அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 29, 2008

தரம் தாழ்ந்த குமுதம்

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான குமுதத்திற்கு என் கடுமையான கண்டங்கள். கேள்வி பதில் ஒன்றில் இந்த பதில் வந்து இருக்கின்றது.

"சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்."

புலிகளால் அம்மாவின் உயிருக்கு பேராபத்து என்று அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன. போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார். இப்படிபட்ட பேராபத்தில் இருக்கும் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி பிதற்றுகிறது குமுதம் இதழ்.

80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க குமுதம்.

22 Comments:

  • ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.

    By at 10/29/2008 7:04 AM  

  • வாங்கோ!! வாங்கோ!!!

    By at 10/29/2008 8:28 AM  

  • அரசு பதில்களை எல்லாம் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள தேவையில்லை .
    இவர் எல்லாம் எப்படித்தான் டாக்டருக்கு படித்தாரோ தெரியலையே ? !!

    By at 10/29/2008 8:59 AM  

  • g.ragavan அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலை நான். என்னை போய் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் கட்சிகாரன் என்று சொல்வது சரியா?.

    By at 10/29/2008 6:01 PM  

  • ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒரு சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா? இல்லை எதிர்பா?

    By at 10/29/2008 8:48 PM  

  • இலைக்காரரே, நான் நம் பாரம்பரிய பத்திரிகைகளான தினமலர் மற்றும் துக்ளக் மட்டுமே படிப்பேன்.

    By at 10/29/2008 9:59 PM  

  • நெத்தியடி!

    By at 10/29/2008 10:03 PM  

  • //
    வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா?
    //
    போஸ்னியா செர்பியா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா?
    அமேரிக்கா கியூபா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா?
    அவ்வளவு ஏன் ஸ்டார் வார் 1,2 ,3 etc.. இவற்றிலேல்லாம் இந்திய ராணுவம் தலையிட்டதா?
    இதையெல்லாம் குமுதம் வசதியாக மறந்தது ஏன்?

    By at 10/29/2008 10:07 PM  

  • //.... நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும்.
    //
    அம்மா ஏற்கனவே தமிழகத்து மக்கள் நலனுக்காக கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி போயஸ் தோட்டத்தில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். இதை புரிந்து கொள்ளாமல் சூப், திராட்சை ரசம் என்று கூறி அவரை மேலும் டயர்டு ஆக்கி ஐதராபாத் திராட்சை தோட்டத்திற்கு ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுவார்கள் போலுள்ளதே..

    By at 10/29/2008 10:18 PM  

  • //
    அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்."
    //

    அம்மா மனிதர் அல்ல, கருணை உள்ளம் கொண்ட அம்மா 80 கோடி இந்துக்கள் மனதில் வாழும் தெய்வம் என்பது குமுதம் இதழ் நடத்துபவர்களுக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா?

    By at 10/29/2008 10:21 PM  

  • //
    போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
    //
    இது மட்டுமா.. அமேரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் அணுக்குண்டு சோதனை நடத்தியதே போயஸ் தோட்டத்தில் குண்டு வீசத்தானே. அதையே அம்மாவும் அம்மாவின் தொண்டர்களும் சமாளித்து விட்டோம். இவர்களைப் பார்த்து குண்டுக்கே குண்டா என்று அம்மாவின் பக்தர்களான 80 கோடி இந்துக்களும் எள்ளி நகையாடுகின்றனர்.

    By at 10/29/2008 10:27 PM  

  • //
    மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார்.
    //
    சென்னையில் மேம்பாலங்கள் கட்டுவதே அதற்கடியில் புலிகள் தங்கள் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை பார்க் செய்யத்தான் என்றும் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளாரே!
    சந்திராயன் 1 அனுப்பியதிலும் இதுபோல் ஏதாவது சூழ்ச்சி இருக்கும். அதையும் விரைவில் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி கண்டுபிடித்து தெரிவிப்பர் என்று நம்புகிறோம்.

    By at 10/29/2008 10:36 PM  

  • //
    80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.
    //

    இலைக்காரரே கொரியரில் அனுப்ப வேண்டுமா? அல்லது தந்தி(?) வாயிலாக அனுப்ப வேண்டுமா??
    80 கோடி இந்துக்களும் குழப்பத்தில் உள்ளனர். தெளிவுபடுத்தவும்.

    By at 10/29/2008 10:38 PM  

  • //
    ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.

    By G.Ragavan
    //
    //ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒரு சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா? இல்லை எதிர்பா?

    By தீலிபன்
    //
    இலைக்காரரே என்ன பிதற்றல் இது? பாலபத்திர ஓணாண்டியை மிஞ்சி விடுவார்கள் போலுள்ளதே!!

    By at 10/29/2008 10:40 PM  

  • great அவர்களே,

    வருகைக்கும், பல பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    உங்களுக்கு எது வசதியோ அது போல் செய்யுங்கள். ஆக மொத்தம் நம் எதிர்ப்பை மைனாரிட்டி அரசுக்கும், மைனாரிட்டி அரசை ஆதரிக்கும் குமுதம் அரசுவிற்கும் தெரியபடுத்தவேண்டும்.

    By at 10/29/2008 10:44 PM  

  • //G.Ragavan said...
    ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.
    //

    repeatey!!!!

    By at 10/29/2008 11:50 PM  

  • //
    //G.Ragavan said...
    ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.
    //

    repeatey!!!!

    By லக்கிலுக்
    //
    லக்கிலுக் அவர்களே இதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

    By at 10/30/2008 12:29 AM  

  • இலைக்காரன் பதிவே வரவில்லை என்று 80 கோடி இந்துக்களும் தவமிருந்து வெண்டிக் கொண்டார்கள்.
    :)

    By at 10/30/2008 12:48 AM  

  • :-)))....

    By at 10/30/2008 1:40 AM  

  • இதுங்க எல்லாம் எங்க உருபட போகுதொ??

    By at 10/30/2008 10:42 PM  

  • Loosapa Nee!

    By at 3/19/2011 4:24 AM  

  • Loosapa Nee?

    By at 3/19/2011 4:26 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za