அம்மான்னா சும்மாவா?

Tuesday, August 12, 2008

கன்னடம் செம்மொழி ஆவதை தடுக்கும் கருணாநிதி

பாரதத்தின் தாய்மொழியான சமஸ்கிருதம் பெரும் வளங்களை உடையது என்பது அனைவருக்கும் தெரியும். கம்யூட்டருக்கு கூட இதுதான் உகந்த மொழி என்பது பல முறை நிரூபிக்கபட்டு உள்ளது. நம் மொழியின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடைந்த கிருத்துவ மிஷினரிகள் அதை அழிக்க பெரும் முயற்சிகளை எடுத்தனர். அவை யாவும் தோல்வி அடைந்தது.

அதை தொடர்ந்து திராவிட நஞ்சுக்கள் தமிழ்மொழியும் சிறந்தது என்பதை காட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசை மிரட்டி வாங்கிவிட்டனர். தமிழ் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தது? அதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை பல முறை தமிழர்களுக்கு எடுத்து சொல்லி உள்ளன.

பாரதத்தின் தென்பகுதியில் இருக்கும் கர்நாடகத்தில் உள்ள மக்கள் அவ்வப்போது அவர்களின் வட்டார மொழியான கன்னடத்தில் உரையாடுவர். கன்னட மொழியும் ஒரு சிறந்த மொழி. அம்மொழியின் சிறப்பும், வளமும் பெரும் புகழ் வாய்ந்தது. பாரதத்தின் சிறந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது கன்னட மொழியில் பேசி, எழுதி வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக சூப்பர் ஸ்டார் சமீபத்தில் எழுதிய கன்னட மொழி கடிதத்தை குறிப்பிடலாம்.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட கன்னட மொழி செம்மொழி அந்தஸ்தை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதை தடுக்கும் விதத்தில் மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து ஒரு வழக்கு தொடுக்கபட்டு இருக்கிறது. மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் எது நடந்தாலும் அதன் பின்னணியில் கருணாநிதியும் அவரின் குடும்பத்தினரும்தான் இருப்பர் என்பது அனைவருக்கும் தெரியும். மைனாரிட்டி தமிழக அரசை எதிர்த்து தென்னகத்து மோடியான ஸ்ரீமான் எதியூரப்பா போர்குரல் எழுப்பி உள்ளார்.

கன்னட மொழிக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் களம் இறங்குவாரா என்பது கோடானுகோடி கன்னடர்களின் எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க விரைவில் ரோபோ படம் வெளியாகும் தருணத்தில் நம் சூப்பர் ஸ்டார் ஒரு பெரும் உண்ணாவிரதத்தை நடத்த உள்ளார் எனும் செய்தி இப்போது கசிந்துள்ளது.

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் கொலைநகருக்கு திரும்பிய அம்மா விரைவில் இதை பற்றி ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று போயஸ் தோட்ட செய்திகள் அறிவிக்கின்றன. அம்மாவின் விரல் அசைவிற்காக ஒட்டு மொத்த கர்நாடகமும் ஆவலோடு காத்து இருக்கின்றது.

வாழ்க அம்மா. வாழ்க கன்னடம்.

25 Comments:

  • //பாரதத்தின் சிறந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது கன்னட மொழியில் பேசி, எழுதி வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக சூப்பர் ஸ்டார் சமீபத்தில் எழுதிய கன்னட மொழி கடிதத்தை குறிப்பிடலாம்//

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    By at 8/12/2008 12:38 AM  

  • //
    பாரதத்தின் தாய்மொழியான சமஸ்கிருதம் பெரும் வளங்களை உடையது என்பது அனைவருக்கும் தெரியும்.
    //
    சமஸ்கிருதத்தைப் பற்றி இவ்வளவு குறைத்துச் சொல்லியிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்!!!
    சமஸ்கிருதம் அகில உலகத்திற்கும் முதன் மொழி, தாய் மொழி!!!!!!!
    :P

    By at 8/12/2008 12:46 AM  

  • வாழ்க அம்மா. வாழ்க கன்னடம். வாழ்க சமஸ்கிருதம், வாழ்க தெலுங்கு, வாழ்க உருது!!!!!!

    By at 8/12/2008 12:49 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வாழ்க உருதுவா? ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கும் கரசேவகரின் வாயில் இருந்து இப்படி ஒரு வாழ்த்தா.

    By at 8/12/2008 12:51 AM  

  • பாரதத்தின் தாய்மொழியான சமஸ்கிருதம் பெரும் வளங்களை உடையது, இது மிக பெரும் காமெடி
    முதலில் இந்தியாவுக்கு தாய்மொழி என்பதே கிடையாது
    இரண்டவது சமஸ்கிருதம் பெரும் வளங்களை உடையது என்றால் ஏன் அழிந்தது?
    'தமிழ் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தது? அதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை பல முறை தமிழர்களுக்கு எடுத்து சொல்லி உள்ளன.'
    ஏன் சமஸ்கிருதம் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தா, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை தமிழர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதானே.
    தமிழகத்தில் பிறந்தால் மட்டும் ஒருவன் தமிழன் ஆகிவிட முடியாது, எவன் ஒருவன் தமிழ் மேல் அன்பும் பற்றும் வைத்திருக்கிறானோ அவன்தான் உண்மை தமிழன், எ-டு தமிழை இழிவாகவும்,சமஸ்கிருத்தையும், ஹிந்தியையும் பெருமையாக பேசும் பார்பனன் பிறப்பால் தமிழன்தான் அதற்காக அவன் உண்மை தமிழன் ஆகிவிடுவானா. இவ்வுளவு ஏன்டா தமிழன்னாகிய நீ,நா கும்பிடும் கோயில்களில் தமிழ் ஓலிக்கபடுகிறதா இல்லையே
    அன்று கோயிலுக்கு செல்வதை நிருத்தியவன்தான், தமிழ் கடவுள் முருகனுக்கே இந்த நிலமைதான், பார்பனனை என்று நம் தமிழ்நாட்டில் இருந்து துரத்துகிறோமோ அன்றுதான் தமிழ் கோயில்களில் ஓலிக்கபடும்
    வாழ்க தமிழ்!!!

    By at 8/12/2008 1:05 AM  

  • என்ன வோய்,

    இந்தியோட தந்தை உருது அப்படிங்கறாளே ?
    உண்மையா?

    By at 8/12/2008 1:22 AM  

  • //
    ஏன் சமஸ்கிருதம் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தா, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை தமிழர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதானே.
    //
    துரை அவர்களே!,
    இது என்ன அபாண்டம்...
    சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால்தானே இன்று இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்துள்ளது?

    கர்நாடகாவில் உள்ள அனைகள் அனைத்தும் நிரம்பியபின் உபரி நீர் காவிரியில் வருவதும் சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால் தானே??

    அவ்வளவு ஏன், இப்போது பெட்ரோல் விலை குறைந்து வருவது கூட உலகின் முதல்மொழியாம் சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால் தானே???

    இது போல் அபாண்டமாகப் பேசாதீர்கள்...

    By at 8/12/2008 1:54 AM  

  • இலைக்காரரே தமிழை உயர்த்துபவர்களுக்கு உணவு அதனால் கிடைப்பது இல்லை.ஆனால் பார்ப்பனர்களில் பாதி பேருக்கு அதனால் தானே உணவு கிடைக்கிறது.அதனால் உங்களுக்கு ஸமஸ்கிருதத்தை உயர்த்த வேன்டிய அவசியம் இருக்கிறது.தமிழரின் கண்கள் திரன்து பல காலம் ஆகிறது.இனிமேலும்உங்கள் துவேஸம் பலிக்காது

    By at 8/12/2008 2:11 AM  

  • இலைக்காரன் அவர்களே தங்கள் பதிவுகளில் இது மாஸ்டர் பீஸ்!!!
    கலக்கல்.
    நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பெரிய பதிவு போடுள்ளீர்கள். இதற்கு நிச்சயம் அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
    பாரதத்தின் உயர்ந்த மொழிகளில் ஒன்றான கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதை தடுப்பவர்களை பின்னாலிருந்து இயக்குவது கருணாநிதி குடும்பத்தார் தான் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு.
    வாழ்க அம்மா! வாழ்க சமஸ்கிருதம்!! வாழ்க கன்னடம்!!!

    By at 8/12/2008 2:25 AM  

  • இலைக்காரரே,
    எனது முந்தைய பின்னூட்டத்தில் "வீழ்க திம்மிகள்" விடுபட்டுவிட்டது. அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
    வீழ்க திம்மிகள்!!

    By at 8/12/2008 2:28 AM  

  • தாசி மவனே, உன்னோட தாய் மொழி உனக்கு தெரியாதா

    By at 8/12/2008 2:33 AM  

  • //
    கம்யூட்டருக்கு கூட இதுதான் உகந்த மொழி என்பது பல முறை நிரூபிக்கபட்டு உள்ளது.
    //

    ஆம் இலக்காரரே,
    அதனால் நம்மவர்கள் கம்பியூட்டரில் புரோகிராம் பண்ண இந்த மொழியை கற்றுக்கொள்ளாமல் C++, JAVA போன்ற மொழிகளை கற்றுக்கொள்வதை உடனடியாக தடுக்க வேண்டும். வேண்டுமானால் நம் தங்கத்தலைவி நிரந்தர மகராணியிடம் இதற்காக ஒரு அஸ்வமேத யாகம் செய்ய சொல்லலாம்.

    By at 8/12/2008 2:46 AM  

  • Sathiyanarayanan அவர்களே,

    வருகைக்கு நன்றி. வெளியிட்ட பின்னூட்டத்தை போலவே மூன்று பின்னூட்டங்கள் இருந்ததால் அதை வெளியிடவில்லை.

    By at 8/12/2008 2:48 AM  

  • இலைக்காரரே Sathiyanarayanan பின்னூட்டத்தை Delete செய்யவும்.

    By at 8/12/2008 2:53 AM  

  • By at 8/12/2008 3:05 AM  

  • //
    துரை அவர்களே!,
    இது என்ன அபாண்டம்...
    சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால்தானே இன்று இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்துள்ளது?

    கர்நாடகாவில் உள்ள அனைகள் அனைத்தும் நிரம்பியபின் உபரி நீர் காவிரியில் வருவதும் சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால் தானே??

    அவ்வளவு ஏன், இப்போது பெட்ரோல் விலை குறைந்து வருவது கூட உலகின் முதல்மொழியாம் சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால் தானே???

    இது போல் அபாண்டமாகப் பேசாதீர்கள்...
    //
    இலைக்காரரே,
    அதனால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. உலகப்போர் வராமல் பகவான் உலகைக் காக்கிறான். இன்னும் இது போல் எவ்வளவோ உள்ளது. அவற்றை சொல்ல ஒருநாள் போதாது.

    By at 8/12/2008 3:06 AM  

  • //
    பாரதத்தின் தென்பகுதியில் இருக்கும் கர்நாடகத்தில் உள்ள மக்கள் அவ்வப்போது அவர்களின் வட்டார மொழியான கன்னடத்தில் உரையாடுவர். கன்னட மொழியும் ஒரு சிறந்த மொழி. அம்மொழியின் சிறப்பும், வளமும் பெரும் புகழ் வாய்ந்தது. பாரதத்தின் சிறந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது கன்னட மொழியில் பேசி, எழுதி வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக சூப்பர் ஸ்டார் சமீபத்தில் எழுதிய கன்னட மொழி கடிதத்தை குறிப்பிடலாம்.

    //
    இலைக்காரரே இந்த ஒரு Paragraph -க்காகவே உங்களுக்கு வலையுலக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தரலாம்.
    வாழ்க இலைக்காரன்! வாழ்க அம்மா!! வாழ்க கன்னடம்!!! வாழ்க சூப்பர் ஸ்டார்!!!!

    By at 8/12/2008 3:31 AM  

  • Great அவர்களே,

    வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.

    குசேலரு படும் பாட்டை பார்த்த பிறகும் யாராவது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்புவரா. மேலும் நான் எப்போதும் அம்மாவின் புகழ் பாடும் ஒரு சிற்றிலை. இது போன்ற பட்டம் எல்லாம் வாங்கினால் என்னை கட்டம் கட்டி விடுவார்கள்.

    By at 8/12/2008 4:00 AM  

  • //
    குசேலரு படும் பாட்டை பார்த்த பிறகும் யாராவது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்புவரா.
    //
    சரியாகச் சொன்னீர்கள்.

    இலைக்காரரே தங்கள் பதிவு சூடான இடுகையில் வந்து விட்டதே!!!
    யாகத்தின் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றோ???

    By at 8/12/2008 4:57 AM  

  • எலக்காரரே,

    ரெண்டு எலைக்கு பதிலா மூணு எலை வைத்திருப்பதின் மர்மம் என்னவோ?

    By at 8/12/2008 5:00 AM  

  • //இலைக்காரரே தங்கள் பதிவு சூடான இடுகையில் வந்து விட்டதே!!!
    யாகத்தின் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றோ???//

    Great அவர்களே,

    அம்மான்னா சும்மாவா!!!

    By at 8/12/2008 6:40 AM  

  • indian அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அதிகார்வபூர்வ சின்னமான இரட்டை இலையை பயன்படுத்த அனுமதி வேண்டி தலைமை கழகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் ஒரு இலை உதிர்ந்துவிடும்.

    By at 8/12/2008 6:40 AM  

  • நல்ல காமெடி. எப்படிய்யா இப்படியெல்லாம் எழுதமுடியுது

    By at 8/12/2008 5:07 PM  

  • //
    ஏன் சமஸ்கிருதம் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தா, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை தமிழர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதானே.
    //

    //துரை அவர்களே!,
    இது என்ன அபாண்டம்...
    சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால்தானே இன்று இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்துள்ளது?
    //
    டேய் அறிவில்லாதவனே அது தமிழ் செம்மொழியானதால் ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது சமஸ்கிருதத்தால் அல்ல

    //
    கர்நாடகாவில் உள்ள அனைகள் அனைத்தும் நிரம்பியபின் உபரி நீர் காவிரியில் வருவதும் சமஸ்கிருதம் செம்மொழி ஆனதால் தானே??

    இது போல் அபாண்டமாகப் பேசாதீர்கள்...

    //

    அட மாங்காமடையா சமஸ்கிருதம் செம்மொழியானதால் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது?

    இந்த தமிழ் மொழியால்தான் உன் எண்ணங்களை சொல்லமுடிகிறது
    ஏன் உன் சமஸ்கிருதத்தை வைத்து எழுத வேண்டியதானே முடியாதுல, ஒரு மொழி உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதானே, உன் அம்மா உன் அப்பன் ஒருத்தனுடன்தான் உடல் உறவு வைத்தால் என்றால் தமிழ்மொழியை இழிவுபடுத்தி பேசாதே/எழுதாதே, உனக்கு ஒரு மனிதனை தனிப்பட்டமுறையில் விமர்சிக்கவோ/புகழவோ உரிமை இருக்கிறது ஆனால் ஒரு மொழியை அல்ல
    நீ பெருமையா பேசுற ஜெயலலிதாவே தன்னை தமிழச்சி என்றுதான் சொல்லுகிறாள்

    By at 8/13/2008 3:32 AM  

  • suberb appu... summa nachunu irunduchu...
    Vazha Tamil... Valarha Tamilaham..
    Tamil endhru sollada talai nimirndu nillada

    By at 8/30/2008 3:02 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za