அம்மான்னா சும்மாவா?

Monday, May 26, 2008

வெற்றி வெற்றி

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் எதிரிகளை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி தேசிய கட்சியான பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றி அவர்களின் ஆன்மீக மற்றும் தேச பற்றுகளின் விளைவால் கிட்டியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. விரைவில் ஸ்ரீமான் அத்வானி தலைமையில் பாரதம் முழுவதும் பா.ஜ.கவின் நல்லாட்சி மலரும். மைனாரிட்டி ஆட்சி நடைபெரும் இருண்ட தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கர்நாடக பா.ஜ.கவின் வெற்றியை காவிரி டெல்டா பகுதி ஹிந்துக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இனி 5 ஆண்டுகளுக்கு காவிரி நீர் பிரச்சனை இருக்காது என்று அப்பகுதி ஹிந்துக்கள் பெரும் மனநிறைவு கொண்டுள்ளனர். விவசாயம் நன்றாக நடந்தால் ஜிகாதி பூமியாக மாறி வரும் தஞ்சை பகுதி பழைய நிலைக்கு விரைவில் திரும்பும் என்று பெரியவர் ஸ்ரீமான் மலர்மன்னன் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளார். அதே போல சேலம், தருமபுரி ஹிந்துக்களும் ஒகனேக்கல் குடிநீர் விரைவில் கிட்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

பாரதம் எங்கும் மகிழ்ச்சியை தோற்றுவித்த இந்த வெற்றியை 80 கோடி ஹிந்துக்களும் கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்க பாரதம். வாழ்க அம்மா.

Tuesday, May 13, 2008

சீன ஏஜண்டுகளுக்கு ஓர் எச்சரிக்கை

பாரதத்தின் பெருமையை, பாரம்பரியத்தை சந்தர்பம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சீரழிக்க முயன்று வருபவர்களில் சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் முக்கியமானவர்கள். கிருத்துவ மிஷினரிகள், முகமதிய ஜிகாதிகள் மற்றும் சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரையும் வேரோடு சாய்க்க எல்லோரும் திரிசூலம் ஏந்துவோம் என்று நம் ஹிந்து சாம்ராட் சிங்கால் ஏற்கனவே சூளுரைத்து உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

பாரதத்தில் ஹிந்து சமயத்தை பல்கி, பெருக வைக்கும் முயற்சியில் தீவிர ஹிந்து தொண்டர்களான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தேச,சமய சேவையை ஐ.நா சபையே பல முறை பாராட்டி பத்திரங்கள் வழங்கி உள்ளது. அப்படிபட்ட கண்ணியமான தொண்டர்கள் பலரை கேரள மாநிலத்தில் வெட்டி வீழ்த்தி உள்ளனர் அங்கு காட்டாச்சி நடத்தி வரும் சீன ஏஜண்டுகள். அது மட்டுமா, திபெத் நாட்டில் ஹிந்துமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் புத்த மதத்தின் குருமார்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு உள்ளனர் சீனர்கள். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பல கோடி ஹிந்துக்களால் நம்பபடும் புத்தரின் சீடர்கள் மீது நடந்த தாக்குதல் 80 கோடி ஹிந்துக்களையும் சினம் கொள்ள வைத்துவிட்டது.

நமக்கு ஒரு துன்பம் விளைந்தால் நம் தாய் அதை பார்த்துகொண்டு சும்மா இருப்பார்களா. ஹிந்துக்களின் மீது நடத்த பட்ட கொடும்தாக்குதலை கண்டு சினம் கொண்ட பூமாதேவியின் கோப பெருமூச்சுதான் சீனாவில் நேற்று முந்தினம் வெளிபட்டு உள்ளது. சீன ஏஜண்டுகள் தொடர்ந்து ஹிந்துக்களை தாக்கி வந்தால் ஒலிம்பிக் போட்டி நடைபெரும் போது சீனாவில் பெரும் பூகம்பம் ஏற்படும் என்று வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியர் ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

சீன ஏஜண்டுகளே, பூமாதேவியின் மனத்தை குளிர்விக்க கேரளா முழுவதும் உடனடியாக விளக்கேற்றி வழிபாடு நடத்துங்கள்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க சீன ஏஜண்டுகள்.

Tuesday, May 06, 2008

நவீன வனவாசம்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வனவாசம் சென்றது உங்கள் அனைவருக்கும் தெரியும். நவீன லங்கேஸ்வரனாகிய மைனாரிட்டி ஆட்சி புரியும் தமிழக திம்மி நவீன வனவாசத்தை அரங்கேற்றி உள்ளார்.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் பல நூறு ஹிந்து குடும்பங்கள் ஒன்றாக வசித்து வந்தன. ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களின் பருப்பு வேகாது என்று திராவிட கலகங்கள் அங்கு பிரிவினையை ஏற்படுத்தின. ஒன்றாக இருந்த மக்கள் இடையே பெர்லின் சுவர் போல ஒரு சுவர் எழுப்பபட்டது. இதனால் ஹிந்துக்கள் தாங்க முடியாத துயரை அனுபவித்து வந்தனர். இந்த கொடுமையை அகற்றுமாறு தினமலர், துக்ளக், கல்கி போன்ற தேசிய சிந்தனை உடைய பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.

அந்த ஊரின் ஹிந்துக்களும் ஒன்றாக வசிப்போம் என்று உறுதிமொழி கொடுத்தனர். அதை கண்டு பொறுக்க முடியாத கம்யூனிஸ்டுகள் ஹிந்துக்கள் இடையே மீண்டும் பிளவை ஏற்படுத்தி விட்டனர். மைனாரிட்டி ஆட்சியும் அவர்களுக்கு துணை போனது. நேற்று போலீசாரின் துணையோடு சுமார் 200 ஹிந்துக்கள் ஊரில் இருந்து விரட்டி அடிக்கபட்டதாக செய்தி வந்துள்ளது. அவர்கள் அனைவரும் அருகே உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த வனவாச கொடுமையை அரங்கேற்றிய கம்யூனிஸ்டுகளையும், அதற்கு துணை போன மைனாரிட்டி ஆட்சியையும் அகற்ற 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

வாழ்க பாரதம். வந்தே மாதரம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za