அம்மான்னா சும்மாவா?

Thursday, March 15, 2007

தேசத்துரோகி No. 1

உலகிலேயே பல இன, பல மொழி மக்கள் ஒற்றுமையாக அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்து வரும் ஒரே நாடு நமது பாரதம் என்பது அனைவருக்கும் தெரியும். உலகப் போரின் காரணமாக ஐ.நா சபை என்ற ஸ்தாபனத்தை அமைக்கும் போது பாரத நாட்டின் பெருஞ் செல்வமான வேத சாஸ்திரங்களில் இருந்த அறிவுரைகளின் படிதான் அதன் கொள்கைகளை அமைத்தனர். இப்படி பாரதம் ஒரு வல்லரசாக இருப்பதை கண்டு பயந்த கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் நமது நாட்டில் இருக்கும் புல்லுருவிகளான திம்மிக்கள் மூலம் அவ்வப்போது ஏதாவது தொல்லைகளை ஏற்படுத்துவர்.

தமிழக மக்கள் கடவுளின் மொழியான சமஸ்கிரதத்தை அவமதித்ததின் மூலம் ஏற்பட்ட பாவத்தின் பலனாக ஒரு திம்மி இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டான். சரி, அது நமது ஊழ்வினை அனுபவிப்போம் என்று பார்த்தால், அவனது சேஷ்டைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அகில உலகமே போற்றிக் கொண்டாடும் நமது தேச ஒற்றுமையை கிண்டல் அடிக்கும் விதமாக ஒரு பதில் சொல்லி இருக்கின்றான் மைனாரிட்டி ஆட்சி புரியும் இந்த திம்மி.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஏற்க கர்நாடகா தயாராக இல்லை. தமிழ்த் திரைப்படங்களுக்குக் கூட அம்மாநிலத்தில் தடை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள கேரளா தயாராக இல்லை. சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்த போதிலும் அதையேற்க கேரளா தயாராக இல்லை. தமிழகத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க மேற்குவங்கம் தயாராக இல்லை. என்ன செய்யலாம்?

இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு "ஜே" போடலாம்.

இதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் கருணாநிதி என்பது அகில உலகத்திற்கே தெரியும். அனைத்து மக்களையும் அனுசரித்து போகும் பழக்கம் இல்லாத இந்த திம்மியால்தான் இந்த பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழகம் தவமிருந்து பெற்ற தங்கத் தலைவியாம் நம் அம்மாதான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை "ஜே" என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடுகின்றான் இந்த கயவன். "ஜே" என்ற எழுத்து அம்மாவைதான் குறிக்கும் என்பது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முதல் பிரிட்டானியா என்சைக்கிளோபீடியா வரை உறுதி செய்யப்பட்ட விஷயம் என்பதை அறியாத சிறுவனா இந்த திம்மி?

கருணாநிதியே உனக்கு ஒரு சவால். நீ உடனடியாக ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி தமிழகத்தின் நிரந்திர முதல்வரான எங்கள் அம்மாவை ஒரு நாள் ஆட்சியில் அமர்த்து. வேண்டுமானால் உள்துறை அமைச்சராக உன் மகனே இருந்து விட்டு போகட்டும். அம்மா ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று பார். காவிரி நீர் என்ன, கங்கை நீரையே குடங்களில் அடைத்து உன் குடும்பத்தின் தலையில் கட்டி அனுப்பி தமிழக மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைப்பார். அது மட்டுமா, அச்சுதானந்தன் பாதி கோட்டம் என்ன முழு கோட்டத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாலக்கோடு கோட்டம் முழுவதையும் நமக்கு அளிப்பார். அவரது சகாவான புத்ததேவ் கடல்சார் பல்கலைக்கழகம் என்ன ஹவுரா பாலத்தை வேண்டுமானாலும் கேளுங்கள் கழட்டி அனுப்பிவைக்கின்றோம் என்பார். இதை அனைத்தையும் செய்து காட்டும் ஆற்றல் பெற்றவர் நம் அம்மா ஒருவர்தான்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலர இந்துக்கள் அனைவரும் கெளபீனத்துடன் நிற்கும் நமது கார்த்திகேயனிடம் காவடி எடுத்து சென்று வேண்டுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

11 Comments:

  • ஏதேது, போகிற போக்கை பார்த்தால் இந்த முதலமைச்சரெல்லாம் உங்க கிட்ட பாடம் படிக்க வந்துடுவாங்க போலருக்கே!!!! அவிங்களுக்கு, இலவச முதியோர் வகுப்பு எடுத்து அதுக்கும் அம்மாகிட்ட சொல்லி இலவச சைக்கிள் ஏற்பாடு செய்வீங்களா....

    By at 3/15/2007 9:31 PM  

  • ஜயராமன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவின் அறிவிப்புகளை சரியாக படிக்கவில்லையா?. ஆட்சிக்கு வந்தால் கணினி கொடுப்பதாக அறிவித்தார்களே!

    By at 3/15/2007 9:56 PM  

  • அம்மா மட்டும் டெல்லியில் பிறந்திருந்தால் இந்தியாவின் பிரதமராக எப்போதோ ஆகியிருப்பார்.(நேருவை கைக்குள் போட்டுக்கொண்டு).
    அம்மாவுக்கு முன் இந்த திம்மி ஒரு டம்மி.

    By at 3/15/2007 10:13 PM  

  • ஜாலிஜம்பர் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தில் சிறு பிழை. நேருவின் காலம் சென்ற நூற்றாண்டு. அம்மாவின் புகழ் வரும் நூற்றாண்டுகளில் எல்லாம் பேசப்படும். அவருக்கு இருக்கும் தகுதிக்கும், திறமைக்கும் எங்கேயோ இருக்கவேண்டியவர். அவரின் அருமை இங்கே பலருக்கு தெரிவதில்லை என்பது வருந்தகூடிய ஒன்று.

    By at 3/15/2007 10:55 PM  

  • எனக்கென்னவோ இந்தப் பதிவு ஜெயலலிதா ஆதரவுப் பதிவு மாதிரி தோணலை. நீங்க உண்மையிலேயே இலைக்காரனான்னு சந்தேகமா இருக்கு.

    By at 3/15/2007 11:06 PM  

  • g. ragavan அவர்களே,

    வருகைக்கு நன்றி. அம்மாவின் புகழ் பாட வந்திருக்கும் ஒரு சிற்றிலை நான். தயவு செய்து என் மீது சந்தேகப்படாதீர்கள்.

    By at 3/15/2007 11:51 PM  

  • ரசித்து சிரித்தேன்
    சிரித்துப் படித்தேன்

    ஜெவை நல்லா நக்கல் பன்றீங்க மிஸ்டர் இலை.

    (பிகு:- ஏமாறாதவனை தூக்கியதும் ஜெயராமன் ஒரிஜினல் வறார் போல!)

    By at 3/16/2007 1:10 AM  

  • விடாதுகருப்பு அவர்களே,

    வருகைக்கு நன்றி. அம்மாவின் புகழ் பாடும் என் பதிவு உங்கள் திரா'விட' கண்களுக்கு நக்கலாக தெரிவது வியப்பில்லை.

    By at 3/16/2007 1:37 AM  

  • அம்மா வாழ்க...

    By at 3/16/2007 1:46 AM  

  • ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் சிற்றிலைதான் வெற்றிலையல்ல என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் மூன்று இலைகளை வைத்திருப்பதை பார்த்தால் இரட்டைஇலை பிடிக்காதது போல் உள்ளதே ?

    ஐயாம் கன்"ப்யூஸ்டு"...:-))))))))))

    By at 3/16/2007 1:49 AM  

  • pot"tea"kadai அவர்களே,

    தங்களின் ஆதரவிற்கு நன்றி.

    அம்மாவின் சின்னமான இரட்டை இலையை உபயோக படுத்துவதற்காக அனுமதி வேண்டி தோட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் படம் அப்டேட் செய்யப்படும்.

    By at 3/16/2007 2:25 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za