அம்மான்னா சும்மாவா?

Monday, December 01, 2008

ஹிந்துக்களை பிளவுபடுத்தும் கருணாநிதி

பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரே இனமாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்து கொண்டு இருக்கின்றோம். நம் முன்னோர்கள் பல கோடி ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒற்றுமையை கிருத்துவ மிஷினரிகள் ஜாதி என்ற கோடாரியை கொண்டு பிளந்தனர். திராவிட திம்மிகளும் அதையே பின் பற்றி இட ஒதுக்கீடு என்று கிருமியை நம்மிடையே புகுத்தி விட்டனர்.

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று நினைத்த கருணாநிதி தொடர்ந்து நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இப்போது அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடாம். இப்படி ஒரு சமூகம் இருப்பதே நம்மில் பலருக்கு தெரியாது. இல்லாத ஒன்றை கற்பனையாக உருவாக்கி ஹிந்துக்களை பிளவுபடுத்தும் கருணாநிதியை வன்மையாக கண்டிப்போம்.

தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவினை சரி செய்து ஒன்றினைக்கும் கருணாநிதி ஹிந்துக்களை மட்டும் ஏன் இப்படி பிரித்து பார்க்கின்றார் என்று 80 கோடி ஹிந்துக்களும் கேள்வி கேட்கின்றனர். இந்த கொடுமையான பிரிவினை செயலை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா மட்டுமே எதிர்கின்றார் என்பதையும் நினைவில் வையுங்கள். தேர்தல் நேரத்தில் பிரிவினையை வளர்க்கும் திராவிட திம்மிக்களுக்கு வாக்களிக்காமல் இருங்கள்.

வாழ்க ஹிந்து ஒற்றுமை. வாழ்க அம்மா.

7 Comments:

  • வாழ்க ஹிந்து ஒற்றுமை. வாழ்க அம்மா.

    By at 12/01/2008 6:34 PM  

  • //பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரே இனமாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்து கொண்டு இருக்கின்றோம்.//

    வரியில் பிழை இருக்கிறது.

    பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக, ஒரே இனமாக, 40,000சாதிகளுடன் அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை கேள்வியின்றி செய்து வந்து கொண்டு இருக்கின்றோம்.

    By at 12/01/2008 6:43 PM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஜாதி என்ற வார்த்தை ஹிந்து மதத்தில் கிடையவே கிடையாது. அது நம்மிடையே பிளவு உண்டாக்க கிருத்துவ மிஷினரிகளால் உருவாக்கபட்டது. மெக்காலே கல்வி திட்டதில் படித்த உங்களுக்கு அது ஆச்சர்யத்தினை அளிக்கலாம். நமது வேத சாஸ்திரங்களில் எங்காவது ஜாதி என்ற சொல் இருக்கின்றதா?

    By at 12/01/2008 7:18 PM  

  • அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சமத்துவ நாயகி தங்கத்தாரகை அம்மா வாழ்க.

    By at 12/01/2008 10:27 PM  

  • ஹிந்துக்களை பிளவு படித்தினால்
    "உ றி" ந்துக்களை என்று வரும், அப்படியா செய்தார் கொலைஞர் ?

    By at 12/02/2008 6:43 AM  

  • உண்மையை சொல்லுங்கள். நீங்கள் ஜெயலலிதாவை பகடி செய்கிரீர்களா? இல்லை உண்மையிலே அவருடைய ஆதரவாளரா?

    By at 12/04/2008 4:53 PM  

  • //பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரே இனமாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்து கொண்டு இருக்கின்றோம்.//
    யார் விதித்தார்கள் இந்த கடமைகளை என்பதில் உள்ள உண்மையை உணர்ந்து பார்த்திர்களா முதலில் ... இப்படி விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டது என்று ஏமாற்றியதே மூல காரணம் என்று ஒப்புகொள்ளும் தைரியம் உண்டா ?

    By at 12/17/2008 5:27 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za