அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 10, 2007

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

ஹிந்துஸ்தானத்தின் நீதி பரிபாலிக்கும் தன்மை உலக புகழ் வாய்ந்தது. தீர்ப்புகள் எப்படி வழங்கபட வேண்டும் என்று அகில உலகிற்கும் அறிவுரை கூறும் உன்னத நூல் மனு நீதி சாஸ்திரம் ஆகும். நமது புராணங்களிலும், வேதங்களிலும் நம் நீதிமான்கள் நீதி வழங்கும் காட்சிகள் பல இடம் பெற்று உள்ளன.

பாரதத்தில் பல் வகையான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் தலையாய அமைப்பு உச்ச நீதிமன்றம் என்று சொல்லபடும் சுப்ரீம் கோர்ட் ஆகும். இந்த நீதிமன்றத்தில் பணி ஆற்ற நமது நாட்டின் தலை சிறந்த நீதிபதிகளை அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கத்தில் கிருத்துவ மிஷினரிகள் புகுத்திய ஜாதி என்ற ஒன்றை புகுத்த வேண்டும் என்று தமிழக திம்மிக்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடமை தவறாதவர்கள். தம் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மீது குற்றம் சாட்டபடினும் அதை விசாரித்து நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கும் பெருமகன்கள். தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞர் சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறியதற்காக சமீபத்தில் கடுமையாக கண்டிக்கபட்டார். ஸ்ரீமான் அரவிந்தன் அவர்கள் கூட இதை பற்றி ஒரு அழகான கருத்துபடம் வெளியிட்டு உள்ளார். வழக்கம் போல திம்மிக்கள் இந்த கண்டனத்தை வேறு விதமாக சித்தரிக்கின்றனர். கருணாநிதி சூத்திரன், அதனால்தான் நீதிபதி இப்படி கருத்து சொல்லி உள்ளார் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சில பதிவர்கள் உடனே சட்டை, பூணூல், நெளியுது, தெரியுது என்று வாய்க்கு வந்தபடி எழுதி வருகின்றனர். இந்த பதிவுகள் எல்லாம் பிரதி எடுக்கபட்டு ஸ்ரீமான் டிராபிக் ராமசாமியிடம் சேர்க்கபட்டு விட்டது. விரைவில் அவர் இந்த பதிவர்களின் மீது வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார் என்று கழுகார் தகவல் அளித்து உள்ளார்.

இந்த திம்மிக்களின் வாயை அடைக்க ஒரு செய்தி வந்துள்ளது. இதை சற்று படியுங்கள்.

மாயாவதியை விசாரிக்கும் படி கவர்னருக்கு உத்தரவிட எங்களுக்கு அதிகார வரம்பு இல்லை. இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை சி.பி.ஐ.,யின் விசாரணை கோர்ட்டில் தாக்கல் செய்யட்டும். மாயாவதி மீது குற்றம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை கோர்ட் முடிவு செய்யட்டும்' என்று கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. (நன்றி - தினமலர்)


செல்வி மாயாவதியும் ஒரு மாநில முதல்வர். அவர் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்தவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட ஒருவர் மீது வந்த வழக்கை தீர விசாரித்து கவர்னருக்கு உத்தரவிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்த நீதிபதிகள் சொல்லி விட்டார்கள். எனவே நீதி "ஜாதி" பார்த்து வருவது இல்லை என்பது நன்றாக விளங்குகிறது. இனிமேலாவது இந்த திம்மிக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பார்கள் என நம்புவோம்.

வாழ்க ஸ்ரீமான் அகர்வால். ஜெய் ஸ்ரீராம்.

20 Comments:

  • ஜெய் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்

    By at 10/10/2007 11:51 PM  

  • நான் முதலில் இட்ட பின்னூட்டத்தையும் இந்தப் பின்னூட்டத்தையும் பின்னூட்டக் கயமை ஆதரவாக எடுத்துக் கொள்ளவும்.

    வாழ்க ஸ்ரீமான் அகர்வால். ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/10/2007 11:56 PM  

  • feedback forgery

    By at 10/11/2007 12:18 AM  

  • எனது முதல் இரண்டு பின்னூட்டக் கயமைகளை ஏற்றுக் கொண்டதுபோல இந்தப் பின்னூட்டக் கயமையையும், இதற்கு அடுத்து நான் இடவிருக்கும் பல பின்னூட்டக் கயமைகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    By at 10/11/2007 12:39 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், பின்னூட்ட ஆதரவிற்கும் நன்றி. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/11/2007 1:15 AM  

  • முரளி கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/11/2007 1:15 AM  

  • //
    இலைக்காரன் said...

    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், பின்னூட்ட ஆதரவிற்கும் நன்றி. ஜெய் ஸ்ரீராம்.
    //

    எனக்கு நன்றி தெரிவித்தமைக்கு நன்றி.

    அம்மா நாமம் வாழ்க!!

    By at 10/11/2007 1:22 AM  

  • அகர்வால் பவன் சார்பாக ஒரு பின்னூட்டக் கயமையை இங்கே போட சொன்னார்கள்..

    "பின்னூட்ட கயமை"

    By at 10/11/2007 2:34 AM  

  • ஆரியபவன் சார்பாகவும் ஒரு பின்னூட்ட கயமை

    By at 10/11/2007 2:34 AM  

  • லக்கி லுக் அவர்களே,

    அம்மாவின் புகழ் பாடும் எங்கள் பதிவிற்கு தாங்கள் தரும் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி!!!!!!

    ஜெய் ஸ்ரீராம்!!!!!!

    By at 10/11/2007 7:25 AM  

  • லக்கிலுக் அவர்கள் இலைக்காரனுக்குத் தரும் தொடர் ஆதரவைப் பாராட்டும் வகையில், வரவிருக்கும் குஜராத் சட்டசபைத் தேர்தலில்
    அகில இந்திய அ.தி.மு.கழகத்தின் பூத் ஏஜென்ட்டாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நியமித்துள்ளார்கள்.
    லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    By at 10/11/2007 8:26 PM  

  • இனி தீர்ப்புகள் கருட புராணத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்

    By at 10/11/2007 10:18 PM  

  • நீங்கள் கூறும் உண்மை புரியாமல் சில திராவிட திம்மிகள் வேறு தவறான வதந்திகளை பரப்புகின்றன்ர்.
    மாயாவதி கடந்த தேர்தலில் உயர் சாதியினர்க்கு அதிக சீட்டு கொடுத்து உயர் சாதி-தலித் கூட்டணி ஏற்படுத்தியதால் தான் இந்த தீர்ப்பு என்கின்றனர்.

    By at 10/11/2007 11:36 PM  

  • ;)))))))))))))))))

    By at 10/11/2007 11:37 PM  

  • இலைக்காரன் சார்பாக ஒரு பின்னூட்ட கயமை

    By at 10/12/2007 3:07 AM  

  • //
    செந்தழல் ரவி said...

    ;)))))))))))))))))
    //
    செந்தழல் ரவி அவர்களே,
    இலைக்காரன் பதிவிற்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    By at 10/12/2007 3:09 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

    By at 10/12/2007 9:04 PM  

  • சதுக்கபூதம் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 10/12/2007 9:05 PM  

  • செந்தழல் ரவி அவர்களே,

    வருகைக்கு நன்றி. உடல் நலம் பூரணமாக தேறிவிட்டது என்பது உங்களின் பதிவுகளை பார்த்தால் தெரிகின்றது.

    By at 10/12/2007 9:05 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், பின்னூட்ட கயமைதனங்களுக்கும் மிக்க நன்றி.

    By at 10/12/2007 9:06 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za