அம்மான்னா சும்மாவா?

Thursday, May 03, 2007

ராமர் பாலம் - அம்மா

ராமபிரானின் புனித பாதம் பட்ட பாலத்தினை காப்பாற்ற அம்மா வெளியிட்டு இருக்கும் அறிக்கை.

நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்பதை தேசப்படத்தில் இன்றும் காணலாம்.

மிகப் பழமையான இந்த பாலம் பல யுகங்களாக இருந்து வருகிறது. உலகத்தின் புராதன சிலைகள், பொக்கிஷங்கள் என்று இப்படிப்பட்ட பழமையான சின்னங்களை உலக புராதன சின்னம் என்று வகைப்படுத்தி உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தான் இத்தகைய பழமை வாய்ந்த ராமர் பாலம் உள்ளது. வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. சொந்த பொருளாதார ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பழமையான புராதன சின்னத்தை அழிக்கக் கூடிய நெஞ்சழுத்தம், ஆணவம், மமதை, திமிர் ஆகியவை தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கமிஷன் பெற வேண்டும் என்ற சுயநலப் பேராசையில், போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ராமர் பாலத்தை தி.மு.க. கும்பல் இடிக்க முற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பாரதீய ஜனதாவும், மற்ற கட்சித் தலைவர்களும் பிற கட்சிகளும் பொது மக்களும் இவ்வகை செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி டி.ஆர்.பாலு பணத்தாசையால் நாசா ஆராய்ச்சி மையம் ராமர் பாலம் உள்ளது என்று உறுதிப்படுத்தியதை மறுக்கிறார். இவ்வகை பாலமே இல்லை என்று பொய் சொல்கிறார். இருப்பதையே இல்லை என்று இவ்வளவு பெரிய பொய்யை சொல்ல பாலுவுக்குத் தான் இவ்வளவு துணிச்சல் வரும் தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் இந்ததுணிச்சல் வராது.

இதோடு நில்லாமல் ராமர் பாலம் இல்லை என்று தான் சொன்னதை உண்மையாக்கிட வேண்டும் என்ற முயற்சியில், அரிய வரலாற்று ஆவணங்களை சேகரித்து வைத்துள்ள உலக பிரசித்தி பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திற்கு டி.ஆர்.பாலு 30-4-07 அன்று சென்று ராமர் பாலம் குறித்த வரலாற்று தகவல்களை அடியோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தொலைக் காட்சி மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் தெரிய
வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளையும் இது குறித்து டி.ஆர். பாலு மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இது மன்னிக்க முடியாத ஒரு கொடும் செயலாகும்.

மத்திய அமைச்சராக இருப்பவர் இது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டாலே அந்த நூலகத்து அதிகாரிகள் அது குறித்த எல்லா விவரங்களையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் காவல் துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக டி.ஆர். பாலு அந்த நூலகத்திற்கு சென்று சுமார் 4 மணி நேரம் இது குறித்து ஆலோசனை செய்து இருப்பதை பார்த்தால் இவர் விவரங்களை சேகரிக்க சென்றதாக தெரியவில்லை. இருக்கின்ற ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக தான் தெரிகிறது.

இதற்கு முன் டி.ஆர்.பாலு தன் வாழ்நாளில் இதுவரை எந்த நூலகத்திற்கும் சென்றதாக எந்த தகவலும் இல்லை. திடீரென்று முதன் முதலாக நூலகத்திற்குள் காலடி வைத்திருப்பது நல்ல காரியத்திற்காக இல்லை என்பது தெளிவு. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த நூலக புறக்கணிப்பு பழக்கத்தை தொடர்ந்து டி.ஆர்.பாலு கடை பிடிப்பது நல்லது. ஒரு சிலர் திடீரென்று சில நல்ல பழக்கத்தை ஆரம்பிப்பது கூட எவ்வளவு ஆபத்தானது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

இடிக்கப்பட்ட பாலத்தின் கற்கள் அக்வேரியஸ் என்ற கப்பலின் மூலம் ரகசியமாக எடுத்துச் செல்லும் காட்சிகள் தொலைக் காட்சிகள் மூலம் வெளியாகி உள்ளன. குடியரசுத் தலைவரும், பாரதப் பிரதமரும் உடனடியாக இதில் தலையிட்டு ராமர் பாலம் மேலும் இடிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை அ.தி. மு.க. எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

12 Comments:

  • அம்மா பேச்சுன்னாலே நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காதுங்கிறது இன்னோரு தபா புரூஃப் ஆயிடுச்சுங்க :)

    By at 5/03/2007 12:44 AM  

  • xavier அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அம்மா ஆக்ரோஷமாக, ஆணித்தரமாக அறிக்கை விட்டு இருப்பதை நகைச்சுவை என்று எப்படி சொல்லலாம்.

    By at 5/03/2007 12:51 AM  

  • அம்மாவின் அறிக்கைகள் பொதுவாக நீங்கள் எழுதும் பதிவுகளைப் போலவே இருக்கும்.

    சில நேரங்களில் நினைப்பேன். அம்மா தான் இலைக்காரன் என்ற பெயரில் வலைபதிகிறார்களோ என்று.

    By at 5/03/2007 1:20 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. அம்மாவின் புகழ் பாடிப்பாடி எனக்கும் அவரின் எழுத்து நடை வந்து இருக்கலாம்.

    By at 5/03/2007 2:08 AM  

  • //வருகைக்கு நன்றி. அம்மாவின் புகழ் பாடிப்பாடி எனக்கும் அவரின் எழுத்து நடை வந்து இருக்கலாம்.//

    உங்களைப் போலவே அம்மாவின் புகழைப் பாட நானும் ஆசைப்படுகிறேன்!

    By at 5/03/2007 2:27 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    கயவன் கருணாநிதியின் பூத் ஏஜெண்ட் ஆன நீங்கள் எப்படி அம்மாவின் புகழ் பாட முடியும். உங்கள் தவற்றை உணர்ந்து அம்மாவின் காலடியில் சரண் அடைந்தால், கழகத்தின் உறுப்பினர் அட்டை கிடைக்கும். அதன் பிறகு நீங்கள் அம்மாவின் புகழ் பாட ஆரம்பிக்கலாம்.

    By at 5/03/2007 2:51 AM  

  • //கயவன் கருணாநிதியின் பூத் ஏஜெண்ட் ஆன நீங்கள் எப்படி அம்மாவின் புகழ் பாட முடியும்.//

    என் தவறுகளை உணர்ந்துவிட்டேன். ஆதிபராசக்தி அம்மாவின் காலடியில் இனி விழுந்து கிடப்பேன். அம்மாவின் பூத் ஏஜெண்ட் ஆகவும் ஆசைப்படுகிறேன். அம்மா இந்த அப்பாவியை ஏற்றுக் கொள்வாரா?

    By at 5/03/2007 2:59 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    உண்மையிலேயே மனம் மாறிவிட்டீர்கள் எனில் உங்களுக்கு சாபவிமோசனம் கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. நீங்கள் மட்டும் தனியாக வந்தால் பயன் இல்லை. வெளிப்படையான நிர்வாகத்தை சென்னையில் திறம்பட நடத்திவரும் வணக்கத்திற்குரிய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் கூடவே அழைத்து வந்தால் எங்கள் தோட்டத்தின் கதவுகள் உடனே திறக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.

    By at 5/03/2007 6:04 AM  

  • தமிழகத்தை சுனாமியின் அழிவிலிருந்து காப்பாற்ற ராமர் கட்டிய பாலம் தான் ராமர் பாலம் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.இதைப் புரிந்து கொள்ளமுடியாத திம்மியிடமிருந்து அம்மா தான் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

    By at 5/03/2007 9:12 AM  

  • ஜாலிஜம்பர் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    வரலாற்றை திருத்த வேண்டாம். கயவன் கவர்ந்து சென்ற தன் மனைவியை காப்பாற்ற செல்லும் போது அமைத்த பாலம் இது. அணில் முதுகில் இருக்கும் மூன்று கோடுகளை பற்றி கேள்வி பட்டது உண்டா? பாலத்தினை திறந்த போது எடுத்த புகைபடங்களும், பாலத்தின் வரைபடங்களும் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் உள்ளதாக அறிகின்றேன். அந்த ஆதாரங்களைதான் அந்த முட்டாள் அழிக்க முயற்சி செய்து இருக்கின்றான்.

    By at 5/03/2007 6:53 PM  

  • இலை அவர்களே , திறப்பு விழா போட்டோவா?.அம்மா அவர்கள் உடனடியாக அதை வெளியிட வேண்டும்.அதன் பிறகாவது எதிரிகளின் கொட்டம் அடங்கட்டும்.

    By at 5/04/2007 1:26 AM  

  • ஜாலிஜம்பர் அவர்களே,

    இருந்த ஆதாரத்தைதான் "நெஞ்சழுத்தம், ஆணவம், மமதை, திமிர்" எல்லாம் உடைய பாலு அழித்துவிட்டாரே. மதிப்பிற்குரிய ஸ்ரீமான் கணேசனார் அவர்களும் இதை பற்றி அறிக்கை வெளியிட்டு உள்ளார். சரஸ்வதி மகால் அதிகாரிகளை பாலு மிரட்டி ஆதாரங்களை அழித்து விட்டதாக அவர் சொல்லியுள்ளார்.

    ஒரிஜினல் புகைப்படம் இல்லாமல் போனால் என்ன. பாரதத்தில் உள்ள திறன்மிக்க ஓவியர்கள் இதை ஓவியமாக வடித்து இருக்கின்றார்கள். அந்த ஆதாரம் போதுமே.

    By at 5/04/2007 7:12 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za