அம்மான்னா சும்மாவா?

Tuesday, July 11, 2006

மும்பாய் குண்டுவெடிப்பு

நேற்று மும்பாயில் தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் 200 பேர் பலியாகி உள்ளனர். முதலில் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் மோட்ச தீபம் ஏற்றுவோம்.

இதற்கு முழு காரணம் வாடிகன் உத்தரவுப்படி திம்மித்துவ ஆட்சி புரியும் காங்கிரசே. நமது ராம ராஜ்யத்தில் ரோம ராஜ்யம் அமைக்க சோனியா செயல்படுவது அனைவரும் அறிந்த விஷயம். ஸ்ரீமான் மன்மோகனை சுதந்திரமாக செயல்பட அவர் அனுமதிப்பதில்லை.

ஸ்ரீமான் மன்மோகன் இந்த விஷயத்தில் சோனியாவின் பேச்சை கேட்காமல் ராம ராஜ்யம் அமைக்க பெரும் பாடுபடும் ஸ்ரீமான் வாஜ்பாய் அவர்களின் ஆலோசனைபடி நடக்கவேண்டும்.

உதாரணத்திற்கு முகமதிய தீவிரவாதிகளை அடியோடு அழித்த பாகிஸ்தான் அதிபர் ஜனாப் முஷரப்பை புதுதில்லிக்கு அழைத்து அறுசுவை விருந்து படைக்கலாம்.

இல்லையென்றால் கார்கில் போரினைப்போல ஏராளமான முகமதிய தீவிரவாதிகளை நாட்டின் உள்ளே அனுமதித்து, அவர்கள் பக்காவான பதுங்கு குழிகள் அமைக்கும்வரை காத்திருந்து பிறகு சில ஆயிரம் போர் வீரர்களை பலி கொடுத்து பெரு வெற்றி பெற்றது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் இரும்பு மனிதர் போல பாரதத்தின் சிறையில் வாடும் உடல் மெலிந்த சமாதான புறாக்களை தனி விமானத்தின் மூலம் சில நாடுகளுக்கு உல்லாச பயணம் செல்ல அனுமதிக்கலாம்.

இவைகளை செயல்படுத்த முடியாவிட்டால் நாட்டில் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ஒரே தலைவரான அம்மாவிடம் ஒரு மாதம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்துபாருங்கள். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது தனது சகோதரனை தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் பொடா மூலம் சிறையில் இட்டவர். மேலும் புளி கேட்டு கடையில் தகராறு செய்த பள்ளி மாணவர்களையும் பொடாவில் தள்ளினார். அப்படி செய்ததால்தான் தமிழகம் அமைதிபூங்காவாய் திகழ்ந்தது.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

1 Comments:

  • அய்யா

    சுத்தமாக குளப்பிவிட்டீர்கள்..... எனக்கு புரிந்துகொள்ளமுடியவில்லை..

    By at 7/11/2006 8:30 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za