"எல்லாமே இலவசம்" என்று திமுகவின் அறிக்கையை பற்றி பாரதத்தின் ஒரே நடுநிலை நாளேடான நம் தினமலர் தெரிவித்துள்ளது. வலைபதிவர்களாகிய நாம் அனைவரும் எப்போதும் இலவசத்திற்கு எதிரானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே நாம் அனைவரும் ஒன்றினைந்து இலவச மன்னனை தோற்கடிக்க சபதம் எடுப்போம்.
உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா எப்போதும் அனைவரும் உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆவார். அதனால்தான் அவருக்கு பல கோடி ரூபாய் சொத்து இருந்த போதும் நமக்கு எல்லாம் தாயுள்ளத்தோடு நல்லாட்சி புரிந்து அதன் மூலம் கிடைக்க பெற்ற ஒரு ரூபாயில் வாழ்ந்து காட்டியவர்.
எனவே 80 கோடி ஹிந்துக்களும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத் தமிழரும் நம் ஈழத்தாயை ஆட்சி கட்டிலில் அமர்த்துவோமாக.
வாழ்க அம்மா. வாழ்க பாரதம்.
இப்போ அம்மாவும் இலவசம் அறிவிச்சிருக்காங்களே என்னா பண்ணபோறீங்க மக்கா?
ReplyDelete