அம்மான்னா சும்மாவா?

Thursday, August 23, 2007

ஹிந்து மதத்தை அழிக்க

நினைக்கும் கயவர்களை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். ஹிந்துஸ்தான் என்று உலகத்தவர் அனைவரும் அழைக்கும் நாடு நம் பாரதம். பாரத மாதாவின் ஒரு புதல்வர் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பி.பி.ராவ், "ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர்' என்று சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் முன்பு வாதாடினார். மத்திய அரசு கொண்டு வந்த 27 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணை செய்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் பி.பி.ராவ் வாதிட்டதாவது: ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது. இவ்வாறு சீனியர் வக்கீல் ராவ் வாதிட்டார்.

இது நாள் வரை திம்மிக்கள்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படைந்த நம்மவர்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று இவர் சொல்லி உள்ளார். எனவே இனிமேல் நாம் நக்ஸல்களை ஆதரிப்போம்.

வாழ்க ஹிந்துஸ்தான். வீழ்க இந்த திம்மிக்கள்.

7 Comments:

  • நண்பரே!

    ஒன்றும் புரியவில்லையே!

    By at 8/23/2007 8:31 PM  

  • //இது நாள் வரை திம்மிக்கள்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படைந்த நம்மவர்தான் நக்ஸல்கள் ஆக மாறுகின்றனர் என்று இவர் சொல்லி உள்ளார். எனவே இனிமேல் நாம் நக்ஸல்களை ஆதரிப்போம்.

    //
    :-))))))))))))

    By at 8/23/2007 8:50 PM  

  • சிவபாலன் அவர்களே,
    வருகைக்கு நன்றி. ஒரு பெரியவர் உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு கூடாது என்பதற்காக அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்து இருக்கின்றார். அதை நான் இங்கே வெளியிட்டு உள்ளேன்.

    குழலி அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    By at 8/23/2007 9:39 PM  

  • ஹிஹிஹி.

    By at 8/23/2007 9:46 PM  

  • யாருய்யா அந்த தலகீழ யோசிக்கிற வக்கீலு? ஃபுள் அடிச்சிட்டு இப்டி அளவில்லாம அளந்துட்டு நம்மள எல்லாரையும் இப்டி அசத்திட்டு போய்யிருக்காறே!

    அறிவு கொழுந்து!

    மண்டு புள்ள தெரத்த பேல உட்டு பாக்கனும்னு சொல்லுவாங்களே! இதுதானா அது? நல்லாவே செய்ஞ்சி இருக்காருய்யா. நாத்தம் தாக்குபுடிக்க முடியல.

    வர்ரேன் சாமி!

    By at 8/23/2007 10:54 PM  

  • வாதாடிய வக்கீல

    கலக்கப் போவது யாரு இல்லேன்னா அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில கலந்துக்க சொல்லுங்க கண்டிப்பா முதல் பரிசு வாங்கிடுவாரு. . . .

    உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கு. . . .

    By at 8/24/2007 2:38 AM  

  • விடாதுகருப்பு அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    மாசிலா அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    வெங்கட்ராமன் அவர்களே,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    By at 8/24/2007 4:00 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za