அம்மான்னா சும்மாவா?

Sunday, October 21, 2007

இளம் ஹிந்து பிரியங்காவை விதவை ஆக்கிய சீன ஏஜண்டுகள்

பல லட்சம் வருடங்களாக பாரத மக்கள் ஒற்றுமையுடன் இருந்து வருவது சில வெளிநாடுகளுக்கு பிடிப்பதில்லை. ஹிந்துஸ்தானத்தை கூறு போட அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்கள் ஆண்டுதோறும் பாரதத்திற்கு பாய்கின்றது. அந்த பணத்தை வைத்துகொண்டு கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதிகளும், கம்யூனிஸ்டுகளும், திராவிட நஞ்சுக்களும் ஆங்காங்கே பிரச்சனைகளை கிளப்பி நாள்தோறும் ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். தினமும் பல ஹிந்துக்கள் இவர்களின் கொடுமையால் தங்கள் உயிரை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடத்தி வருகின்றனர். மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகம் போலவே அங்கும் ஹிந்துக்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. இளம் ஹிந்து பெண்கள் காதலிப்பதே பெரும் குற்றமாக அங்கே கருதப்படுகிறது. அதையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டால், அவர்கள் அநியாயமாக பழிவாங்க படுகின்றனர்.

கொல்கத்தா நகரில் வசிந்து வந்த ஒரு இளம் ஹிந்துவான பிரியங்கா காதல் வயப்பட்டார். ஒரு ஹிந்து பெண் காதலிக்கலாமா என்று அவரை சீன ஏஜண்டுகளின் கைகூலிகள் மிரட்டினர். அந்த எதிர்ப்புகளை மீறி தன் காதலனின் கரம் பிடித்தார். அதன் பிறகாவது வாழ விட்டார்களா பிரியங்காவை? அநியாயமாக அந்த இளம் ஹிந்துவை விதவை ஆக்கிவிட்டனர் கம்யூனிஸ்ட்டுகளின் அல்லக்கைகள். கைபிடித்த கணவன் படுகொலை செய்யபட்டதை கண்டு அலறினார் பிரியங்கா, துடித்தார், வேதனையில் மூழ்கினார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பித்து பிடித்தவர் போல் ஆனார்.

இறைவன் இந்த இழிசெயலை பார்த்து கொண்டு சும்மா இருப்பாரா?. சீன ஏஜண்டுகளின் அடக்குமுறையால் துவண்டு இருந்த ஹிந்து இளையர் துள்ளி எழுந்தனர். ஆங்காங்கே "ரங் தே பஸந்தி" பாணியில் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். நாள் தோறும் போராடும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடியது. அதை மறைக்க கம்யூனிஸ்டுகள் எதை எதையோ செய்து பார்த்தனர். ஹிந்து மக்கள் சக்தியின் முன் அரிவாள், சுத்தியல்கள் மண்டியிடும் நிலைக்கு தள்ளபட்டன.

ஹிந்து மக்களின் எழுச்சி நீதிமன்றத்தை எட்டியது. விரைந்து செயல்பட்ட நீதிமன்றம் கம்யூனிஸ்டுகளின் கீழ் இயங்கும் காவல் துறையினரால் இந்த ஹிந்து பெண்மணிக்கு நியாயம் கிடைகாது என்று அறிந்து கொண்டது. எனவே இந்த படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சீன ஏஜண்டுகள் இந்த அதிரடி செயலால் கதி கலங்கி நிற்கின்றனர். காரியத்தில் இறங்கிய சிபிஐ அணி துரித விசாரணை நடத்தி வருகின்றது. இந்த படுகொலையில் சம்பந்தபட்ட அல்லக்கைகள் உடனடியாக வேறு பதவிகளுக்கு மாற்றபட்டனர். முக்கிய நிகழ்வாக இளம் ஹிந்துவான பிரியங்காவின் காதல் கணவரின் மாமனாரை ஒரு குற்றவாளியாக சேர்த்து இருக்கின்றனர்.

சீன ஏஜண்டுகளால் விதவை ஆக்கபட்ட இளம் ஹிந்துவான பிரியங்காவிற்கு நியாயம் கிடைக்க 80 கோடி ஹிந்துக்களும் துர்கா தேவியிடம் வேண்டுவோம்.

ஜெய் துர்காதேவி. ஜெய் ஸ்ரீராம்.

21 Comments:

  • ஜெய் துர்காதேவி. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/21/2007 11:10 PM  

  • நீங்களாவது கிறித்துவ மெசினரி மொய்னோவின் மகளான ப்ரியங்காவை பற்றி எழுதுவதாவது என்று நினைத்தேன்.
    :)

    அடுத்து ஜெகதீசன் நீங்க வாங்க !

    By at 10/21/2007 11:15 PM  

  • 80கோடி இந்துக்களுக்காகப் பாடுபட்டுவரும் இலைக்காரனுக்கு ஆதரவளிப்பது ஒவ்வொரு இந்துவின் தார்மீகக் கடமை என்பதால் இந்தப் பதிவிற்கும் என் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வீழ்க சீன ஏஜெண்டுகள்.
    ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/21/2007 11:48 PM  

  • பின்னூட்ட திம்மித்தனம்!

    விலங்குகளின் மதம் எது? - ஆராய்ச்சிக் கட்டுரையை வாசிக்கத் தவறாதீர்!

    By at 10/21/2007 11:51 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.
    ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/22/2007 12:46 AM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அது மொய்னோ இல்லை. ரோம ராஜ்ஜியம் நடத்தும் மெய்னோ.

    By at 10/22/2007 12:47 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. கட்டுரையை வாசித்துவிட்டேன்.

    By at 10/22/2007 12:48 AM  

  • மதிப்பிற்குரிய இலைக்காரரே பாசமே! இரத்தத்தின் இரத்தமே! தயவு செய்து அம்மாவைப்பற்றி மட்டும் எழுதவும். திராவிர நாட்டில் வசிக்காத ஒருவரை நம்க்கு எதற்கு கவலை? அம்மா மிகவும் கவலையுடம் சோர்வடைந்த நிலையில் இருக்கிறார். இதை உடனடியாக கவனிக்கவும்.

    பிரியங்காவிற்கு அரிப்பெடுத்து தான் தேடிக்கொண்ட விணைகளை பற்றி நமக்கெதற்கு கவலை? நமது அம்மாவை பாருங்கள். தனிமையில் வாடும் அவரை போற்றுவோம். வணங்குவோம். அவர் ஒருவரே நம் அனைவருக்கு வெளிச்சம். விலக்கு!

    மத்தவர்களுக்கு விலக்கு பிடித்தே ஒளிமயமான இன்பத்திற்கு வழிவகை செய்துவரும் நம் பண்பாட்டு தேவதையை கண்டுகொள்வேம், வாருங்கள்.

    அம்மாவே தெய்வம்!

    By at 10/22/2007 1:07 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 10/22/2007 1:32 AM  

  • யோவ்!

    விளக்குக்கு பெரிய ள'வா?
    சின்ன ல'வா?

    ச்சீ!

    இந்த தமிள் லேங்குவேஜில பெரிய பேஜாரா கீதுபா!

    ;-D

    By at 10/22/2007 1:45 AM  

  • //விளக்குக்கு பெரிய ள'வா?
    சின்ன ல'வா?//

    sutti kaattiyadharku nandri

    By at 10/22/2007 2:26 AM  

  • கீழ்ப்பாக்கம்
    ஏர்வாடி
    ஆண்டி மடம்

    இதுல நீங்க எங்க இருக்கீங்க.. .. .. ?

    "பிரியங்காவை விதவை ஆக்கிய சீன ஏஜண்டுகள்"

    இந்த மாதிரி எல்லாம் தலைப்பு வச்சா ஆகாதா.

    By at 10/22/2007 2:42 AM  

  • //
    நீங்களாவது கிறித்துவ மெசினரி மொய்னோவின் மகளான ப்ரியங்காவை பற்றி எழுதுவதாவது என்று நினைத்தேன்.
    :)

    அடுத்து ஜெகதீசன் நீங்க வாங்க !
    //

    கோவி.கண்ணன் அவர்களே, இந்தப் பதிவுக்கு உங்களுக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்!
    :)

    By at 10/22/2007 2:46 AM  

  • இலைக்காரன் அவர்களே,
    நீங்கள் லக்கிலுக் இல்லை என்பதற்கான அசைக்கமுடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை என் பதிவில் வெளியிட உங்கள் அனுமதி தேவை...
    நன்றி.

    By at 10/22/2007 7:05 PM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்டம் எனக்கு விளங்கவில்லை.

    By at 10/22/2007 8:54 PM  

  • வெங்கட்ராமன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் எப்படி நடத்தபடுகின்றார்கள் என்பதை சுட்டிகாட்ட கடமைபட்டுள்ளேன். அதனால்தான் இந்த தலைப்பு.

    By at 10/22/2007 8:55 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    ஆதரவிற்கு நன்றி. அப்படி என்ன அசைக்கமுடியாத ஆதாரம்? முடிந்தால் இங்கே பின்னூட்டமாக இடுங்கள். நான் படித்துவிட்டு சொல்கின்றேன்.

    By at 10/22/2007 8:55 PM  

  • சீன ஏஜெண்டுகள், நீதிமன்றத்திலிருந்து தப்பிக்க சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை வைத்து கட்டை பஞ்சாயத்து செய்து(சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சனைக்கு செய்தது போல்) பிரச்சனையை தீர்க்க பார்க்கிறார்கள். நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரச்சனையை அன்னையிடம் கொண்டு செல்ல வேண்டும்

    By at 10/22/2007 9:45 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    சீன ஏஜண்டுகள் ஹிந்துக்களின் எழுச்சியால் கலங்கி இருக்கின்றனர். அதனால் விசாரணையும் தீர்ப்பும் நியாயமாக இருக்கும் என்று நம்புவோம்.

    By at 10/22/2007 11:14 PM  

  • பிரியங்கா நியூஸை இது வரை பார்த்ததில்லை. சேனல் மாற்றிவிடுவேன். உங்களின் பதிவால் தெரிந்து கொண்டேன். மேலும் 'உண்மையை' தெரிந்து கொள்ள அடுத்த முறை கட்டாயம் பார்க்கிறேன் ;)

    By at 10/23/2007 11:33 AM  

  • சீனு அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பிரியங்கா விஷயத்தில் சில பத்திரிக்கைகள் தவறாக எழுதுகின்றன.ஆகையால் "உண்மைகளை" சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

    By at 10/23/2007 10:06 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za