அம்மான்னா சும்மாவா?

Monday, September 24, 2007

பாரதமே .......

தட்ஸ்தமிழ் இணைய பக்கத்தில் படித்த ஒரு செய்தி ரத்தகண்ணீர் வடிக்க வைக்கின்றது.


சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதற்காக விழா எடுக்க நினைத்த கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் 100வது நாளில் மண் சோறு சாப்பிடுவதாக பல கோவில்களில் பிராத்தனை செய்துள்ளனர்.


அதன்படி கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் டிசி மதன், குபேரன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். ரஜியின் கட் அவுட்டிற்கு ஊதுபத்தி சூடம் காட்டி வழிபட்டனர். பெரிய மாலை அணிவித்தனர். கட்அவுட்டில் கால் படாதபடி ஏணி வைத்து ஏறி பால் அபிஷேகம் செய்தனர். ரஜினி மன்றத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கொடி அறிமுகம் செய்தனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.


இதன் உச்சகட்டமாக ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மண் சோறு சாப்பிட்டனர். மண் சோறு சாப்பிடுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.


பாரதமே ஸ்ரீராம சேது விஷயமாக கொந்தளித்து கொண்டு இருக்கும் போது இப்படியும் சில பிறவிகள். இப்படிபட்ட பிறவிகள் இருப்பதால்தான் ஸ்ரீராமர் இருந்தாரா என்று கேட்கும் நிலை உள்ளது. எனவே 80 கோடி இந்துக்களும் தம் குடும்பத்தாரை நல்வழிபடுத்த தினமும் 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவோம்.


ஜெய் ஸ்ரீராம்.

24 Comments:

  • பின்னூட்ட கயமை ஆதரவு

    By at 9/24/2007 11:24 PM  

  • :))

    பின்னூட்ட கயமைத்தனம் 2 !

    By at 9/25/2007 12:18 AM  

  • இரட்டை இலை காரரே!

    நீங்க முழு லூசுன்னா அவனுங்க அரை லூசு. இப்ப கேள்வியே என்ன என்றால், எந்த லூசுக்கு ஆதரவு தர்ரது என்பதுதான்.

    ;-D

    By at 9/25/2007 12:27 AM  

  • லக்கிலுக் அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    கோவி.கண்ணன் அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    By at 9/25/2007 1:27 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஸ்ரீராமருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் உங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அம்மாவிற்கு ஆதரவு அளித்தால் பாரத தேசமே மேன்மை அடையும்.

    By at 9/25/2007 1:28 AM  

  • //ஸ்ரீராமருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் உங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்...//
    இவரு என்ன மின் வாரியத்தில வேலை செய்யிறவரா? மின் இணைப்பு கொடுக்கும் தொழிலாளரா? இல்லை, விளக்கு தயாரிக்கும் தொழில் செய்பவரா? இவரு எந்த பலகலையில் படிச்சவரு?

    By at 9/25/2007 2:15 AM  

  • //அம்மாவிற்கு ஆதரவு அளித்தால் பாரத தேசமே மேன்மை அடையும்..//
    முதலில் உங்க அம்மாவை நல்ல உடற்பயிற்சி செய்து சரியான முறையில் சாப்பிட்டு உடலை கட்டுமானமா வெச்சிக்க சொல்லுங்க. பிறகு மத்தவங்களுக்கு அறிவுரை கொடுக்கரதை பாக்கலாம்.

    By at 9/25/2007 2:18 AM  

  • / விளக்கு தயாரிக்கும் தொழில் செய்பவரா? இவரு எந்த பலகலையில் படிச்சவரு?
    /

    விளக்கு பிடிப்பவரா என்றும் கேட்கலாமே?

    By at 9/25/2007 3:40 AM  

  • அஜூம்னஸ்ய சிரிராமன்ய ஜஜும்ய கி கிஜிம்னுய கிர்தஸ்பற.
    லோகாம்ய திர்பாம்ய டைபாம் நமோனம.

    இந்த மந்திரத்தை தினமும் ஒன்னுக்கு விடுவதற்கு முன்பு ஜெபிக்கவும்.

    ஸ்ரிராமன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.

    By at 9/25/2007 10:05 AM  

  • சுகுணா திவாகர் //விளக்கு பிடிப்பவரா என்றும் கேட்கலாமே?//

    சரியா கேட்டீங்க சுகுணா!

    ;-D

    By at 9/25/2007 11:38 AM  

  • மாசிலா, சுகுணாதிவாகர், ஞாயிறு அவர்களுக்கு,

    ஸ்ரீராமர் உங்களுக்கு அருளாசி வழங்க ஸ்பெஷலாக பிரார்த்திக்கின்றேன்.

    By at 9/25/2007 8:48 PM  

  • ராமனின் மறு அவதாரந்தான் சிவாஜி ராவ் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்.வெளியே சொல்லத் தயங்கு கிறார்கள்.அவர்களுக்கு இருப்பது ஒரு தலையும் ஒரே நாக்குந்தான்.வேதாந்தியிடம் மோதினால் எய்ட்ஸ் வரும் என்று பயப் படுகிறார்களாம்.

    By at 9/25/2007 10:22 PM  

  • thamizhan அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பல கோடி மக்களுக்கு தாயாக விளங்கும் அம்மா ஒருவர்தான் எங்கள் எல்லோருக்கும் இறைவனின் மறு உருவமாக தெரிகின்றார்.

    By at 9/25/2007 11:20 PM  

  • //விளக்கு பிடிப்பவரா என்றும் கேட்கலாமே?

    By சுகுணாதிவாகர் at 9/25/2007 3:40 AM
    //

    ஏனய்யா சுகுணா? எடுத்துக் கொடுக்கறீரோ?

    புயல்வேக பின்னூட்ட மொள்ளமாறித்தன ஆதரவு!

    By at 9/25/2007 11:51 PM  

  • /ஸ்ரீராமர் உங்களுக்கு அருளாசி வழங்க ஸ்பெஷலாக பிரார்த்திக்கின்றேன்/

    ஸ்பெஷலாகன்னா எப்படி? டிரஸ்ஸெல்லாம் அவிழ்த்திட்டு பிரார்த்திப்பீங்களோ?

    By at 9/26/2007 3:57 AM  

  • சுகுணாதிவாகர் அவர்களே,

    நீங்கள் சொல்லியபடி பிரார்த்தனை செய்ய நான் முற்றும் துறந்த முனிவர் இல்லை.

    ஸ்ரீராமா இந்த திம்மிகளிடம் இருந்து என்னை முதலில் காப்பாத்து.

    By at 9/26/2007 4:44 AM  

  • எக்ஸ்கியூஸ் மீ! ராமன் இருந்தால் சீதையும் இருப்பாளே! சீதையின் போன் நம்பர் ப்ளீஸ்!

    By at 9/26/2007 4:50 AM  

  • //எக்ஸ்கியூஸ் மீ! ராமன் இருந்தால் சீதையும் இருப்பாளே! சீதையின் போன் நம்பர் ப்ளீஸ்!//

    100

    ட்ரை பண்ணி பாருங்கள் வரகுணா அவர்களே!

    By at 9/27/2007 10:43 PM  

  • சுகுணாதிவாகர் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஸ்ரீசீதா தேவியின் போன் நம்பர் என்னிடம் இல்லை. ராமாயணத்தில் டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ஸ்ரீ வேதாந்தி அவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளேன். பதில் வந்ததும் உங்களிடம் தருகின்றேன்.

    By at 9/27/2007 11:44 PM  

  • //சுகுணாதிவாகர் a dit...
    எக்ஸ்கியூஸ் மீ! ராமன் இருந்தால் சீதையும் இருப்பாளே! சீதையின் போன் நம்பர் ப்ளீஸ்!//

    சீதாவோடைய போன் எனக்கு தெரியுமே! அதே போல ஊருக்கெல்லாம் தெரியுமே!

    சுகுணா உங்களுக்கு மட்டும் தெரியாம போனது ஆச்சரியமாத்தான் இருக்குது.

    அவளுடைய நம்பர் வேண்டுமா.

    இதே இங்கே பார்!
    இனிமே யாரு வேணும்னாலும் போட்டு தள்ளலாம். போனத்தான் சொன்னேன்!

    ;-D

    By at 9/28/2007 5:24 AM  

  • //ஸ்ரீசீதா தேவியின் போன் நம்பர் என்னிடம் இல்லை. ராமாயணத்தில் டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ஸ்ரீ வேதாந்தி அவர்களிடம் இதை பற்றி கேட்டுள்ளேன். பதில் வந்ததும் உங்களிடம் தருகின்றேன்.//

    அஞ்சாம் கிளாசு புள்ளைய கேட்டா கூட இத டக்குனு சொல்லிடும். இதுக்கு வேற டாக்டரு படிப்பா?

    By at 9/28/2007 5:29 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.

    By at 9/28/2007 6:05 AM  

  • பின்னூட்ட வேதாந்தி தனம்!

    By at 9/28/2007 7:14 AM  

  • இலைகாரரே,

    இந்த பதிவுல உங்க ஜோக்கர் தடியன் மூஞ்சிய போடாம எங்க மனசை கஷ்டபட வெச்சிட்டீங்க!

    எனது வன்மையான கண்டனங்கள்!!!

    By at 9/29/2007 12:15 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za