அம்மான்னா சும்மாவா?

Wednesday, July 19, 2006

மகாத்மாவை மறைக்கும் மதிமூடர்

நமது புண்ணிய பூமியை கிருத்துவரிடம் இருந்து மீட்க பெரும் பாடுபட்டவர் ஸ்ரீமான் மகாத்மா காந்தி அவர்கள். அவர் நினைவை போற்றும் விதமாக அவரின் திருவுருவ சிலையை அங்காங்கே எழுப்பி அதை அனுதினமும் வணங்கும் பழக்கம் பாரதத்தாயின் புதல்வர்களுக்கு உண்டு. மதராஸ் நகரில் முக்கிய கேந்திரமான மெரீனா கடற்கரையில் அண்ணலுக்கு ஒரு பெரும் சிலை நிறுவப்பட்டது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

தற்போது அண்ணலின் சிலையை மறைத்து வேறு ஒரு புது சிலை எழுப்பப்படுகிறது. இந்த சிலை எழுப்பப்பட்டால் அண்ணலின் சிலையை யாராலும் பார்க்கமுடியாத நிலை ஏற்படும். சினிமாவில் கொள்ளைக்காரன் வேடம் ஏற்று முஸ்லிம்களிடம் ஒரு பட்டம் வாங்கியவருக்கு சிலையாம். யாருக்கு சிலை வைக்கவேண்டும் என்று ஒரு வறைமுறை இல்லாமல் போய்விட்டது நாட்டில்.

இந்த சிலை எழுப்பப்பட்டால் கடற்கரை சாலையில் யாரும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். இதே போன்று நெரிசல் ஏற்பட்டு பல கோடி ரூபாய்கள் தினமும் பாழானதால்தான் கண்ணகி சிலையை அம்மா அகற்றினார். அது உங்கள் நினைவில் இருக்கும் என நம்புகிறேன்.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார் ஒரு தியாகி. நல்ல நீதி நமக்கு கிடைக்கும் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை அவரவர் இடத்தில் இருந்து வழிபடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

10 Comments:

  • நண்பர்களே பிளாக்கரில் ஏற்றிய படம் தெரியவில்லை. உங்களின் உதவி இந்த சிற்றிலைக்கு தேவை.

    நன்றி.

    By at 7/20/2006 1:28 AM  

  • சுத்த பேத்தல் இந்த பதிவு!

    By at 7/20/2006 1:54 AM  

  • கிறித்தவர்களை விரட்ட காந்தி? வெள்ளைக்காரனிடம் சேவை செய்து பணம் பதவி சேர்த்த ஆரியத்தை யார் விரட்டுவதாம்?

    அப்படியே அட்டைக்கத்தி வீரன் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு எழுப்பிய சிலைகளும் அது தரும் இடைஞ்சல்களையும் எழுதுங்க இரட்டை யஇலைக்காரரே. ஆரியகண்ணில் பார்த்தால் திராவிடம் எல்லாம் இழிவாகத்தான் தெரியும். இது இனத்தின் குற்றம். இதை DNA testing முறைகளில் கூட தெரிவது கடினம் தான். இப்படிப் பதிவுகள் தேவையா?

    By at 7/20/2006 2:51 AM  

  • எம்.ஜி.ஆருக்கே சிலை வைக்கும் பொழுது, சிவாஜிக்கு சிலை வைக்கலாம் தப்பில்லை. சிவாஜியும் கலையுலக சக்கரவர்த்தி தான். (இன்று தினமணியில் வந்துள்ள கார்ட்டூன் பார்க்கவும்).

    //சுத்த பேத்தல் இந்த பதிவு! //
    மிக சரி ஜோ.

    By at 7/20/2006 3:24 AM  

  • //நமது புண்ணிய பூமியை கிருத்துவரிடம் இருந்து மீட்க பெரும் பாடுபட்டவர் ஸ்ரீமான் மகாத்மா காந்தி அவர்கள்//

    அய்யோ.. அய்யய்யோ!

    ஏங்க. நெஜமாவே சீரியஸா இந்தப் பதிவு போட்ருக்கீங்களா? இல்லாட்டி கிச்சுகிச்சு மூட்டவா?

    என்னைப் பொருத்தவரை முக்குக்கு முக்கு சிலைகளை வைப்பதை மொத்தமாகத் தடை செய்து, ஒரு காட்சியகத்தை ஏற்படுத்தி அங்கே வரிசையாகச் சிலைகளை நிறுவி நல்ல முறையில் பராமரித்தால் நம் நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் அமைதியாகச் சென்று தகவல்களை அறிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

    மழை வெயில் தூசு காக்கை எச்சம் மூக்குச் சளி எச்சில் போன்ற தினப்படி அவமானங்களிலிருந்து சிலைகளையும் சிலையாக வடிக்கப் பட்டவர்களின் மானத்தையும் காக்கலாம்.

    மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் போலவோ, மதுரை ஆயிரங்கால் மண்டபம் போலவோ விஸ்தாரமான இடத்தில் சிலைகளை அழகாக நிறுவி வைத்தால் எல்லாருக்கும் மரியாதை!

    இல்லாவிட்டால் அரசியல் கட்சிகள் ரத்தம் வரச் சொறிந்து கொள்ளத்தான் தற்போதைய நிகழ்வுகள் உதவும்!

    By at 7/20/2006 6:33 AM  

  • // இந்த சிலை எழுப்பப்பட்டால் அண்ணலின் சிலையை யாராலும் பார்க்கமுடியாத நிலை ஏற்படும். சினிமாவில் கொள்ளைக்காரன் வேடம் ஏற்று முஸ்லிம்களிடம் ஒரு பட்டம் வாங்கியவருக்கு சிலையாம். யாருக்கு சிலை வைக்கவேண்டும் என்று ஒரு வறைமுறை இல்லாமல் போய்விட்டது நாட்டில்.

    இந்த சிலை எழுப்பப்பட்டால் கடற்கரை சாலையில் யாரும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். இதே போன்று நெரிசல் ஏற்பட்டு பல கோடி ரூபாய்கள் தினமும் பாழானதால்தான் கண்ணகி சிலையை அம்மா அகற்றினார்.//

    உளறுதல் என்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை

    By at 7/21/2006 12:38 AM  

  • //இல்லாவிட்டால் அரசியல் கட்சிகள் ரத்தம் வரச் சொறிந்து கொள்ளத்தான் தற்போதைய நிகழ்வுகள் உதவும்! //

    சுந்தர்,

    இப்படி கூட நடந்திருக்கு, நடக்கிறது, நடக்கும்....

    நீ சொரிஞ்சப்போ எவ்வளவு ரத்தம் வந்தது அப்ப நாங்க கேட்டப்போ பதில் சொன்னியா?

    நாங்க இப்ப தான் சொரிய ஆரம்பிச்சிருக்கோம், கேள்வி கேக்க வெயிட் பண்ணு.

    அதுவும் இல்லாம நாம சொரியறத பத்தி மட்டும் பேசாத, நாம மக்கள சொரிஞ்சு அவங்களுக்கும் ரத்தம் வர வெப்போம், அதுக்கு ரெண்டு பேரும் கூட்டுணி சேந்து ஏதாவது செய்வோம்.

    By at 7/21/2006 1:06 AM  

  • நன்மனம்.

    //அதுவும் இல்லாம நாம சொரியறத பத்தி மட்டும் பேசாத, நாம மக்கள சொரிஞ்சு அவங்களுக்கும் ரத்தம் வர வெப்போம், அதுக்கு ரெண்டு பேரும் கூட்டுணி சேந்து ஏதாவது செய்வோம்.//

    அட ஏன் ஸார் வயித்தெரிச்சலைக் கெளப்புறீங்க.

    மக்களையும் உணர்வற்ற ஜடச் சிலைகளாய் பாவித்துக் கொண்டு இந்த அரசியல் வியாதிகள் செய்யும் கருமாந்திரங்களை இன்னும் எவ்வளவு நாள்தான் சகித்துக்கொள்ள வேண்டியிருக்குமோ?

    By at 7/21/2006 3:29 PM  

  • நண்பர்களே,

    நான் இந்த பதிவை இட்டதும் சிலர் கோபம் கொண்டு கருத்து சொன்னீர்கள். தயவு செய்து பாரம்பரிய ஏடான கல்கியின் தலையங்கத்தை பாருங்கள்.

    http://www.kalkiweekly.com/thisweekissue/page1.asp

    சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் மற்றும் அண்ணலின் சிலையின் தோற்றத்தை பாதிக்கும் விதமாகவும் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறது. இதுவும் பேத்தல் என்று சொல்ல முடியுமா?

    By at 7/23/2006 2:13 AM  

  • தமிழ்மணத்தை மகிழ்விக்க வந்த இலையே நீர் வாழ்க. நின் கொற்றம் ஓங்குக. வாழ்க அம்மா புகழ்!!

    ஹி!!! ஹி!!!

    By at 9/05/2006 9:32 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za