட்டாப்பா... கல்யாணமா பண்ணிக்கப் போறன்னு கேட்டுட்டாப்பா... எங்கூடப் பேசுன டைம் வேஸ்ட்ன்னு சொல்லிட்டுப் போறாப்பா... அவள... அவள...' என்றபடியே வண்டியை கிளப்ப முயன்றவரை அமைதிப்படுத்தினேன்.


இதை படித்ததும் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கற்பினை போற்றும் கண்ணகிக்காக சிலை எழுப்பிய நாட்டில் இப்படி நடக்கலாமா? இப்படி நடந்து கொண்ட பெண் கண்டிப்பாக மூத்த வலைபதிவர்கள் சொன்னது போல கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பெண்மணியாக இருப்பார் என்பது எனது கருத்து. இதை போன்ற கால் சென்டர்களை நாடெங்கும் நடத்த அனுமதித்து வருகின்றார் கருணாநிதி என்ற திம்மி. மதறாஸ் சீரழிந்தது பத்தாது என்று திருச்சி, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் கணினி நிறுவனங்களை ஆரம்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் குலைக்க முயற்சி செய்யும் இந்த கருணாநிதி போன்றவர்களை ஆட்சியில் இருந்து விரட்ட இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Tuesday, September 05, 2006

கருணாநிதியின் சின்ன புத்தி

நமது புண்ணிய பூமியான பாரதத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். "சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா". அதை போல தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி நடந்து கொண்டுள்ளார்.

நமது பாரதத்தில் உள்ளோர் அனைவரும் சாஸ்திரங்களையும், வேதங்களையும் தம் உயிர் போல நினைத்து போற்றி வருபவர். அனைத்து மக்களும் நேரம் தவறாமை என்ற கொள்கையை கடைபிடித்து வருபவர். இதன் காரணமாக நாட்டில் உள்ள பொது போக்குவரத்து சாதனங்கள் அனைத்தும் அறிவித்த நேரத்தில் சரியாக வரும்/போகும். பாரதத்தில் பொது போக்குவரத்து வரும்/போகும் நேரத்தினை கொண்டு மணியை தெரிந்து கொள்ளலாம் என்ற நிலையில் பலர் கை கெடிகாரம் அணியும் பழக்கத்தினை விட்டு விட்டார்கள். கை கெடிகாரம் விற்பனை குறைந்த காரணத்தை ஆராய வந்த ஜப்பானியர் இதனால் வாய் பிளந்து நின்றனர். அவர்களது நாட்டில் இது நடக்குமா, செய்ய முடியுமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா தலைமையின் கீழ் உள்ள அ.இ.அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். "பரம்பரை யுத்தம்" என்று பிரகடனம் செய்து பல எதிரிகளை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் அடைக்கலம் புக வைத்தவர் அம்மா. சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு பெற்ற வெற்றியினை கண்டு எரிச்சல் அடைவோர் பலர் இங்கு உண்டு. அம்மாவின் வெற்றி நமது நாட்டு மக்களின் வெற்றி. எனவே அவர் மக்களுக்கு தன் ஆசியினை வழங்க முடிவு செய்து தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு செல்ல முடிவு செய்தார். அதை தடுக்கும் விதமாக திம்மியின் அரசு நடந்து கொண்டுள்ளது.

அம்மா மதுரை செல்ல நேற்று விமான நிலையம் வந்தார். 11:45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தை கருணாநிதி முடிந்த வரை தாமதப்படுத்த உத்தரவிட்டார். விமானம் 1 மணிக்கு தான் வரும் என்று சொல்லிவிட்டனர். பொதுவாக பயணம் தடை பட்டால் சாஸ்திர சம்பிரதாயங்களின் காரணத்தால் பயணத்தினை தவிர்த்து விடுவர். ஆனால் இது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களை விட மக்களை விரும்பும் அம்மா அவருக்கே உரிய தகுதி மற்றும் திறமையினால் வேறு ஒரு விமானத்தின் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டார். இந்த சமயோசித முடிவினை சற்றும் எதிர்பார்க்காத திம்மிகள் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டனர்.

ஏதேதோ பொய்யான காரணங்களை சொல்லி சுமார் 30 நிமிடங்கள் விமானம் பறப்பதை தடுத்து வைத்தனர். அதற்கு மேல் தடுத்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்ற காரணத்தால் விமானத்தினை போக அனுமதித்து உள்ளனர். அம்மா ஆட்சியில் அவர் பயணம் செய்யும் போது எப்போதும் மக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார். மக்கள் அனைவரும் அவரவர் கடமையினை செய்து கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை விமானத்தில் சுமார் 18 லட்சம் (1800000) மில்லி செகண்டுகள் அடைத்து வைத்து இருந்தது எவ்வளவு பெரிய பாதகமான செயல்.

அடைபட்டு கிடந்த அந்த 18 லட்சம் மில்லி செகண்டுகளில் அவர் நாட்டின் முன்னேற்றத்திற்காக எவ்வளவு பாடுபட்டு இருக்க முடியும் என்று தயவு செய்து யோசித்து பாருங்கள். இந்த பாதக செயலை செய்த திம்மியின் ஆட்சியை அகற்ற 80 கோடி இந்துக்களும் தொடர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za