அம்மான்னா சும்மாவா?

Thursday, October 30, 2008

FLASH NEWS : அம்மாவின் மீது கொலை முயற்சி

இலங்கை பிரச்சனையில் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் செயல்பாட்டினால் கலக்கம் அடைந்த தீவிரவாதிகள் அம்மாவின் உயிருக்கு ஊறு விளைவிக்க காத்திருக்கின்றனர் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். இன்று கூட ஒரு மிரட்டல் கடிதம்/பேக்ஸ் தாய்லாந்து/மலேசியா வழியாக போயஸ் தோட்டம் சென்று சேர்ந்துள்ளது.

அம்மாவின் பாதுகாப்பிற்கு நாட்டின் தலை சிறந்த கமாண்டோக்கள் அனுப்ப படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய பட உள்ளது. மேலும் போயஸ் தோட்டம் முழுவதும் அதிநவீன விமான எதிர்ப்பு பீரங்கிகள் அமைக்க படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இவ்வளவு பேராபத்து சூழ்ந்து இருந்த போதும் தமிழ் மக்களுக்கு தாயுள்ளத்தோடு சேவை புரிய அம்மா பீடு நடை போடுகின்றார். ஹிந்துஸ்தானத்தின் மூத்த தேசியவாதியும், மிக புகழ் பெற்ற ஆன்மீகவாதியும் ஆகிய தேவர் திருமகனாரின் குருபூஜையில் கலந்து கொள்ள அம்மா இன்று காலை புறப்பட்டு சென்றார்.

எப்போதும் பச்சை கம்பளம் விரிக்கபட்டு பல படிக்கட்டுகளை உடைய லேடர் பயன்படுத்தபடும். ஆனால் சதிகாரர்கள் முயற்சியால் மூன்று படிக்கட்டுகள் உடைய லேடரை அங்கே அமைத்து இருந்தனர். மேலும் படிக்கட்டுகளில் யார் ஏறினாலும் வழுக்கி விழும்படியாக சோப் கலவையும் ஊற்றபட்டு இருந்ததாக செய்திகள் வருகின்றன. அம்மா அவர்கள் அந்த லேடரில் ஏறிய போது தடுமாறி கீழே விழ இருந்தார்.

தெய்வாதீனமாக ஸ்ரீராமரின் அருளால் அம்மா இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்துவிட்டார். குரு பூஜைக்கு செல்ல வேண்டாம் என்று மற்றவர்கள் தடுத்த போதிலும் தன் உயிரை பற்றி கவலைபடாமல் ஒரு வீர தமிழச்சியாக மீண்டும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று விமானம் ஏறி மதுரைக்கு சென்றார்.

இந்த படுகொலை முயற்சிக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அம்மாவின் சுற்றுபிராயணங்களில் கூடும் கூட்டத்தினை கண்டு கலங்கிய மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் அவருக்கு உதவும் மத்திய ரோம ஆட்சியும்தான் இதற்கு காரணம் என்று மக்கள் அனைவரும் பேசிகொள்கின்றனர்.

இந்த கொலை முயற்சிக்கு பொறுப்பு ஏற்று உடனடியாக முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுமாறு மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு 80 கோடி ஹிந்துக்களும் ஈ-மெயில் அனுப்புங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

(நேற்று எழுதிய பதிவு தமிழ்மணத்தில் இணைக்க முடியாததால் இன்று வெளியிட படுகின்றது.)

Wednesday, October 29, 2008

இலங்கை பிரச்சனையும் பிராமணர்களும்

பிராமண சமுதாய மக்கள் நம் பாரத மாதாவின் மூத்த புதல்வர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் மிக சிறந்த அறிவாளிகள் ஆன யூத மக்களுக்கு சரிநிகர் சமானமாக விளங்குபவர்கள் அவர்கள். ஆனால் அந்த சமுதாயத்தினை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டிவிட்டனர். அதனால் பலன் பெற்றது யார்?. நிச்சயமாக பிராமணர்கள்தான். அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரை அவர்களின் ஆளுமை கொடி கட்டி பறக்கின்றது.

இலங்கையில் பல காலமாக இன மோதல்கள் நடைபெற்று வருகின்றது. இலங்கை பிரச்சனையை பற்றி பதிவெழுதும் பல பதிவர்கள் இதில் பிராமண சமுதாயத்தை இழுத்து விட்டு விடுகின்றனர். இந்த சமுதாயத்தின் மீது ஏன் இந்த காழ்ப்புணர்வு. இலங்கை பிரச்சனை சார்பில் பிராமண சமுதாயம் என்ன செய்தது என்று கேள்விகளும் எழுகின்றன.

இதற்கு பதில் கூறும் விதமாக கடந்த சில நாட்களிள் நடைபெற்ற நிகழ்வுகளை குறிப்பிடுகின்றேன்.

- ஹிந்துஸ்தானத்தின் ஒரே தேசிய கட்சியான பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஸ்ரீமான் இல.கணேசன் அவர்கள் மாநில மைனாரிட்டி ஆட்சியையும் மத்திய ரோம ஆட்சியையும் நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் ஒரு பிடி பிடித்து இருக்கின்றார்.

- தினமணி நாளிதழும் மாநில மைனாரிட்டி ஆட்சியையும் மத்திய ரோம ஆட்சியையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தலையங்கம் எழுதியுள்ளது.

- புலிகளின் கொ.ப.செவாகிய நெடுமாறனின் கட்டுரையை வெளியிட்டு இலங்கை பிரச்சனையில் தனக்கும் பங்குள்ளது என்று தினமணி நிரூபித்து உள்ளது.

- இலங்கை பிரச்சனையை தீர்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்குகின்றார் என்ற செய்தியை நம் தேசிய பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டு பல கோடி ரசிகர்களின் உள்ளத்தில் பால் வார்த்து இருக்கின்றது.

- இலங்கை தமிழர் பிரச்சனையில் கபட நாடகம் ஆடும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் முகமூடிகளை கிழித்து எறிந்துள்ளது துக்ளக் இதழ்.

- உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அறிக்கைகள் எல்லாம் அணுகுண்டுகள் போல மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியையும், மத்திய பொம்மையான சிங்கையும் தாக்கி வருகின்றன. அந்த அறிக்கையால் கவரப்பட்ட திராவிட நஞ்சு ஒன்று கூட இனி என் ஓட்டு அம்மாவிற்குதான் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார்.

- இவை எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கையின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படாமல் இந்த பிரச்சனையை தீர்க நம் ஹிந்துவின் ராம் அவர்கள் இரவு பகல் பாராமல் பெரும் பாடுபட்டு வருகின்றார். தினமும் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொடர்புகொண்டு தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றார்.

இவ்வளவு செய்தும் ஏன் பிராமணர்களை தொடர்ந்து கேள்வி கேட்கின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இலங்கை எப்போதும் பற்றி எரியத்தான் செய்யும். ஏன் என்றால் அது ஊழ்வினை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த படுபாதக செயலினால் ஏற்படும் பின்விளைவு இது.

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழகாக விளக்கி உள்ளார். மேல் விபரம் வேண்டுவோர் குள்ள ரஜினி, நெட்ட ரஜினி, கருப்பு ரஜினி, சிவப்பு ரஜினி, சாக்லட் பிரவுன் ரஜினி, ஒல்லி ரஜினி, குண்டு ரஜினி, சின்ன ரஜினி, பெரிய ரஜினி என்று அறியப்படும் பதிவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க பாரதம். வாழ்க ஸ்ரீலங்கா.

தரம் தாழ்ந்த குமுதம்

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான குமுதத்திற்கு என் கடுமையான கண்டங்கள். கேள்வி பதில் ஒன்றில் இந்த பதில் வந்து இருக்கின்றது.

"சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்."

புலிகளால் அம்மாவின் உயிருக்கு பேராபத்து என்று அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன. போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார். இப்படிபட்ட பேராபத்தில் இருக்கும் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி பிதற்றுகிறது குமுதம் இதழ்.

80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க குமுதம்.

Friday, October 03, 2008

குடிகார வியாதி

தமிழகத்தை சீரழிக்க பல திம்மிக்கள் முயன்று வருவது உங்களுக்கு தெரியும். புது அவதாரம் எடுத்த குடிகார திம்மி ஒன்று நாள்தோறும் ஏதாவது உளறி வருகின்றது. தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம் என்று ஒரு கட்சியை ஆரம்பித்து உள்ள வியாதி குடித்து விட்டு உளறிக்கொண்டு திரிகின்றது.

ஒரு தொகுதியில் ஜெயித்துவிட்டதால் ஏதோ பாரதம் முழுவதும் ஜெயித்ததுபோல் பினாத்தி கொண்டு திரிகின்றது. மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியை பிடிக்காத பத்திரிக்கைகளும், பதிவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த கயவனை ஆதரிக்கின்றனர். திருந்துங்கள் பதிவர்களே. உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் பொற்கால ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது இதுபோன்ற சிறு வியாதிகள் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த வியாதி ஒரு மருத்துவமனைக்கு போனதாம். கூட சென்ற அல்லக்கைகளை உள்ளே விடவில்லையாம். புகைபடகாரரை கூட அனுமதிக்க வில்லையாம். ஏண்டா அறிவு கெட்ட முண்டமே மருத்துவமனைக்கு செல்வது எதற்காக? நோயாளியை பார்பதற்காகவா அல்லது விளம்பரபடுத்தி கொள்ளவா? குடிகாரனே இது என்னா ரமணா சூட்டிங் என்று நினைத்து விட்டாயா?

மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி பார்த்தார், தங்கபாலு பார்த்தார் என்று கூச்சல் போடும் கபோதியே இந்த செய்தியை பார். "மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், வை.கோ, ரங்கசாமி, வாசன், தா.பாண்டியன், வீரமணி,சங்கரையா மற்றும் பலர் சென்று வரதராஜனை கண்டு உடல் நலம் விசாரித்து வந்துள்ளனர்." இவர்கள் எல்லாம் அல்லக்கை படைகளுடன் சென்று கலாட்டாவா செய்தனர்.

குடிகேடனே இப்படி கூத்தடித்தால் அடுத்த முறை இருக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போய்விடும்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za