அம்மான்னா சும்மாவா?

Tuesday, June 13, 2006

இந்தி கட்டாய பாடமாக்கப்படும்

விரைவில் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூடி தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட இருப்பதாக பட்சி செய்தி சொல்லியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என நமது செய்தியாளர் தோண்டி எடுத்த விபரம்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாக சமீபத்தில் ஸ்டாலின் மீது கத்தியால் குத்த முயன்றதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அதை தடுத்துவிட்டார். எனினும் அவர் நமது தேசிய மொழியான ஹிந்தியில் உதவிக்கு அழைத்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. அவர் ஏதோ ஹிந்தி பாட்டு பாடுவதாக அனைவரும் நினைத்துவிட்டனர்.

பல தலைமுறைகள் ஹிந்தி படிக்கமுடியாமல் போனதற்கு காரணமான கருணாநிதி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதை பற்றி நமது நிருபர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். ஏராளமானவர்கள் இதை நல்ல முடிவு என்றனர்.
(தாம்பரம் ஆனாபானா) இதன் மூலம் தமிழர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
(மைலாப்பூர் மனாவேனா) இந்த அறிவிப்பின் மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைப்பது சுலபம்.
(வடசென்னை பனாலனா) இனிமேல் வட இந்திய பெண்களிடம் நன்றாக கடலை போடலாம்.

1 Comments:

  • இதைப் படிச்சி விட்டு சிரிக்கணுமா?

    By at 6/20/2006 7:43 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za